<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> பொன்விழி, அன்னூர். </strong>.<p><span style="color: #ff6600"><strong>''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?'' </strong></span></p>.<p>''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''</p>.<p><strong>எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?'' </strong></span></p>.<p>'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''</p>.<p><strong>அ.யாழினி பர்வதம், சென்னை-78. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?'' </strong></span></p>.<p> ''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''</p>.<p><strong>எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?'' </strong></span></p>.<p> ''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.</p>.<p>இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''</p>.<p><strong>பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> '' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?'' </strong></span></p>.<p> ''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''</p>.<p><strong>ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?'' </strong></span></p>.<p> ''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''</p>.<p><strong>எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!'' </strong></span></p>.<p> '' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்<br /> எறும்புகளை உண்பதில்லை<br /> இறந்த பின், சிங்கத்தை<br /> எறும்புகள் உண்பதுண்டு!’ ''</p>.<p><strong>சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?'' </strong></span></p>.<p> ''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''</p>.<p><strong>என்.குமார், தஞ்சாவூர்-8. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?'' </strong></span></p>.<p> ''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''</p>.<p><strong>லீலா ராம், தக்கலை. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?'' </strong></span></p>.<p> ''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''</p>.<p><strong>ப.தங்கமணி, சூசைபாளையம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?'' </strong></span></p>.<p> ''எனினும்.''</p>.<p><strong>பொன்விழி, அன்னூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?'' </strong></span></p>.<p> ''அப்பா - அண்ணன்!''</p>.<p><strong>சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?'' </strong></span></p>.<p> ''நட்புதான்!''</p>.<p><strong>சிவக்குமார், திண்டுக்கல். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?'' </strong></span></p>.<p> ''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''</p>.<p><strong>பாரதி, சேலம்-9. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?'' </strong></span></p>.<p> ''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''</p>.<p><strong>எஸ்.சந்தோஷ், சென்னை-75. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!' </strong></span></p>.<p>'</p>.<p>'இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''</p>.<p><strong>ப.தங்கமணி, சூசைபாளையம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?'' </strong></span></p>.<p> ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!</p>.<p>வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''</p>.<p><strong>எம்.மாலதி, நன்னிலம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' </strong></span></p>.<p> ''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''</p>.<p><strong>சூரியகுமார், திருப்பூர்-4. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?'' </strong></span></p>.<p> ''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''</p>.<p><strong>சா.தேவதாஸ், திருச்சி-2. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?'' </strong></span></p>.<p> ''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''</p>.<p><strong>வி.பவானி, திருவாரூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> '' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?'' </strong></span></p>.<p> ''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''</p>.<p><strong>ஆர்.பார்த்திபன், சென்னை-91. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?'' </strong></span></p>.<p> ''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''</p>.<p><strong>வி.மலர், செங்கல்பட்டு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?'' </strong></span></p>.<p> ''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''</p>.<p><strong>ப.ராகவன், சேலம்-4. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.) </strong></span></p>.<p> ''இருக்கலாம்!''</p>.<p><strong>கிருத்திகா அரசு, தஞ்சாவூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?'' </strong></span></p>.<p> ''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''</p>.<p><strong>கி.சம்பத், வேதாரண்யம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?'' </strong></span></p>.<p> ''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''</p>.<p><strong>எம்.கே.ராஜா, மன்னார்குடி. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''காமம் இல்லா காதல் சாத்தியமா?'' </strong></span></p>.<p> ''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''</p>.<p><strong>எஸ்.ராதாமணி, ராமநாதபுரம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?'' </strong></span></p>.<p> ''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''</p>.<p><span style="color: #ff0000"><span style="font-size: small"><strong>-அடுத்த வாரம்... </strong></span></span></p>.<p> ''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''</p>.<p> ''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''</p>.<p><span style="color: #ff6600"><strong>-கலக்கல் பதில்கள் தொடர்கின்றன...</strong></span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> பொன்விழி, அன்னூர். </strong>.<p><span style="color: #ff6600"><strong>''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?'' </strong></span></p>.<p>''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''</p>.<p><strong>எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?'' </strong></span></p>.<p>'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''</p>.<p><strong>அ.யாழினி பர்வதம், சென்னை-78. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?'' </strong></span></p>.<p> ''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''</p>.<p><strong>எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?'' </strong></span></p>.<p> ''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.</p>.<p>இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''</p>.<p><strong>பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> '' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?'' </strong></span></p>.<p> ''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''</p>.<p><strong>ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?'' </strong></span></p>.<p> ''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''</p>.<p><strong>எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!'' </strong></span></p>.<p> '' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்<br /> எறும்புகளை உண்பதில்லை<br /> இறந்த பின், சிங்கத்தை<br /> எறும்புகள் உண்பதுண்டு!’ ''</p>.<p><strong>சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?'' </strong></span></p>.<p> ''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''</p>.<p><strong>என்.குமார், தஞ்சாவூர்-8. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?'' </strong></span></p>.<p> ''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''</p>.<p><strong>லீலா ராம், தக்கலை. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?'' </strong></span></p>.<p> ''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''</p>.<p><strong>ப.தங்கமணி, சூசைபாளையம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?'' </strong></span></p>.<p> ''எனினும்.''</p>.<p><strong>பொன்விழி, அன்னூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?'' </strong></span></p>.<p> ''அப்பா - அண்ணன்!''</p>.<p><strong>சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?'' </strong></span></p>.<p> ''நட்புதான்!''</p>.<p><strong>சிவக்குமார், திண்டுக்கல். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?'' </strong></span></p>.<p> ''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''</p>.<p><strong>பாரதி, சேலம்-9. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?'' </strong></span></p>.<p> ''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''</p>.<p><strong>எஸ்.சந்தோஷ், சென்னை-75. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!' </strong></span></p>.<p>'</p>.<p>'இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''</p>.<p><strong>ப.தங்கமணி, சூசைபாளையம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?'' </strong></span></p>.<p> ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!</p>.<p>வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''</p>.<p><strong>எம்.மாலதி, நன்னிலம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' </strong></span></p>.<p> ''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''</p>.<p><strong>சூரியகுமார், திருப்பூர்-4. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?'' </strong></span></p>.<p> ''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''</p>.<p><strong>சா.தேவதாஸ், திருச்சி-2. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?'' </strong></span></p>.<p> ''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''</p>.<p><strong>வி.பவானி, திருவாரூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> '' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?'' </strong></span></p>.<p> ''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''</p>.<p><strong>ஆர்.பார்த்திபன், சென்னை-91. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?'' </strong></span></p>.<p> ''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''</p>.<p><strong>வி.மலர், செங்கல்பட்டு. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?'' </strong></span></p>.<p> ''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''</p>.<p><strong>ப.ராகவன், சேலம்-4. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.) </strong></span></p>.<p> ''இருக்கலாம்!''</p>.<p><strong>கிருத்திகா அரசு, தஞ்சாவூர். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?'' </strong></span></p>.<p> ''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''</p>.<p><strong>கி.சம்பத், வேதாரண்யம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?'' </strong></span></p>.<p> ''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''</p>.<p><strong>எம்.கே.ராஜா, மன்னார்குடி. </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''காமம் இல்லா காதல் சாத்தியமா?'' </strong></span></p>.<p> ''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''</p>.<p><strong>எஸ்.ராதாமணி, ராமநாதபுரம். </strong></p>.<p><span style="color: #ff6600"><strong> ''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?'' </strong></span></p>.<p> ''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''</p>.<p><span style="color: #ff0000"><span style="font-size: small"><strong>-அடுத்த வாரம்... </strong></span></span></p>.<p> ''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''</p>.<p> ''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''</p>.<p><span style="color: #ff6600"><strong>-கலக்கல் பதில்கள் தொடர்கின்றன...</strong></span></p>