
சென்னை: நடிகர் கருணாஸ் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள அவரது வீட்டை பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில், அக்கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருணாஸை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள். ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள், கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள்.
##~~## |
