<p><strong>த</strong>னித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் உருவாக்கியிருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார். </p>.<p>எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், `அரசுகளின் ஒன்றியம்' (Union of States) என்கிறது. இந்தியை `தேசிய மொழி' (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் `அலுவல் மொழி' என்று குறிப்பிடுகிறது.</p>.<p>1956-ல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு, பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான `மொழிப் பாதுகாப்பு’ என்பதைச் சிதைக்கும் வகையிலேயே 1965-ம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. </p>.<p>அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.</p>.<p>ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைப்பிடித்துவரும் `இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்’, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார்மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான `இந்திய மொழிகள் வாரம்’தான் கடைப்பிடிக்க வேண்டும்.</p>.<p>இந்திமொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரைத் தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்துபோனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்! </p>.<p>இந்திய ஆட்சியாளர்கள் இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருதத் திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்துவருவதைப் புரிந்துகொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித்திணிப்பு எதிர்ப்பையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!</p>
<p><strong>த</strong>னித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் உருவாக்கியிருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார். </p>.<p>எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், `அரசுகளின் ஒன்றியம்' (Union of States) என்கிறது. இந்தியை `தேசிய மொழி' (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் `அலுவல் மொழி' என்று குறிப்பிடுகிறது.</p>.<p>1956-ல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு, பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான `மொழிப் பாதுகாப்பு’ என்பதைச் சிதைக்கும் வகையிலேயே 1965-ம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. </p>.<p>அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.</p>.<p>ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைப்பிடித்துவரும் `இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்’, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார்மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான `இந்திய மொழிகள் வாரம்’தான் கடைப்பிடிக்க வேண்டும்.</p>.<p>இந்திமொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரைத் தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்துபோனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்! </p>.<p>இந்திய ஆட்சியாளர்கள் இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருதத் திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்துவருவதைப் புரிந்துகொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித்திணிப்பு எதிர்ப்பையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!</p>