<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>கோ</strong>லிவுட்டில் இப்போது பரபரப்பாக ஓடுவது, நடிகர் சங்கத்தின் அதிரடி ஆக்ஷன் படம்தான். சென்னை, அபிபுல்லா சாலையில் தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக 18 கிரவுண்ட் நிலம் இருக்கிறது. நடிகர் சங்கத் தலைவராக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தபோது வாங்கப்பட்டது. அதற்குப் பிறகு, சிவாஜி கணேசன் சங்கத் தலைவரான நேரத்தில் சங்கத்துக்கு ஓர் அலுவலகம் கட்டப்பட்டது. </p>.<p>கடந்த சில வருடங்களாகவே, அந்த இடத்தில் சங்கத் துக்குப் பெரிய அளவில் கட்டடம் கட்ட வேண்டும் என்று நடிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தபடி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் போட்ட ஓர் ஒப்பந்தம், பல்வேறு அதிரடிகளைக் கிளப்பி இருக்கிறது.</p>.<p>தென் இந்திய நடிகர் சங்கம் மற்றும் சத்யம் தியேட் டர்ஸ் குழுமம் ஆகியோருக்கு இடையில், 'நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தில் எட்டு மாடிக்கு ஷாப்பிங் மால், தியேட்டர்கள் கட்டுவது’ என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு அதே கட்டடத்தில் அலுவலகம் மற்றும் ஹால் தரவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் உண்டு. இதற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அனுமதியும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கம் அமைந்துள்ள அபிபுல்லா சாலை குடியிருப்புவாசிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக... நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தி யிலும் புகைச்சல்.</p>.<p>ஏரியாவாசிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 'நாங்கள் குடி இருக்கும் பகுதியில் வித்யோதயா பள்ளி, பாலமந்திர் அனாதை இல்லம், தனியார் மருத்துவமனை போன்றவை உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கே கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தை இடித்துவிட்டு, எட்டு மாடியில் தியேட்டர் மற்றும் வணிக வளாகம் கட்டப் படுகிறது. குறுகலான அந்தச் சாலையில் அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவது ஆபத்து. இதனால் அங்கு வசிக்கும் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். எனவே, இந்த விவகாரத்தில் சி.எம்.டி.ஏ. தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி 'முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக நடிகர் சங்க அவசர செயற்குழு கூடியது. அப்போது, நடிகர் சங்கம் போட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக, உறுப்பினர்கள் இடையே திடீரென கண்டனக் குரல்கள் எழும்ப... சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் பெரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.</p>.<p>என்ன பிரச்னை? என்று செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''சங்கத்துக்குப் புதிய கட்டடம் தேவை என்றால், கலைநிகழ்ச்சி, நன்கொடை வசூலித்து நாமே கட்டுவதுதான் சிறந்தது. 'தங்கத் தட்டில் தேங்காய் வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்’ என்று நடிகர் சங்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் எப்போதோ சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. ஆரம்பத்தில், தியேட்டர் வந்தால் சந்தோஷம் என்று நினைத்த எங்களுக்கே, இப்போது அந்த ஒப்பந்தம் தவறாகப் பயன்படுமோ என்ற ஐயம் எழுகிறது. அதைத்தான் அன்று நடந்த கூட்டத்தில் பிரதிபலித்தோம். நியமன உறுப்பினரான பூச்சி முருகன், 'நம்முடைய உரிமைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிடக் கூடாது. எனவே இந்த நடைமுறையைக் கண்காணிக்க மூத்த நடிகர் சோ தலைமையில், சிவக்குமார், ராஜேஷ் உள்ளிட் டவர்கள் அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்று கூட்டத்தில் பேசினார். ஒப்பந்த நகலை செயற்குழு உறுப்பினர்களிடம் காண்பிக்கவும் மறுக்கிறார்கள். அதை மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன? 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு லீஸுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து அந்த இடம் நடிகர் சங்கதுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பொறுப்பில் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் எதிர்பார்த்து சத்யம் தியேட்டருக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல் வருகிறது. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு சங்கமே அங்கு கட்டடம் கட்ட முயற்சிக்க வேண்டும். அலுவலகம் தவிர திருமண மண்டபம், மருத்துவமனை என உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கலைவாணர் உருவாக்கியதை சரத்குமார் அழித்துவிடக் கூடாது'' என்றார்கள்.</p>.<p>இந்த சலசலப்புகள் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கருத்துக் கேட்டபோது, ''இந்த ஒப்பந்தத்தை பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் நிறைவேற்றினோம். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீதிமன்றத்தில் முறைப்படி எதிர்கொள்வோம். மற்றபடி இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் நலனுக்கானதுதான். இதில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயமும் இல்லை... இதில் அரசியலும் இல்லை'' என்று மறுத்தார்.</p>.<p>ஆனால்... இந்த விவகாரம் அவ்வளவு சுலபத்தில் அடங்காது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது!</p>.<p>- <strong>தி.கோபிவிஜய் </strong></p>.<p>படம்: சொ.பாலசுப்ரமணியன்</p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>கோ</strong>லிவுட்டில் இப்போது பரபரப்பாக ஓடுவது, நடிகர் சங்கத்தின் அதிரடி ஆக்ஷன் படம்தான். சென்னை, அபிபுல்லா சாலையில் தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக 18 கிரவுண்ட் நிலம் இருக்கிறது. நடிகர் சங்கத் தலைவராக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தபோது வாங்கப்பட்டது. அதற்குப் பிறகு, சிவாஜி கணேசன் சங்கத் தலைவரான நேரத்தில் சங்கத்துக்கு ஓர் அலுவலகம் கட்டப்பட்டது. </p>.<p>கடந்த சில வருடங்களாகவே, அந்த இடத்தில் சங்கத் துக்குப் பெரிய அளவில் கட்டடம் கட்ட வேண்டும் என்று நடிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தபடி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் போட்ட ஓர் ஒப்பந்தம், பல்வேறு அதிரடிகளைக் கிளப்பி இருக்கிறது.</p>.<p>தென் இந்திய நடிகர் சங்கம் மற்றும் சத்யம் தியேட் டர்ஸ் குழுமம் ஆகியோருக்கு இடையில், 'நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தில் எட்டு மாடிக்கு ஷாப்பிங் மால், தியேட்டர்கள் கட்டுவது’ என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு அதே கட்டடத்தில் அலுவலகம் மற்றும் ஹால் தரவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் உண்டு. இதற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அனுமதியும் வாங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கம் அமைந்துள்ள அபிபுல்லா சாலை குடியிருப்புவாசிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக... நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தி யிலும் புகைச்சல்.</p>.<p>ஏரியாவாசிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 'நாங்கள் குடி இருக்கும் பகுதியில் வித்யோதயா பள்ளி, பாலமந்திர் அனாதை இல்லம், தனியார் மருத்துவமனை போன்றவை உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கே கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சங்க அலுவலகம் இருந்த இடத்தை இடித்துவிட்டு, எட்டு மாடியில் தியேட்டர் மற்றும் வணிக வளாகம் கட்டப் படுகிறது. குறுகலான அந்தச் சாலையில் அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவது ஆபத்து. இதனால் அங்கு வசிக்கும் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிவரும். எனவே, இந்த விவகாரத்தில் சி.எம்.டி.ஏ. தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி 'முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக நடிகர் சங்க அவசர செயற்குழு கூடியது. அப்போது, நடிகர் சங்கம் போட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக, உறுப்பினர்கள் இடையே திடீரென கண்டனக் குரல்கள் எழும்ப... சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் பெரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.</p>.<p>என்ன பிரச்னை? என்று செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''சங்கத்துக்குப் புதிய கட்டடம் தேவை என்றால், கலைநிகழ்ச்சி, நன்கொடை வசூலித்து நாமே கட்டுவதுதான் சிறந்தது. 'தங்கத் தட்டில் தேங்காய் வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்’ என்று நடிகர் சங்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் எப்போதோ சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. ஆரம்பத்தில், தியேட்டர் வந்தால் சந்தோஷம் என்று நினைத்த எங்களுக்கே, இப்போது அந்த ஒப்பந்தம் தவறாகப் பயன்படுமோ என்ற ஐயம் எழுகிறது. அதைத்தான் அன்று நடந்த கூட்டத்தில் பிரதிபலித்தோம். நியமன உறுப்பினரான பூச்சி முருகன், 'நம்முடைய உரிமைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிடக் கூடாது. எனவே இந்த நடைமுறையைக் கண்காணிக்க மூத்த நடிகர் சோ தலைமையில், சிவக்குமார், ராஜேஷ் உள்ளிட் டவர்கள் அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்று கூட்டத்தில் பேசினார். ஒப்பந்த நகலை செயற்குழு உறுப்பினர்களிடம் காண்பிக்கவும் மறுக்கிறார்கள். அதை மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன? 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு லீஸுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து அந்த இடம் நடிகர் சங்கதுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பொறுப்பில் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் ஆதாயம் எதிர்பார்த்து சத்யம் தியேட்டருக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல் வருகிறது. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு சங்கமே அங்கு கட்டடம் கட்ட முயற்சிக்க வேண்டும். அலுவலகம் தவிர திருமண மண்டபம், மருத்துவமனை என உறுப்பினர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கலைவாணர் உருவாக்கியதை சரத்குமார் அழித்துவிடக் கூடாது'' என்றார்கள்.</p>.<p>இந்த சலசலப்புகள் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கருத்துக் கேட்டபோது, ''இந்த ஒப்பந்தத்தை பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் நிறைவேற்றினோம். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களை நீதிமன்றத்தில் முறைப்படி எதிர்கொள்வோம். மற்றபடி இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் நலனுக்கானதுதான். இதில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயமும் இல்லை... இதில் அரசியலும் இல்லை'' என்று மறுத்தார்.</p>.<p>ஆனால்... இந்த விவகாரம் அவ்வளவு சுலபத்தில் அடங்காது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது!</p>.<p>- <strong>தி.கோபிவிஜய் </strong></p>.<p>படம்: சொ.பாலசுப்ரமணியன்</p>