<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">விளம்பரம் அல்ல... வேதனை</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">டாக்டர்கள் தேவை!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>'எ</strong>ங்களுக்கு பண உதவியோ, மருத்துவக் கருவி களின் உதவியோ தேவையில்லை. சேவை மனப்பான்மை கொண்ட டாக்டர்கள் மட்டும் கிடைத்தாலே... மலைவாழ் மக்களிடையே மிகப் பெரிய விழிப்பு உணர்ச்சியை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்!'' - நடமாடும் மருத்துவமனையை உருவாக்கி, அதன் மூலமாக மலைவாழ் மக்களின் துயரைத் துடைக்கப் போராடிவரும் சமூக ஆர்வலரான மதன்மோகன்தான் இப்படிச் சொல்கிறார்! </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>''மக்களுக்கு உதவி செய்வதற்காக 25 லட்ச ரூபாய் செலவில் நானே ஒரு நடமாடும் மொபைல் மருத்துவ மனையை வடிவமைத்துள்ளேன். இ.சி.ஜி., </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஆட்டோ அனலைசர், 5.5 கே.வி ஜெனரேட்டர், ஆபரேஷன் தியேட்டர், நீபோலைசர், அவசர மகப்பேறு மருத்து வம், உட்பட பல்வேறு நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கும் வகையில் பல வசதிகளைக் கொண்டது இந்த மருத்துவமனை. மலைவாழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் விழிப்பு உணர்ச்சி குறும்படங்கள் ஓடும் வகையில் மானிட்டருடன் வடிவமைத்து உள்ளேன். இத்தனை வசதிகள் இருந்தும் தேவையான டாக்டர்கள் இல்லாததால், இதனைப் பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது. மலைகளில் நீண்ட தூரப் பயணத்தை விரும்பாமல், இதில் பணியாற்ற யாரும் இங்கே முன்வருவதில்லை. </p> <p>சமீபத்தில், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாதான் இந்த மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு இதுவரை 'ஸ்டிச்டிங்க் மெடிஸ்சே கம்கென் இந்தியா' <span class="style5">(Stichting medische kamken india)</span> என்ற ஹாலந்து நாட்டு சேவை அமைப்புதான் உதவி வருகிறது. இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மனிதரிடமிருந்தோ, அரசாங்கத்திடமிருந்தோ நாங்கள் பண உதவியையும், மருத்துவப் பொருட்களின் உதவி யையும் வாங்கி இதை செய்யவில்லை. என் குழுவில் டாக்டர் பொன்முடி, பார்மசிஸ்ட் அனந்தகிருஷ்ணன், பிரேமா, சிந்தியா மற்றும் குழு தலைவர் திருமால் ஆகியோர் இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. பிறருக்கு உதவும் தொண்டுள்ளம் படைத்த விருப்பமுள்ள மருத்துவர்கள் யாராவது எங்களோடு கைகோத்தால், மலைவாழ் மக்களின் மருத்துவ உதவிக்கு முழுதாக வழி செய்ய முடியும்!'' என்றார். </p> <p>தற்போது, 'ரெகென்பூக் இந்தியா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பையும் சிறுவர்களுக்கான பள்ளியையும் நடத்திக் கொண்டிருக்கும் மதன்மோகன், பல்வேறு விதமான இயற்கை விழிப்பு உணர்வு சேவைகளையும் செய்து வருகிறார்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ளவர்கள், ''செங்குத்தான மலைப் பாதைகளையும், மூன்று அடிகளுக்கும் மேல் குழிகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட ஆபத்தான மலைப் பகுதிகளில் வசிப்பவர் களுக்கு வெளி உலகத்தோட தொடர்பே இல்லை. பின்தங்கிய நிலையில் இங்கே நிறைய கிராமங் கள் இருக்கின்றன. எங்களுக்காகவே உயிரைப் பணயம் வெச்சு மூணு வருஷமா மதன்மோகன் ரொம்ப கஷ்டப்படுறார். இத்தனைக்கும் மல்டி நேஷனல் கம்பெனியில் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தாங்களாம். எங்களுக்காகவே அந்த வேலையை உதறித் தள்ளிட்டு வந்துட்டார்!'' என்கிறார்கள் ஏரியா வாசிகள்.</p> <p>தொடர்ந்தார் மதன்மோகன்... ''சில வருடங் களுக்கு முன்பு என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. முறையான மருத்துவ உதவிகள் இல்லாததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. நகரங்களில் வாழும் நமக்கே மருத்துவத்தைப்பற்றி சரியான விழிப்பு உணர்ச்சி இல்லாதபோது, பழங்குடி இன மக்களின் நிலையை என்னவென்று சொல்வது? அதனால்தான் என் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்துவிட்டேன். மூன்று ஆண்டுகளாக டாடா சுமோவைப் பயன்படுத்தி பல மலை கிராமங்களுக்கு சென்றுள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள்கூட இல்லாத அந்தப் பகுதி மக்கள், ஊசி போடாமல் நாங்கள் செய்த வைத்தியத்தைப் பார்த்து முதலில் எங்களை நம்ப மறுத்துவிட்டனர். ஆனால், காலம் செல்ல செல்லப் பல கிராமங்களுக்கும் சென்றோம். </p> <p>மருத்துவ உதவிகள் செய்வதோடு மட்டுமில்லாமல் பல விழிப்பு உணர்ச்சி நாடகங்களையும் நடத்தி வருகி றோம். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு இருந்த முக்கியப் பிரச்னை இட வசதி இல்லாததுதான். கோயில்களிலும், பஞ்சாயத்துகளிலும்தான் அதிகமாக எங்கள் மருத்துவ முகாம்கள் நடைபெறும். சுமோவைப் பயன்படுத்திச் சென்றதால் தினமும் 150 நோயாளிகளை மட்டுமே </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பார்க்க முடிந்தது. வாரத்தில் பீமானந்தல், சொர்பனந்தல், மேலபுஞ்சை, படிய அஹ்ரஹாரம், கிளையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வோம். இந்தப் பகுதிகளில் காசநோயாலும், எய்ட்ஸாலும் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். இவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். ஆனால், மொபைல் ஹாஸ்பிட்டலுக்கான உதவி கேட்டுச் சென்ற போதுதான் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். உதவி இயக்குநரான சித்ராதான் எங்களுக்கு முழு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தினார். நல்ல மருத்துவர்கள் குழு எங்களுக்கு கிடைத்துவிட்டால், தினமும் குறைந்த பட்சம் 400 மலைவாழ் மக்களின் மருத்துவப் பிரச்னைகளைக் கையாள முடியும்?'' - ஏக்கத் தோடு கேட்கிறார் மதன்மோகன். </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- யா.நபிசா <br /> படங்கள் பா.கந்தகுமார்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> Stichting medische kamken india, Doctor camp </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">விளம்பரம் அல்ல... வேதனை</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">டாக்டர்கள் தேவை!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>'எ</strong>ங்களுக்கு பண உதவியோ, மருத்துவக் கருவி களின் உதவியோ தேவையில்லை. சேவை மனப்பான்மை கொண்ட டாக்டர்கள் மட்டும் கிடைத்தாலே... மலைவாழ் மக்களிடையே மிகப் பெரிய விழிப்பு உணர்ச்சியை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்!'' - நடமாடும் மருத்துவமனையை உருவாக்கி, அதன் மூலமாக மலைவாழ் மக்களின் துயரைத் துடைக்கப் போராடிவரும் சமூக ஆர்வலரான மதன்மோகன்தான் இப்படிச் சொல்கிறார்! </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>''மக்களுக்கு உதவி செய்வதற்காக 25 லட்ச ரூபாய் செலவில் நானே ஒரு நடமாடும் மொபைல் மருத்துவ மனையை வடிவமைத்துள்ளேன். இ.சி.ஜி., </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஆட்டோ அனலைசர், 5.5 கே.வி ஜெனரேட்டர், ஆபரேஷன் தியேட்டர், நீபோலைசர், அவசர மகப்பேறு மருத்து வம், உட்பட பல்வேறு நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கும் வகையில் பல வசதிகளைக் கொண்டது இந்த மருத்துவமனை. மலைவாழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் விழிப்பு உணர்ச்சி குறும்படங்கள் ஓடும் வகையில் மானிட்டருடன் வடிவமைத்து உள்ளேன். இத்தனை வசதிகள் இருந்தும் தேவையான டாக்டர்கள் இல்லாததால், இதனைப் பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது. மலைகளில் நீண்ட தூரப் பயணத்தை விரும்பாமல், இதில் பணியாற்ற யாரும் இங்கே முன்வருவதில்லை. </p> <p>சமீபத்தில், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாதான் இந்த மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு இதுவரை 'ஸ்டிச்டிங்க் மெடிஸ்சே கம்கென் இந்தியா' <span class="style5">(Stichting medische kamken india)</span> என்ற ஹாலந்து நாட்டு சேவை அமைப்புதான் உதவி வருகிறது. இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மனிதரிடமிருந்தோ, அரசாங்கத்திடமிருந்தோ நாங்கள் பண உதவியையும், மருத்துவப் பொருட்களின் உதவி யையும் வாங்கி இதை செய்யவில்லை. என் குழுவில் டாக்டர் பொன்முடி, பார்மசிஸ்ட் அனந்தகிருஷ்ணன், பிரேமா, சிந்தியா மற்றும் குழு தலைவர் திருமால் ஆகியோர் இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக மருத்துவர்கள் என்று யாரும் இல்லை. பிறருக்கு உதவும் தொண்டுள்ளம் படைத்த விருப்பமுள்ள மருத்துவர்கள் யாராவது எங்களோடு கைகோத்தால், மலைவாழ் மக்களின் மருத்துவ உதவிக்கு முழுதாக வழி செய்ய முடியும்!'' என்றார். </p> <p>தற்போது, 'ரெகென்பூக் இந்தியா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பையும் சிறுவர்களுக்கான பள்ளியையும் நடத்திக் கொண்டிருக்கும் மதன்மோகன், பல்வேறு விதமான இயற்கை விழிப்பு உணர்வு சேவைகளையும் செய்து வருகிறார்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ளவர்கள், ''செங்குத்தான மலைப் பாதைகளையும், மூன்று அடிகளுக்கும் மேல் குழிகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட ஆபத்தான மலைப் பகுதிகளில் வசிப்பவர் களுக்கு வெளி உலகத்தோட தொடர்பே இல்லை. பின்தங்கிய நிலையில் இங்கே நிறைய கிராமங் கள் இருக்கின்றன. எங்களுக்காகவே உயிரைப் பணயம் வெச்சு மூணு வருஷமா மதன்மோகன் ரொம்ப கஷ்டப்படுறார். இத்தனைக்கும் மல்டி நேஷனல் கம்பெனியில் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தாங்களாம். எங்களுக்காகவே அந்த வேலையை உதறித் தள்ளிட்டு வந்துட்டார்!'' என்கிறார்கள் ஏரியா வாசிகள்.</p> <p>தொடர்ந்தார் மதன்மோகன்... ''சில வருடங் களுக்கு முன்பு என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. முறையான மருத்துவ உதவிகள் இல்லாததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. நகரங்களில் வாழும் நமக்கே மருத்துவத்தைப்பற்றி சரியான விழிப்பு உணர்ச்சி இல்லாதபோது, பழங்குடி இன மக்களின் நிலையை என்னவென்று சொல்வது? அதனால்தான் என் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்துவிட்டேன். மூன்று ஆண்டுகளாக டாடா சுமோவைப் பயன்படுத்தி பல மலை கிராமங்களுக்கு சென்றுள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள்கூட இல்லாத அந்தப் பகுதி மக்கள், ஊசி போடாமல் நாங்கள் செய்த வைத்தியத்தைப் பார்த்து முதலில் எங்களை நம்ப மறுத்துவிட்டனர். ஆனால், காலம் செல்ல செல்லப் பல கிராமங்களுக்கும் சென்றோம். </p> <p>மருத்துவ உதவிகள் செய்வதோடு மட்டுமில்லாமல் பல விழிப்பு உணர்ச்சி நாடகங்களையும் நடத்தி வருகி றோம். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு இருந்த முக்கியப் பிரச்னை இட வசதி இல்லாததுதான். கோயில்களிலும், பஞ்சாயத்துகளிலும்தான் அதிகமாக எங்கள் மருத்துவ முகாம்கள் நடைபெறும். சுமோவைப் பயன்படுத்திச் சென்றதால் தினமும் 150 நோயாளிகளை மட்டுமே </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பார்க்க முடிந்தது. வாரத்தில் பீமானந்தல், சொர்பனந்தல், மேலபுஞ்சை, படிய அஹ்ரஹாரம், கிளையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வோம். இந்தப் பகுதிகளில் காசநோயாலும், எய்ட்ஸாலும் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். இவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். ஆனால், மொபைல் ஹாஸ்பிட்டலுக்கான உதவி கேட்டுச் சென்ற போதுதான் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். உதவி இயக்குநரான சித்ராதான் எங்களுக்கு முழு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தினார். நல்ல மருத்துவர்கள் குழு எங்களுக்கு கிடைத்துவிட்டால், தினமும் குறைந்த பட்சம் 400 மலைவாழ் மக்களின் மருத்துவப் பிரச்னைகளைக் கையாள முடியும்?'' - ஏக்கத் தோடு கேட்கிறார் மதன்மோகன். </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- யா.நபிசா <br /> படங்கள் பா.கந்தகுமார்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> Stichting medische kamken india, Doctor camp </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>