<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">நிதித் துறை அநீதி!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">வரி ஏய்ப்புக்கு சரி சொல்லும் பிரணாப்?!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>ப</strong>ட்ஜெட் என்கிற மர்ம கூஜாவில் புதைந்து கிடக் கும் ரகசியங்கள் ஏராளம். சில நேரங்களில் சிலது வெளியே வரும்... பல ரகசியங்கள் தெரியாமலே போகும். அப்படி ஒரு ரகசியத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எம்ஆர்.வெங்கடேஷ். 'கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரி வருமானம் எங்கே போனது?' என்பதுதான் அவர் எழுப்பும் அதிர்ச்சிக் கேள்வி. </p><p>இனி அவரே தொடர்கிறார். ''பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாத பல 'சித்து விளையாட்டுகள்' பட்ஜெட்டில் இருக்கும். உதாரணமாக, குடைக்கு மட்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐந்தாறு முறை கலால் வரி விதித்து, பின்பு நீக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை வரி விதிக்கும்போதும் அல்லது நீக்கும்போதும் யாரோ சிலர் 'திருப்தி'ப்படுத்தப்படுகிறார்கள். சாதாரண ஒரு குடைக்கே இத்தனை பெரிய 'லாபி' ஒன்று நடக்கும் போது, மற்ற விஷயங்களுக்காக நடக்கும் லாபிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். </p> <p>கடந்த மாதம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டை </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஊன்றிப் படித்தால், 70 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்கிற கேள் விக்கு பதிலே இல்லை..! இந்தியப் பிரஜை யாராக இருந்தாலும், அவரவர் சம்பாத்தியத்துக்கு ஏற்ப வரி கட்டவேண்டும். இந்த வரிதான் அரசாங்கத்துக்கு அடிப்படை வருமானம். நடுத்தர மக்களிடம் கொஞ்சம்கூட கருணை காட்டாமல் வரி வசூலிக்கும் அரசாங்கம், எல்லோரிடம் அப்படி நடந்துகொள்கிறதா? இந்தக் கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில்! </p> <p>இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம், ஹசன் அலி கான்.</p> <p>இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கியமான புள்ளி. குதிரைப் பண்ணை வைத் திருப்பதாகச் சொல்கிறார்கள். மும்பை, புனே, ஹைதராபாத்தில் இவருக்கு நிறைய சொத்து உண்டு. 2007-ல் புனேவில் இவருக்கு சொந்தமான பல நிறுவனங்களை வருமான வரித் துறை, முதல் முறையாக ரெய்டு செய்ய... சுவிட்சர்லாந்து வங்கியில் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இவர் பணம் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. 1999-ல் இருந்து இவர் வரியே கட்டவில்லை என்றும் தகவல்கள் வந்தன.</p> <p>பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, 'இவர் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்டவேண்டும்' என்று சொன்னது அரசாங்கம். ஹசன் அலி இதை சட்டை </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>செய்யவே இல்லை. பின்பு இது 50 ஆயிரம் கோடி யாக உயர, இன்றைய தேதியில் இவர் வட்டியோடு கட்டவேண்டிய தொகை, சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய சகாக்களின் வருமான வரி ஏய்ப்பை சேர்த்துப் பார்த்தால், அது ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்..!</p> <p>நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு எழுத்து மூலம் ஒரு பதிலை அளித்தது. அதில், 'ஹசன் அலியிடமிருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி இருக்கிறது...' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆக, 'கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஹசன் அலி வரி கட்டவில்லை' என அமைச்சகமே ஒப்புக் கொண்டிருக்கிறது.</p> <p>ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது பேசுவது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. 'தி வீக்' பத்திரிகையில் அவர் கொடுத்துள்ள </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பேட்டியில், ''ஹசன் அலியிடமிருந்து வரவேண்டிய வரி அத்தனை யும் வந்துவிட்டது'' என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.</p> <p>ஹசன் அலி வருமான வரி கட்டிவிட்டார் என்றால், அது ஏன் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை? சொல்லாமல் விடுவதற்கு அது என்ன சாதாரண வருமானமா? 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தின் கைக்கு வந்திருந்தால், நம் பற்றாக்குறை இன்னும் குறைந்திருக்குமே! ஏன் குறையவில்லை? வரி கட்டிவிட்டார் என்று அமைச்சர் சொன்னாலும் அதற் கான புள்ளிவிவரங்கள் பட்ஜெட்டில் இல்லையே? ஹசன் அலி உண்மையில் வரி கட்டினாரா, இல்லையா?! </p> <p>இந்த முரண்பாடு ஒரு பக்கமிருக்க... இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் அந்தப் பிரச்னையிலிருந்து நிரந்தர மாகத் தப்பித்துக் கொள்ளவும், இந்த பட்ஜெட் மூலம் ஒரு வழி செய்யப்பட்டுள்ளது... 'இதுநாள் வரை வரி கட்டாத பெரும் புள்ளிகள், தாங்கள் கட்டவேண்டிய வரி பாக்கி பற்றி, வருமான வரித் துறையுடன் பேசி ஒரு </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>சமரசத்துக்கு வரலாம். அப்படி சமரசம் ஏற்பட்டு, அரசு விதிக்கும் வரி பாக்கியைக் கட்டிவிட்டால், அவர்கள் மீதான வழக்குகளை அரசாங்கமே வாபஸ் பெறும்' என்று இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.</p> <p>இப்படி அரசாங்கம் சொல்வது முதல் தடவையல்ல. ஆனால், இன்றைய சூழலில் இது நமக்கு அதிர்ச்சி யான ஒரு உண்மையைப் புரிய வைக்கிறது. நம் நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்துவிட்டு, சுவிட்சர்லாந்து வங்கியில் பலரும் பணத்தைக் குவித்துவைத்திருக்கிறார்கள். அப்படி பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை சுவிட்சர்லாந்து வங்கியிடமிருந்து பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் இது ஒரு வாக்குறுதியாகவேகூட மக்களுக்கு அளிக்கப்பட்டது. இத்தனை நாளும் எந்த விவரத்தையும் கொடுக்காமல் இழுத்துவந்த சுவிட்சர்லாந்து வங்கி, இப்போதுதான் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. 'உங்கள் நாட்டில் வரி தொடர்பான வழக்கு உடையவர்களின் விவரங்களைக் கொடுங்கள். அவர்கள் எங்கள் வங்கிகளில் பணம் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதை சொல்கிறோம்' என்று சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக் கிறது சுவிட்சர்லாந்து வங்கி.</p> <p>வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்கள் தொடர்பான சில விவரங்கள் நமக்குக் கிடைக்கும் என்று நாம் ஆறுதல் அடையும் இந்த நேரத்தில், அரசாங்கம் இப்படி ஒரு வழி செய்தால், பெரும் புள்ளிகள் வருமான வரித் துறையிடம் பேசி, ஏதாவது ஒரு சமரசத்துக்கு வந்து விடுவார்கள். இதனால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கு வாபஸ் ஆகும். அடுத்து, அவர்கள் வெளி நாட்டில் குவித்துவைத்திருக்கும் கறுப்புப் பணம் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்காமலேயே போகும்! இதெல்லாம் யாருக்காக... எதற்காக?'' என்று கேட்டு முடித்தார் வெங்கடேஷ்.</p> <p>சாதாரண விஷயங்களுக்காக நாடாளுமன்றத் தையே முடக்கும் எதிர்க்கட்சிகள்கூட இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்தால்... சில விஷயங்களில் அரசியல்வாதிகள் கமுக்கமாக ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பதைத் தானே மறுபடியும் உறுதிப்படுத்துகிறது! </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- நமது நிருபர் </span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> budjet 2010 pranab mukarji hasan ali khan </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">நிதித் துறை அநீதி!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">வரி ஏய்ப்புக்கு சரி சொல்லும் பிரணாப்?!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>ப</strong>ட்ஜெட் என்கிற மர்ம கூஜாவில் புதைந்து கிடக் கும் ரகசியங்கள் ஏராளம். சில நேரங்களில் சிலது வெளியே வரும்... பல ரகசியங்கள் தெரியாமலே போகும். அப்படி ஒரு ரகசியத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எம்ஆர்.வெங்கடேஷ். 'கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரி வருமானம் எங்கே போனது?' என்பதுதான் அவர் எழுப்பும் அதிர்ச்சிக் கேள்வி. </p><p>இனி அவரே தொடர்கிறார். ''பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாத பல 'சித்து விளையாட்டுகள்' பட்ஜெட்டில் இருக்கும். உதாரணமாக, குடைக்கு மட்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐந்தாறு முறை கலால் வரி விதித்து, பின்பு நீக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை வரி விதிக்கும்போதும் அல்லது நீக்கும்போதும் யாரோ சிலர் 'திருப்தி'ப்படுத்தப்படுகிறார்கள். சாதாரண ஒரு குடைக்கே இத்தனை பெரிய 'லாபி' ஒன்று நடக்கும் போது, மற்ற விஷயங்களுக்காக நடக்கும் லாபிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். </p> <p>கடந்த மாதம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டை </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஊன்றிப் படித்தால், 70 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்கிற கேள் விக்கு பதிலே இல்லை..! இந்தியப் பிரஜை யாராக இருந்தாலும், அவரவர் சம்பாத்தியத்துக்கு ஏற்ப வரி கட்டவேண்டும். இந்த வரிதான் அரசாங்கத்துக்கு அடிப்படை வருமானம். நடுத்தர மக்களிடம் கொஞ்சம்கூட கருணை காட்டாமல் வரி வசூலிக்கும் அரசாங்கம், எல்லோரிடம் அப்படி நடந்துகொள்கிறதா? இந்தக் கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில்! </p> <p>இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம், ஹசன் அலி கான்.</p> <p>இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கியமான புள்ளி. குதிரைப் பண்ணை வைத் திருப்பதாகச் சொல்கிறார்கள். மும்பை, புனே, ஹைதராபாத்தில் இவருக்கு நிறைய சொத்து உண்டு. 2007-ல் புனேவில் இவருக்கு சொந்தமான பல நிறுவனங்களை வருமான வரித் துறை, முதல் முறையாக ரெய்டு செய்ய... சுவிட்சர்லாந்து வங்கியில் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இவர் பணம் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. 1999-ல் இருந்து இவர் வரியே கட்டவில்லை என்றும் தகவல்கள் வந்தன.</p> <p>பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து, 'இவர் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்டவேண்டும்' என்று சொன்னது அரசாங்கம். ஹசன் அலி இதை சட்டை </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>செய்யவே இல்லை. பின்பு இது 50 ஆயிரம் கோடி யாக உயர, இன்றைய தேதியில் இவர் வட்டியோடு கட்டவேண்டிய தொகை, சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய சகாக்களின் வருமான வரி ஏய்ப்பை சேர்த்துப் பார்த்தால், அது ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்..!</p> <p>நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு எழுத்து மூலம் ஒரு பதிலை அளித்தது. அதில், 'ஹசன் அலியிடமிருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி இருக்கிறது...' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆக, 'கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஹசன் அலி வரி கட்டவில்லை' என அமைச்சகமே ஒப்புக் கொண்டிருக்கிறது.</p> <p>ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது பேசுவது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. 'தி வீக்' பத்திரிகையில் அவர் கொடுத்துள்ள </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பேட்டியில், ''ஹசன் அலியிடமிருந்து வரவேண்டிய வரி அத்தனை யும் வந்துவிட்டது'' என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.</p> <p>ஹசன் அலி வருமான வரி கட்டிவிட்டார் என்றால், அது ஏன் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை? சொல்லாமல் விடுவதற்கு அது என்ன சாதாரண வருமானமா? 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தின் கைக்கு வந்திருந்தால், நம் பற்றாக்குறை இன்னும் குறைந்திருக்குமே! ஏன் குறையவில்லை? வரி கட்டிவிட்டார் என்று அமைச்சர் சொன்னாலும் அதற் கான புள்ளிவிவரங்கள் பட்ஜெட்டில் இல்லையே? ஹசன் அலி உண்மையில் வரி கட்டினாரா, இல்லையா?! </p> <p>இந்த முரண்பாடு ஒரு பக்கமிருக்க... இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் அந்தப் பிரச்னையிலிருந்து நிரந்தர மாகத் தப்பித்துக் கொள்ளவும், இந்த பட்ஜெட் மூலம் ஒரு வழி செய்யப்பட்டுள்ளது... 'இதுநாள் வரை வரி கட்டாத பெரும் புள்ளிகள், தாங்கள் கட்டவேண்டிய வரி பாக்கி பற்றி, வருமான வரித் துறையுடன் பேசி ஒரு </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>சமரசத்துக்கு வரலாம். அப்படி சமரசம் ஏற்பட்டு, அரசு விதிக்கும் வரி பாக்கியைக் கட்டிவிட்டால், அவர்கள் மீதான வழக்குகளை அரசாங்கமே வாபஸ் பெறும்' என்று இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.</p> <p>இப்படி அரசாங்கம் சொல்வது முதல் தடவையல்ல. ஆனால், இன்றைய சூழலில் இது நமக்கு அதிர்ச்சி யான ஒரு உண்மையைப் புரிய வைக்கிறது. நம் நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்துவிட்டு, சுவிட்சர்லாந்து வங்கியில் பலரும் பணத்தைக் குவித்துவைத்திருக்கிறார்கள். அப்படி பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை சுவிட்சர்லாந்து வங்கியிடமிருந்து பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் இது ஒரு வாக்குறுதியாகவேகூட மக்களுக்கு அளிக்கப்பட்டது. இத்தனை நாளும் எந்த விவரத்தையும் கொடுக்காமல் இழுத்துவந்த சுவிட்சர்லாந்து வங்கி, இப்போதுதான் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. 'உங்கள் நாட்டில் வரி தொடர்பான வழக்கு உடையவர்களின் விவரங்களைக் கொடுங்கள். அவர்கள் எங்கள் வங்கிகளில் பணம் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதை சொல்கிறோம்' என்று சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக் கிறது சுவிட்சர்லாந்து வங்கி.</p> <p>வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்கள் தொடர்பான சில விவரங்கள் நமக்குக் கிடைக்கும் என்று நாம் ஆறுதல் அடையும் இந்த நேரத்தில், அரசாங்கம் இப்படி ஒரு வழி செய்தால், பெரும் புள்ளிகள் வருமான வரித் துறையிடம் பேசி, ஏதாவது ஒரு சமரசத்துக்கு வந்து விடுவார்கள். இதனால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கு வாபஸ் ஆகும். அடுத்து, அவர்கள் வெளி நாட்டில் குவித்துவைத்திருக்கும் கறுப்புப் பணம் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்காமலேயே போகும்! இதெல்லாம் யாருக்காக... எதற்காக?'' என்று கேட்டு முடித்தார் வெங்கடேஷ்.</p> <p>சாதாரண விஷயங்களுக்காக நாடாளுமன்றத் தையே முடக்கும் எதிர்க்கட்சிகள்கூட இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்தால்... சில விஷயங்களில் அரசியல்வாதிகள் கமுக்கமாக ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பதைத் தானே மறுபடியும் உறுதிப்படுத்துகிறது! </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- நமது நிருபர் </span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> budjet 2010 pranab mukarji hasan ali khan </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>