<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">அன்றைய சாரதியின் இன்றைய கதி</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">'கடைசியாக கலைஞருக்கு..!'</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>செ</strong>ன்னை அடையாறில் உள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் அந்த மனிதரை யதேச்சை யாகப் பார்த்தோம். எழுந்து உட்காரக்கூட தெம்பற்றுக் கிடந்தார். குழியாகிப் போன கண்கள்... முகமெல்லாம் தாடி... கூர்ந்து கவனித்தால் அவரை அடை யாளம் கண்டுபிடிக்க முடிகிறது. 33 வருடங்கள் முதல்வர் கருணாநிதிக்கு காரோட்டும் சாரதியாக இருந்த மணி! சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு மன வருத்தத்தில் கோபாலபுரத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு வந்த மணி, இப்போது மரணத்தின் நெருங்கிய பிடியில்! </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>''இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோன்னு டாக்டர்கள் கை விரிச்சிட்டாங்க... குணப்படுத்த வாய்ப்பே இல்லாத அள வுக்கு டி.பி. முத்திப் போயிடிச்சு. </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>'கடைசியா கலைஞர்கிட்ட நாலு வார்த்தை பேசிடணும்'னு பிதற்றிக்கிட்டே இருக்கார். அவர் புலம்புறதக் கேக்கறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு...'' என்கிறார்கள், மணிக்கு உதவியாக இருக்கும் நண்பர்கள்.</p> <p>மணியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது தான் தாமதம்... கரகரவெனக் கொட்டத் தொடங்கியது கண்ணீர். கூடவே இருமலும் ஏறி இறங்கும் மூச்சும்... மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் மணி. </p> <p>''நான் சாகப் போறதை நெனச்சு அழலை சார்... நாளைக்கே எங்கதை முடிஞ்சாலும், அதைப் பத்தியெல்லாம் எனக்கு துளிகூட கவலை இல்ல. கடைசியா கலைஞர்கிட்ட சில வார்த்தைகள் பேசணும்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. நெஞ்சை அடைக்கிற வார்த்தைகளை இறக்கி வெச்சிட்டு சாகலாம்னு பார்த்தா... அதுக்குத்தான் கொடுப்பினை இல்லைன்னு நெனைக்கிறேன்'' - பேச முடியாமல் தேம்பத் தொடங்கினார் மணி.</p> <p>''ரெண்டு வாரத்துக்கு முன்னால கவர்மென்ட் ஆஸ்பத்திரியில மணியை அட்மிட் பண்ணினோம். ஆனா, அங்கே அவருக்கு ஒரு 'பெட்'கூட ஒதுக்கிக் கொடுக்காமல் தரையில படுக்க வெச்சிட்டாங்க. வெறும் தரையில அவர் படுத்திருந்த கோலத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமத்தான் இங்க கொண்டாந்து சேர்த்தோம். 'என்னைய காப்பாத்த வேணாம்... எனக்கு வாழப் பிடிக்கலை'ன்னு சொல்லி, ஆள் இல்லாத நேரத்துல ரெண்டு தடவை ஆஸ்பத்திரியை விட்டே வெளியே ஓடிட்டார். அவர் கடைசியா சொல்ல நினைக்கிற வார்த் தைகளை ஜூ.வி. மூலமா சொல்ல நினைக்கிறார்...'' என்றார்கள் மணியின் நண்பர்கள். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>நம்மிடம் மணி, ''1970-ம் வருஷம் அநாதைப் பயலா ஓடிவந்து, ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்த வன் நான். 13 வயசுல தலைவரைப் பார்த்தேன். மாசம் நூறு ரூபா சம்பளத்துக்கு தலைவர்கிட்ட சேர்ந் தேன். அதன்பிறகு அடுத்த 33 வருஷமும் அவரோட நெழல்லதான் வாழ்ந்தேன். எமர்ஜென்சி காலத்துல தலைவர் நம்பிக்கையா நெனச்ச எத்தனையோ பேர், அவரைத் தனியா விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்பத்தான் தலைவருக்கு ரொம்ப நெருக்கமான ஆளா நான் மாறினேன். கார் துடைக்கிறது தொடங்கி, வேட்டி கட்டுறது வரைக்கும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் பார்ப்பேன்.</p> <p>நான் ஏன் டிரைவர் வேலையை விட்டுட்டு வந்தேன்னு இப்போகூட தலைவருக்கு சரியாத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். கோபம் கண்ணை மறைச்சிடும்கிறதுக்கு என்னோட வாழ்க்கையே உதாரணம். என்னோட மனைவி லதாவுக்கு கவுன்சிலர் ஸீட் கேட்டதுலதான் பிரச்னையே ஆரம்பிச்சுது. ஸீட் கொடுக்குறதும் இல்லைங்கிறதும் தலைவரோட விருப்பம். ஆனா, ஸீட் இல்லைன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துடுச்சு. அவ அ.தி.மு.க-வுல சேரணும்னு சொன்னப்ப... நான் அதைக் காது கொடுத்துக் கேட்காம வழக்கம் போல கோபாலபுரத்துக்கு போனேன். என் மனைவி நான் வேலையை ராஜினாமா பண்றதா எனக்கு தெரியாமலே எழுதிக் கொடுத்திட்டா. அதனால அங்கே என்மேல் கோபப்பட... நானும் கையில வெச்சிருந்த கார் சாவியை ஒப்படைச்சிட்டு வந்துட்டேன். வேலைய விட்டு நின்னாலும், வேற கட்சிக்குப் போகணும்கிற எண்ணமெல்லாம் எனக்கு வந்ததே இல்லை. </p> <p>வெளியூர் பயணம்னாலே தலைவருக்கு நான்தான் கார் ஓட்டுவேன். எத்தனையோ தடவை தலைவரோட உயிருக்கு ஆபத்து வந்திருக்கு... அப்ப எல்லாம் அவருக்குப் பாதுகாப்பா பக்கத்துலயே இருந்திருக்கேன். ஒருதடவை இதேபோல் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்திலிருந்து நல்லபடியா தப்பிய தலைவர் என்னைப் பார்த்து, 'ஏண்டா மணி... எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியாடா?'ன்னு கேட்டார். 'இப்போ சொல்லுங்க தலைவரே... இந்த இடத் திலேயே உங்களுக் காக உயிரையே விட்டு டறேன்'னு சொன் னேன். இந்த வார்த்தைகளை நான் ஒரு தடவைதான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா தலைவர், எத்தனையோ தடவை அதைச் சொல்லிக் காட்டி என்னைய பெருமைப் படுத்தி இருக்கார்...'' - நா வறண்டு போய் தண்ணீர் குடித்த மணி, நெடு நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார்.</p> <p>''நான் வேலைய விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் ஏழெட்டு தடவை தலைவர் திரும்ப ஆள் அனுப்பி என்னை அழைச்சார். ஆனா, என் மனைவி அ.தி.மு.க-வுல சேர்ந்த விவகாரத்தில் எனக்கு எதுவும் பங்கு உண்டானு என்னைக் கூப்பிட்டு தலைவர் உரிமையா ஒரு வார்த்தை விசாரிக்கலையே என்ற கோபத்துலதான் நான் மறுபடியும் தலைவர்கிட்ட போகலை. என்னோட மனைவிதான் அ.தி.மு.க-வுல சேர்ந்தாளே தவிர, நான் கடைசி வரைக்கும் கழகத்துலதான் இருந்தேன். என் மனைவியை பிரிஞ்சு வாழ்ந்தேன். என்னோட நியாயத்தை நான் சொல்ல நெனச்சப்ப, அதுக்கு ஒரு வாய்ப்பு கெடைக்கலை. தலைவரை பார்க்க விடாம எல்லாரும் என்னைத் தடுத்துட்டாங்க. தளபதிகிட்ட ஒரு தடவை பேசினப்ப... அவரும் தப்பாவே புரிஞ்சுகிட்டு திருப்பி அனுப்பிட்டாரு. </p> <p>தலைவர்கிட்ட இருந்த இந்த நீண்டகால சர்வீஸ்ல எத்தனையோ பேர் எனக்குப் பழக்கமாகி இருந்தாங்க. அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் நல்லா பழகுவேன். ஆனா, தலைவரை விட்டு வந்ததுக்கு அப்புறம் யார்கிட்டயும் நான் நெருங்கலை. சாப்பாட்டுக்கும் சராசரி செலவுக்குமே வழியில்லாம அலைஞ்சப்பக்கூட, யார் கையையும் நான் எதிர்பார்க்கலை. சில பேர் என்னைய கனிமொழிகிட்ட பேசச் சொன்னாங்க. சின்ன வயசுல கனியை நான்தான் ஸ்கூலுக்குக் கொண்டுபோய் விடுவேன். நான் கேட்டா கனி எதையும் தட்ட மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, பெரிய பாவம் பண்ணினவனைப் போல என்னை கட்சியே ஒதுக்கி வெச்சிருக்கிறப்ப, கனிக்கு என்னால எந்த தர்மசங்கடமும் வந்துடக் கூடாதேன்னுதான் அவுங்களை பார்க்காமலேயே இருந்திட்டேன்...'' </p> <p>- கண் கலங்கியபடி சொன்ன மணி, கடைசியாக நம்மிடம் எடுத்துவைத்த வார்த்தைகள்...</p> <p>''என்னோட தலைமாட்டுலேயே சாவு உட்கார்ந் திருக்கு. இப்பவும் தலைவர்கிட்ட ஏதும் ஒதவி ஒத்தாசை கேட்டு உயிரைக் காப்பாத்திக்க நான் நெனைக்கலை. அவர் போட்ட சாப்பாட்டுலதான் இத்தனை வருஷம் இந்த உயிர் வளர்ந்திருக்கு. 'நான் மனசறிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலை. கடைசி நிமிஷத்துலகூட உங்களை நெனச்சபடியேதான் நான் சாகப் போறேன். என்னையும் அறியாம நான் ஏதும் தப்பு பண்ணி இருந்தா... தயவுபண்ணி நீங்க என்னை மன்னிச்சிருங்கய்யா'னு முதல்வரைக் கேட்டுக்கறேன். என் மன்னிப்பை ஏத்துக்கிட்டதா யார் மூலமாவது அவர் சொல்லி அனுப்பிட்டா போதும். நான் சிரிச்சுக்கிட்டே என் பயணத்தை முடிச்சுக்குவேன்!'' </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- இரா.சரவணன்<br /> படங்கள் த.கதிரவன்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> karunanithi driver mani </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><b> </b><table><tbody><tr><td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"> <tbody><tr> <td class="blue_color">அன்றைய சாரதியின் இன்றைய கதி</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">'கடைசியாக கலைஞருக்கு..!'</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>செ</strong>ன்னை அடையாறில் உள்ள வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் அந்த மனிதரை யதேச்சை யாகப் பார்த்தோம். எழுந்து உட்காரக்கூட தெம்பற்றுக் கிடந்தார். குழியாகிப் போன கண்கள்... முகமெல்லாம் தாடி... கூர்ந்து கவனித்தால் அவரை அடை யாளம் கண்டுபிடிக்க முடிகிறது. 33 வருடங்கள் முதல்வர் கருணாநிதிக்கு காரோட்டும் சாரதியாக இருந்த மணி! சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு மன வருத்தத்தில் கோபாலபுரத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு வந்த மணி, இப்போது மரணத்தின் நெருங்கிய பிடியில்! </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>''இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோன்னு டாக்டர்கள் கை விரிச்சிட்டாங்க... குணப்படுத்த வாய்ப்பே இல்லாத அள வுக்கு டி.பி. முத்திப் போயிடிச்சு. </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>'கடைசியா கலைஞர்கிட்ட நாலு வார்த்தை பேசிடணும்'னு பிதற்றிக்கிட்டே இருக்கார். அவர் புலம்புறதக் கேக்கறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு...'' என்கிறார்கள், மணிக்கு உதவியாக இருக்கும் நண்பர்கள்.</p> <p>மணியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது தான் தாமதம்... கரகரவெனக் கொட்டத் தொடங்கியது கண்ணீர். கூடவே இருமலும் ஏறி இறங்கும் மூச்சும்... மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் மணி. </p> <p>''நான் சாகப் போறதை நெனச்சு அழலை சார்... நாளைக்கே எங்கதை முடிஞ்சாலும், அதைப் பத்தியெல்லாம் எனக்கு துளிகூட கவலை இல்ல. கடைசியா கலைஞர்கிட்ட சில வார்த்தைகள் பேசணும்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. நெஞ்சை அடைக்கிற வார்த்தைகளை இறக்கி வெச்சிட்டு சாகலாம்னு பார்த்தா... அதுக்குத்தான் கொடுப்பினை இல்லைன்னு நெனைக்கிறேன்'' - பேச முடியாமல் தேம்பத் தொடங்கினார் மணி.</p> <p>''ரெண்டு வாரத்துக்கு முன்னால கவர்மென்ட் ஆஸ்பத்திரியில மணியை அட்மிட் பண்ணினோம். ஆனா, அங்கே அவருக்கு ஒரு 'பெட்'கூட ஒதுக்கிக் கொடுக்காமல் தரையில படுக்க வெச்சிட்டாங்க. வெறும் தரையில அவர் படுத்திருந்த கோலத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமத்தான் இங்க கொண்டாந்து சேர்த்தோம். 'என்னைய காப்பாத்த வேணாம்... எனக்கு வாழப் பிடிக்கலை'ன்னு சொல்லி, ஆள் இல்லாத நேரத்துல ரெண்டு தடவை ஆஸ்பத்திரியை விட்டே வெளியே ஓடிட்டார். அவர் கடைசியா சொல்ல நினைக்கிற வார்த் தைகளை ஜூ.வி. மூலமா சொல்ல நினைக்கிறார்...'' என்றார்கள் மணியின் நண்பர்கள். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"></p> <p>நம்மிடம் மணி, ''1970-ம் வருஷம் அநாதைப் பயலா ஓடிவந்து, ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்த வன் நான். 13 வயசுல தலைவரைப் பார்த்தேன். மாசம் நூறு ரூபா சம்பளத்துக்கு தலைவர்கிட்ட சேர்ந் தேன். அதன்பிறகு அடுத்த 33 வருஷமும் அவரோட நெழல்லதான் வாழ்ந்தேன். எமர்ஜென்சி காலத்துல தலைவர் நம்பிக்கையா நெனச்ச எத்தனையோ பேர், அவரைத் தனியா விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்பத்தான் தலைவருக்கு ரொம்ப நெருக்கமான ஆளா நான் மாறினேன். கார் துடைக்கிறது தொடங்கி, வேட்டி கட்டுறது வரைக்கும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் பார்ப்பேன்.</p> <p>நான் ஏன் டிரைவர் வேலையை விட்டுட்டு வந்தேன்னு இப்போகூட தலைவருக்கு சரியாத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். கோபம் கண்ணை மறைச்சிடும்கிறதுக்கு என்னோட வாழ்க்கையே உதாரணம். என்னோட மனைவி லதாவுக்கு கவுன்சிலர் ஸீட் கேட்டதுலதான் பிரச்னையே ஆரம்பிச்சுது. ஸீட் கொடுக்குறதும் இல்லைங்கிறதும் தலைவரோட விருப்பம். ஆனா, ஸீட் இல்லைன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துடுச்சு. அவ அ.தி.மு.க-வுல சேரணும்னு சொன்னப்ப... நான் அதைக் காது கொடுத்துக் கேட்காம வழக்கம் போல கோபாலபுரத்துக்கு போனேன். என் மனைவி நான் வேலையை ராஜினாமா பண்றதா எனக்கு தெரியாமலே எழுதிக் கொடுத்திட்டா. அதனால அங்கே என்மேல் கோபப்பட... நானும் கையில வெச்சிருந்த கார் சாவியை ஒப்படைச்சிட்டு வந்துட்டேன். வேலைய விட்டு நின்னாலும், வேற கட்சிக்குப் போகணும்கிற எண்ணமெல்லாம் எனக்கு வந்ததே இல்லை. </p> <p>வெளியூர் பயணம்னாலே தலைவருக்கு நான்தான் கார் ஓட்டுவேன். எத்தனையோ தடவை தலைவரோட உயிருக்கு ஆபத்து வந்திருக்கு... அப்ப எல்லாம் அவருக்குப் பாதுகாப்பா பக்கத்துலயே இருந்திருக்கேன். ஒருதடவை இதேபோல் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்திலிருந்து நல்லபடியா தப்பிய தலைவர் என்னைப் பார்த்து, 'ஏண்டா மணி... எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியாடா?'ன்னு கேட்டார். 'இப்போ சொல்லுங்க தலைவரே... இந்த இடத் திலேயே உங்களுக் காக உயிரையே விட்டு டறேன்'னு சொன் னேன். இந்த வார்த்தைகளை நான் ஒரு தடவைதான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா தலைவர், எத்தனையோ தடவை அதைச் சொல்லிக் காட்டி என்னைய பெருமைப் படுத்தி இருக்கார்...'' - நா வறண்டு போய் தண்ணீர் குடித்த மணி, நெடு நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார்.</p> <p>''நான் வேலைய விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் ஏழெட்டு தடவை தலைவர் திரும்ப ஆள் அனுப்பி என்னை அழைச்சார். ஆனா, என் மனைவி அ.தி.மு.க-வுல சேர்ந்த விவகாரத்தில் எனக்கு எதுவும் பங்கு உண்டானு என்னைக் கூப்பிட்டு தலைவர் உரிமையா ஒரு வார்த்தை விசாரிக்கலையே என்ற கோபத்துலதான் நான் மறுபடியும் தலைவர்கிட்ட போகலை. என்னோட மனைவிதான் அ.தி.மு.க-வுல சேர்ந்தாளே தவிர, நான் கடைசி வரைக்கும் கழகத்துலதான் இருந்தேன். என் மனைவியை பிரிஞ்சு வாழ்ந்தேன். என்னோட நியாயத்தை நான் சொல்ல நெனச்சப்ப, அதுக்கு ஒரு வாய்ப்பு கெடைக்கலை. தலைவரை பார்க்க விடாம எல்லாரும் என்னைத் தடுத்துட்டாங்க. தளபதிகிட்ட ஒரு தடவை பேசினப்ப... அவரும் தப்பாவே புரிஞ்சுகிட்டு திருப்பி அனுப்பிட்டாரு. </p> <p>தலைவர்கிட்ட இருந்த இந்த நீண்டகால சர்வீஸ்ல எத்தனையோ பேர் எனக்குப் பழக்கமாகி இருந்தாங்க. அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் நல்லா பழகுவேன். ஆனா, தலைவரை விட்டு வந்ததுக்கு அப்புறம் யார்கிட்டயும் நான் நெருங்கலை. சாப்பாட்டுக்கும் சராசரி செலவுக்குமே வழியில்லாம அலைஞ்சப்பக்கூட, யார் கையையும் நான் எதிர்பார்க்கலை. சில பேர் என்னைய கனிமொழிகிட்ட பேசச் சொன்னாங்க. சின்ன வயசுல கனியை நான்தான் ஸ்கூலுக்குக் கொண்டுபோய் விடுவேன். நான் கேட்டா கனி எதையும் தட்ட மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, பெரிய பாவம் பண்ணினவனைப் போல என்னை கட்சியே ஒதுக்கி வெச்சிருக்கிறப்ப, கனிக்கு என்னால எந்த தர்மசங்கடமும் வந்துடக் கூடாதேன்னுதான் அவுங்களை பார்க்காமலேயே இருந்திட்டேன்...'' </p> <p>- கண் கலங்கியபடி சொன்ன மணி, கடைசியாக நம்மிடம் எடுத்துவைத்த வார்த்தைகள்...</p> <p>''என்னோட தலைமாட்டுலேயே சாவு உட்கார்ந் திருக்கு. இப்பவும் தலைவர்கிட்ட ஏதும் ஒதவி ஒத்தாசை கேட்டு உயிரைக் காப்பாத்திக்க நான் நெனைக்கலை. அவர் போட்ட சாப்பாட்டுலதான் இத்தனை வருஷம் இந்த உயிர் வளர்ந்திருக்கு. 'நான் மனசறிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலை. கடைசி நிமிஷத்துலகூட உங்களை நெனச்சபடியேதான் நான் சாகப் போறேன். என்னையும் அறியாம நான் ஏதும் தப்பு பண்ணி இருந்தா... தயவுபண்ணி நீங்க என்னை மன்னிச்சிருங்கய்யா'னு முதல்வரைக் கேட்டுக்கறேன். என் மன்னிப்பை ஏத்துக்கிட்டதா யார் மூலமாவது அவர் சொல்லி அனுப்பிட்டா போதும். நான் சிரிச்சுக்கிட்டே என் பயணத்தை முடிச்சுக்குவேன்!'' </p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"><span class="Brown_color">- இரா.சரவணன்<br /> படங்கள் த.கதிரவன்</span></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> karunanithi driver mani </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>