Published:Updated:

மும்பையில் கடத்தல்: ரூ.4.8 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை... தமிழகத்தில் மீட்கப்பட்டது எப்படி?

கைதுசெய்யப்பட்டவர்கள்
News
கைதுசெய்யப்பட்டவர்கள்

மும்பையில் கடத்தப்பட்டு, தமிழகத்தில் விற்கப்பட்ட குழந்தையை போலீஸார் நான்கு நாள்களில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

Published:Updated:

மும்பையில் கடத்தல்: ரூ.4.8 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை... தமிழகத்தில் மீட்கப்பட்டது எப்படி?

மும்பையில் கடத்தப்பட்டு, தமிழகத்தில் விற்கப்பட்ட குழந்தையை போலீஸார் நான்கு நாள்களில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
News
கைதுசெய்யப்பட்டவர்கள்

மும்பையைச் சேர்ந்த அன்வாரி அப்துல் ஷேக் என்ற பெண்ணின் நான்கு மாதப் பெண் குழந்தை கடந்த மூன்றாம் தேதி காணாமல் போனது. இதையடுத்து, அந்த்ப் பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். போலீஸார் குழந்தை காணாமல்போன வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இப்ராகிம் ஷேக் (32) என்பவர் குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது. இப்ராகிம் ஷேக் குழந்தையின் தாயார் அன்வாரியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

குழந்தையைத் தூக்கி சென்ற பிறகு அவரும் காணாமல்போய்விட்டார். ஆனால், அவரின் மொபைல் சிக்னலை வைத்து இப்ராகிமை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் மும்பையிலுள்ள சயான், தாராவி, மலாடு, ஜோகேஷ்வரி, கல்யாண், தானே போன்ற இடங்களில் ரெய்டு நடத்தி இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரைக் குழந்தை கடத்தல் தொடர்பாகக் கைதுசெய்தனர்.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியிடம் ரூ.4.8 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையைக் கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் மூன்று மாவட்டங்களில் நான்கு நாள்கள் கடுமையாகச் சோதனை செய்து செல்வன்பட்டி என்ற கிராமத்திலிருந்து குழந்தையை மீட்டனர்.

கைது
கைது

அதோடு குழந்தையை விலைக்கு வாங்கியது தொடர்பாக ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு மும்பைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். குழந்தை செல்வன்பட்டியைச் சேர்ந்த சிவில் இன்ஜினீயர் ஆனந்த் குமார் நாகராஜன் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. இப்ராகிம் குழந்தைக்குத் தான்தான் தந்தை என்று தெரிவித்துள்ளார். அது குறித்து தெரிந்துகொள்ள டி.என்.ஏ.சோதனை நடத்த முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.