Published:Updated:

சென்னை: கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாடி பாலாஜியின் மனைவி நித்யா... நடந்தது என்ன?!

தாடி பாலாஜியின் மனைவி நித்யா
News
தாடி பாலாஜியின் மனைவி நித்யா

ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவரின் காரை சேதப்படுத்திய வழக்கில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவைக் கைதுசெய்த மாதவரம் போலீஸார், அவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாடி பாலாஜியின் மனைவி நித்யா... நடந்தது என்ன?!

ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவரின் காரை சேதப்படுத்திய வழக்கில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவைக் கைதுசெய்த மாதவரம் போலீஸார், அவரைக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள்.

தாடி பாலாஜியின் மனைவி நித்யா
News
தாடி பாலாஜியின் மனைவி நித்யா

சென்னை, மாதவரம் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்துவருகிறார். நடிகர் தாடி பாலாஜியைப் பிரிந்து நித்யா வாழ்ந்துவருகிறார். இந்த நிலையில், நித்யாவின் வீட்டின் எதிரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்துவருகிறார். நித்யாவுக்கும், மணிக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி, தன்னுடைய காரை வீட்டின் வெளியில் நிறுத்திவைத்திருந்தார். அப்போது அவரின் காரை யாரோ சேதப்படுத்தியிருந்ததால் மணி அதிர்ச்சியடைந்தார்.

நித்யா
நித்யா

இது குறித்து மணி, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது சிசிடிவி கேமரா பதிவு ஒன்றையும் மணி கொடுத்தார். அதில், நித்யா, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காரின் அருகில் வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் நித்யா மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவரிடம் விசாரித்தனர்.

இதையடுத்து, நித்யாவை போலீஸார் கைதுசெய்தனர். நித்யா மீது பதிவுசெய்யப்பட்ட சட்டப் பிரிவில் காவல் நிலைய ஜாமீனிலேயே அவரை விடுவிக்க முடியும். அதனால் விசாரணைக்குப் பிறகு நித்யா வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இருப்பினும் நித்யா மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும்போது அவர் ஆஜராக வேண்டும் என்கின்றனர் போலீஸார்.