<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ள்ளி செல்லும் பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கேயுரிய காலை நேர பரபரப்புக்கு... தோழியின் வீட்டில் துளியும் குறைவிருக்காது. </p>.<p>''ஒரு நாளைப் போல லேட்டா எழுந்திருக்கிறே... என்னிக்குத்தான் சீக்கிரமா ஸ்கூல் கிளம்புவே. வேகமா போறோம்ங்கற பேர்ல ரெண்டு பேரும் வண்டியிலிருந்து ரோட்டுல விழுந்தா... என்னாகறது?'' </p>.<p>- இப்படி ஏதாவது அனத்தியபடியேதான் சடை பின்னுவது, லஞ்ச் பாக்ஸ் கட்டுவது, ஸ்கூட்டியில் அழைத்துச் செல்வது அத்தனையும் நடக்கும்!</p>.<p>நிதானமான ஒரு ஞாயிற்றுக்கிழமை, கை நிறைய பைகளுடன் மார்க்கெட்டில் இருந்து கணவனுடன் வெளிப்பட்ட அந்தத் தோழியிடம் சிறிது உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.</p>.<p>''பொங்கல் வந்துடுச்சு... அடுத்தது, மார்ச் மாத டென்ஷன்தான். எனக்கென்னவோ பயமாவே இருக்கு'' என்றார் தோழி.</p>.<p>''குடும்பம்னு இருந்தா... செலவுகள் இருக்கத்தான் செய்யும். இருக்கறத வெச்சு, சிறப்பா வாழறதுலதானே இருக்கு கொண்டாட்டம்'' என்று நான் ஆறுதல் சொல்ல... அவருடைய முகபாவனையில் ஒரு மாற்றம்.</p>.<p>''நான் சொல்ல வந்ததே வேற. பிளஸ் 2 படிக்கும் மகளோட பரீட்சைக்கு இன்னும் ரெண்டு மாசம்கூட முழுசா இல்ல...''</p>.<p>இப்போதும் முந்திக் கொண்ட நான்...</p>.<p>''மார்க் குறைஞ்சுடும்... காலேஜுல ஸீட் கிடைக்காது... கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்கவேண்டி இருக்கும் இப்படியெல்லாம் நீயே முடிச்சுகள் போட்டு, பொண்ணோட எக்ஸாம் ஃபீவரை இன்னும் கூட்டிவிடாதே. நம்பிக்கையூட்டற மாதிரி நடந்துக்கோ'' என்றேன்.</p>.<p>''அட... என் பிரச்னையே வேறப்பா'' என்று மீண்டும் முகம்மாறியவர்,</p>.<p>''ஸ்கூல், டியூஷன்னு இத்தனை நாளா... கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அவ கூடவே ஓடிட்டிருந்தேன். பரீட்சை முடிஞ்சு, ஏதாவது வெளியூர் காலேஜுக்கு அவ படிக்கப் போயிட்டா... என் வாழ்க்கையே வெறுமையா ஆனது மாதிரியில்ல இருக்கும். டியூஷன்ல விட்டுட்டு, பக்கத்து பூங்காவுல வாக்கிங்; மத்த அம்மாக்களோட அரட்டை; பக்கத்து கோயிலுக்கு ஒரு நடைனு இருப்பேன். டயாபடீஸ், கட்டுப்பாட்டுல இருக்கும். 'இன்னிக்கு பொழுதை உருப்படியா கழிச்சோம்'ங்கிற திருப்தியிலயும்... களைப்பிலும் நிம்மதியான தூக்கமும் வரும். ஆனா, இனி எந்த வேலையும் இருக்காதே!'' </p>.<p>- சொல்லி முடித்தபோது தோழியின் கண்களில் நீர் முட்டியது. எனக்குள் கேள்வி முட்டியது...</p>.<p>'தோழி, இத்தனை நாட்களாக தன் மகளுக்கு உதவி செய்து வந்தாரா... அல்லது மகள், தன் அம்மாவுக்கு உதவி செய்து வந்தாளா?' </p>.<p>வாழ்க்கை முன்வைக்கும் கேள்விகளுக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>உரிமையுடன் </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஆசிரியர்</strong></span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ள்ளி செல்லும் பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கேயுரிய காலை நேர பரபரப்புக்கு... தோழியின் வீட்டில் துளியும் குறைவிருக்காது. </p>.<p>''ஒரு நாளைப் போல லேட்டா எழுந்திருக்கிறே... என்னிக்குத்தான் சீக்கிரமா ஸ்கூல் கிளம்புவே. வேகமா போறோம்ங்கற பேர்ல ரெண்டு பேரும் வண்டியிலிருந்து ரோட்டுல விழுந்தா... என்னாகறது?'' </p>.<p>- இப்படி ஏதாவது அனத்தியபடியேதான் சடை பின்னுவது, லஞ்ச் பாக்ஸ் கட்டுவது, ஸ்கூட்டியில் அழைத்துச் செல்வது அத்தனையும் நடக்கும்!</p>.<p>நிதானமான ஒரு ஞாயிற்றுக்கிழமை, கை நிறைய பைகளுடன் மார்க்கெட்டில் இருந்து கணவனுடன் வெளிப்பட்ட அந்தத் தோழியிடம் சிறிது உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.</p>.<p>''பொங்கல் வந்துடுச்சு... அடுத்தது, மார்ச் மாத டென்ஷன்தான். எனக்கென்னவோ பயமாவே இருக்கு'' என்றார் தோழி.</p>.<p>''குடும்பம்னு இருந்தா... செலவுகள் இருக்கத்தான் செய்யும். இருக்கறத வெச்சு, சிறப்பா வாழறதுலதானே இருக்கு கொண்டாட்டம்'' என்று நான் ஆறுதல் சொல்ல... அவருடைய முகபாவனையில் ஒரு மாற்றம்.</p>.<p>''நான் சொல்ல வந்ததே வேற. பிளஸ் 2 படிக்கும் மகளோட பரீட்சைக்கு இன்னும் ரெண்டு மாசம்கூட முழுசா இல்ல...''</p>.<p>இப்போதும் முந்திக் கொண்ட நான்...</p>.<p>''மார்க் குறைஞ்சுடும்... காலேஜுல ஸீட் கிடைக்காது... கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்கவேண்டி இருக்கும் இப்படியெல்லாம் நீயே முடிச்சுகள் போட்டு, பொண்ணோட எக்ஸாம் ஃபீவரை இன்னும் கூட்டிவிடாதே. நம்பிக்கையூட்டற மாதிரி நடந்துக்கோ'' என்றேன்.</p>.<p>''அட... என் பிரச்னையே வேறப்பா'' என்று மீண்டும் முகம்மாறியவர்,</p>.<p>''ஸ்கூல், டியூஷன்னு இத்தனை நாளா... கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அவ கூடவே ஓடிட்டிருந்தேன். பரீட்சை முடிஞ்சு, ஏதாவது வெளியூர் காலேஜுக்கு அவ படிக்கப் போயிட்டா... என் வாழ்க்கையே வெறுமையா ஆனது மாதிரியில்ல இருக்கும். டியூஷன்ல விட்டுட்டு, பக்கத்து பூங்காவுல வாக்கிங்; மத்த அம்மாக்களோட அரட்டை; பக்கத்து கோயிலுக்கு ஒரு நடைனு இருப்பேன். டயாபடீஸ், கட்டுப்பாட்டுல இருக்கும். 'இன்னிக்கு பொழுதை உருப்படியா கழிச்சோம்'ங்கிற திருப்தியிலயும்... களைப்பிலும் நிம்மதியான தூக்கமும் வரும். ஆனா, இனி எந்த வேலையும் இருக்காதே!'' </p>.<p>- சொல்லி முடித்தபோது தோழியின் கண்களில் நீர் முட்டியது. எனக்குள் கேள்வி முட்டியது...</p>.<p>'தோழி, இத்தனை நாட்களாக தன் மகளுக்கு உதவி செய்து வந்தாரா... அல்லது மகள், தன் அம்மாவுக்கு உதவி செய்து வந்தாளா?' </p>.<p>வாழ்க்கை முன்வைக்கும் கேள்விகளுக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>உரிமையுடன் </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஆசிரியர்</strong></span></p>