<p>மாணவர்களிடம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறையை மருத்துவமனையாக மாற்றினோம். மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளாக மாணவர்கள் நடித்தனர்.</p>.<p>நோயாளிகள், தங்களின் பிரச்னைகளை மருத்துவரிடம் சொல்லி, நடித்துக் காட்டினர். மேலும், நோயாளியாக நடிக்கும் மாணவன், தன் வீட்டுக்கு அருகே அசுத்தமாக இருக்கும் இடங்களைப் பற்றிக் கூற, அதனால் என்ன விளைவுகள் வரும் என்று மருத்துவராக நடித்த மாணவன் சொன்னான்.</p>.<p>உதாரணமாக... ஒரு மாணவனின் வீட்டருகே மழைநீர் தேங்கிவிடும். அதனால், ‘‘வீட்டுக்கு அருகே என்னால் விளையாட முடியாது” என்றான். வகுப்பில் அனைவரும் சிரித்தாலும், மழைநீர் தேங்கினால் என்னவாகும் என்று மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைக் கூறினார்கள்.</p>.<p>பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசு ஒழிப்புப் பற்றிய விழிப்பு உணர்வு பேரணியும் நடத்தினோம். மாணவர்கள், தங்களது சுற்றுப்புறத்தை எந்த அளவு உற்றுநோக்கி இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில் மதிப்பிடலாம்.</p>.<p style="text-align: right"><span style="color: #993300"> - ஜி.கிறிஸ்டோபர், <br /> மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, <br /> ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.<br /> </span></p>
<p>மாணவர்களிடம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறையை மருத்துவமனையாக மாற்றினோம். மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளாக மாணவர்கள் நடித்தனர்.</p>.<p>நோயாளிகள், தங்களின் பிரச்னைகளை மருத்துவரிடம் சொல்லி, நடித்துக் காட்டினர். மேலும், நோயாளியாக நடிக்கும் மாணவன், தன் வீட்டுக்கு அருகே அசுத்தமாக இருக்கும் இடங்களைப் பற்றிக் கூற, அதனால் என்ன விளைவுகள் வரும் என்று மருத்துவராக நடித்த மாணவன் சொன்னான்.</p>.<p>உதாரணமாக... ஒரு மாணவனின் வீட்டருகே மழைநீர் தேங்கிவிடும். அதனால், ‘‘வீட்டுக்கு அருகே என்னால் விளையாட முடியாது” என்றான். வகுப்பில் அனைவரும் சிரித்தாலும், மழைநீர் தேங்கினால் என்னவாகும் என்று மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைக் கூறினார்கள்.</p>.<p>பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் கொசு ஒழிப்புப் பற்றிய விழிப்பு உணர்வு பேரணியும் நடத்தினோம். மாணவர்கள், தங்களது சுற்றுப்புறத்தை எந்த அளவு உற்றுநோக்கி இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில் மதிப்பிடலாம்.</p>.<p style="text-align: right"><span style="color: #993300"> - ஜி.கிறிஸ்டோபர், <br /> மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, <br /> ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.<br /> </span></p>