
சொட்டு நீர்ப் பாசனம் பற்றிப் பாடத்தில் படித்ததை ஓர் எளிய சோதனை மூலம் மாணவர்களைச் செய்யவைக்கலாம். மாணவர்கள், ஆசிரியரின் உதவியுடன் இதைச் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் பாட்டில், கத்தி, ஊசி, தண்ணீர், தொட்டித் தாவரம்.
செய்முறை:


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை கத்தியால் அறுக்கவும். மூடியில் சிறு

துளையிடவும்.
• பாட்டிலைத் தலைகீழாக வைத்து, தண்ணீரால் நிரப்பவும்.
• மூடியில் உள்ள துளையின் வழியாக நீர், சொட்டுச்சொட்டாக வெளியேறும்.
• தொட்டியில் வைக்கப்பட்ட செடிக்கு அருகே, பாட்டிலின் மூடி உள்ள பகுதி மண்ணுக்குள் இருக்குமாறு செருகவும்.
• இப்போது, தொடர்ச்சியாக செடிக்கு நீர் கிடைக்கும். தண்ணீரும் வீணாகாது. நாம் சில நாட்கள் வெளியூர் செல்லும்போது, இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.
• மாணவர்கள் சோதனையைச் செய்யும் விதம், அதை மற்ற மாணவர்களுக்கு விளக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.