<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தே</strong></span>வையான பொருள்கள்: உபயோகமற்ற பிளாஸ்டிக் பாட்டில், பலூன்-1, செல்லோடேப், தடிமனான ஊசி அல்லது ஆணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, ஒரு அடி நீளமுள்ள மெல்லிய பிளாஸ்டிக்குழாய், காலியான ரீஃபிள், வண்ணத்தண்ணீர், வாசலைன்.<br /> <br /> செய்முறை: ஊசி அல்லது ஆணியை எரியும் மெழுகுவத்தியில் சூடுபடுத்தி, பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியிலும், பக்கவாட்டில் கழுத்துப் பகுதியிலும் துளைபோட வேண்டும்.<br /> <br /> மூடியில் உள்ள துளையின் வழியே, ஒரு அடி நீளமுள்ள பிளாஸ்டிக் குழாயை பாட்டிலின் அடிப்பகுதியைத் தொடும் அளவுக்குச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.<br /> <br /> கழுத்துப் பகுதியின் துளை வழியே, காலியான ரீஃபிளைச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.</p>.<p>பாட்டிலினுள் முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பி (ரீஃபிள் செருகிய மட்டத்துக்குக் கீழ் வரை), பாட்டிலை இறுக்கமாக மூட வேண்டும்.<br /> <br /> காலியான ரீஃபிளில் வாயைவைத்து ஊதினால், மூடியில் உள்ள பிளாஸ்டிக் குழாய் வழியே தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> எவ்வளவு வேகமாக ஊதுகிறோமோ, அவ்வளவு வேகமாக தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> வாயைவைத்து ஊதுவதற்குப் பதிலாக பலூனில் காற்றை நிரப்பி, அதனை ரீஃபிளில் செருகிவிட்டாலும் தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> விளக்கம்: பாட்டிலினுள் தண்ணீருக்கு மேல் உள்ள பகுதியில் காற்றழுத்தம் குறைவாகவும் பாட்டிலின் வெளியே காற்றழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.</p>.<p>ரீஃபிளில் வாயைவைத்து காற்றை ஊதும்போது, பாட்டிலின் உள்ளே காற்றழுத்தம் வெளியே உள்ளதைவிட அதிகரிக்கும்.<br /> <br /> காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்குச் செல்லும் என்பது அறிவியல் விதி.<br /> <strong><br /> - குணசேகர், ஊ,ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தே</strong></span>வையான பொருள்கள்: உபயோகமற்ற பிளாஸ்டிக் பாட்டில், பலூன்-1, செல்லோடேப், தடிமனான ஊசி அல்லது ஆணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, ஒரு அடி நீளமுள்ள மெல்லிய பிளாஸ்டிக்குழாய், காலியான ரீஃபிள், வண்ணத்தண்ணீர், வாசலைன்.<br /> <br /> செய்முறை: ஊசி அல்லது ஆணியை எரியும் மெழுகுவத்தியில் சூடுபடுத்தி, பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியிலும், பக்கவாட்டில் கழுத்துப் பகுதியிலும் துளைபோட வேண்டும்.<br /> <br /> மூடியில் உள்ள துளையின் வழியே, ஒரு அடி நீளமுள்ள பிளாஸ்டிக் குழாயை பாட்டிலின் அடிப்பகுதியைத் தொடும் அளவுக்குச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.<br /> <br /> கழுத்துப் பகுதியின் துளை வழியே, காலியான ரீஃபிளைச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.</p>.<p>பாட்டிலினுள் முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பி (ரீஃபிள் செருகிய மட்டத்துக்குக் கீழ் வரை), பாட்டிலை இறுக்கமாக மூட வேண்டும்.<br /> <br /> காலியான ரீஃபிளில் வாயைவைத்து ஊதினால், மூடியில் உள்ள பிளாஸ்டிக் குழாய் வழியே தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> எவ்வளவு வேகமாக ஊதுகிறோமோ, அவ்வளவு வேகமாக தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> வாயைவைத்து ஊதுவதற்குப் பதிலாக பலூனில் காற்றை நிரப்பி, அதனை ரீஃபிளில் செருகிவிட்டாலும் தண்ணீர் வெளியேறும்.<br /> <br /> விளக்கம்: பாட்டிலினுள் தண்ணீருக்கு மேல் உள்ள பகுதியில் காற்றழுத்தம் குறைவாகவும் பாட்டிலின் வெளியே காற்றழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.</p>.<p>ரீஃபிளில் வாயைவைத்து காற்றை ஊதும்போது, பாட்டிலின் உள்ளே காற்றழுத்தம் வெளியே உள்ளதைவிட அதிகரிக்கும்.<br /> <br /> காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்குச் செல்லும் என்பது அறிவியல் விதி.<br /> <strong><br /> - குணசேகர், ஊ,ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.</strong></p>