<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'பக்தி</strong> இயக்கத் துறவிகளால் கண்டிக்கப்பட்ட சமுதாயச் சீர்கேடுகள் இப்போதும் தொடர்கிறதா? அவற்றைத் தடுக்கத் தீர்வுகள் யாவை?’ - இந்தத் தலைப்பில், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்களைக்கொண்டு விவாத மேடை நடத்தப்பட்டது.</p>.<p>தலைமை ஆசிரியர் எஸ்.பரந்தாமன் முன்னிலையில் ஆசிரியர்கள் எம்.செல்வம் மற்றும் தி.கல்பனா ஆகியோர் நடத்திய விவாத மேடையில் மாணவர்கள் பேசியவற்றில் இருந்து...</p>.<p><strong>எஸ்.ஜெயச்சந்துரு:</strong> ''மாணிக்கவாசகர் பெரிதும் வலியுறுத்திய 'அன்பு’ ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி என்பது இப்பொழுது பொய்த்துப்போன ஒன்றாகிவிட்டது. குடும்பங்களுக்குள் அன்பைக் காண முடிவதில்லையே?''</p>.<p><strong>அ.மகாலட்சுமி: </strong>''ஏன் இல்லை என்கிறீர்கள்? மனிதர்களிடத்தில் அன்பு மிகுந்து காணப்படுகிறது. விலங்குகளிடம்கூட அன்பைக் காண முடிகிறது. நம் ஊருக்கு அருகில் உள்ள கீழ்பென்னாத்தூரில் மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குட்டிக் குரங்கைச் சூழ்ந்துநின்று அழுத, ஐந்து குரங்குகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா?''</p>.<p><strong>ஏ.குமரேஷ்: </strong>''ஆன்மிகப் பெரியவர்கள் 'கடவுள் ஒன்றே’ என்பதை வலியுறுத்தினர். ஆனால் இன்றோ, கடவுளின் பெயரால் பல சமூக அநீதிகள் நடப்பதைத் தினம் தினம் பத்திரிகைச் செய்திகளில் காண முடிகிறதே?''</p>.<p><strong>ர.மஞ்சுமாதேவி:</strong> ''இறை உணர்வை வளர்ப்பதன் மூலம் நல்லொழுக்கத்துடன் வாழலாம் என ஆசிரியர் கூறியதை நீங்கள் மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள். நாம் வளர்க்கும் இறை எண்ணம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.''</p>.<p><strong>வி.விமல்: </strong>''இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் வலியுறுத்திய வல்லபாச்சாரியாரின் எண்ணம் தகர்ந்துவிட்டதா என எனக்கு சந்தேகமாக உள்ளது!''</p>.<p><strong>இ.ராம்குமார்: </strong>''செஞ்சி பகுதியைச் சார்ந்த நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கும் நட்புக்கும் இலக்கணமாக நம் செஞ்சிக்கோட்டை மன்னர் ராஜாதேசிங்குக்கும் முகமது கானுக்குமான நட்பையும் உலகம் மறக்குமா?''</p>.<p><strong>அ.செந்தமிழ்ச் செல்வி: </strong>''ஏன் ஓர் உதாரணத்தை நாட்டுக்கே உரியதாகச் சொல்கிறீர்கள்? நாடுகளுக்கு இடையே போர் வரக் காரணமாகவும் மதங்களே அமைகின்றன.''</p>.<p><strong>இ.சந்துரு: </strong>''எங்கள் தெருவில், ஏன் எங்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் இருந்து அன்பைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறோமே!''</p>.<p><strong>வெ.உமாமகேஸ்வரி: </strong>''இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு கபீர் பாடிய வரிகள் சாட்சி!</p>.<p>''ஓ மனிதனே!</p>.<p>என்னை நீ எங்கே தேடுகிறாய்?</p>.<p>உன்னருகே இருக்கிறேன்'' என்னும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.''</p>.<p><strong>ஜெ.மாலதி:</strong> ''ராமானுஜர், 'உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை’ என்கின்ற நல்லெண்ணத்தை வலியுறுத்தினார். ஆனால், இன்னமும் சமூகத்தில் இக்கொடுமை உள்ளதைப் 'பரமக்குடி’, 'தர்மபுரி’ சம்பவங்கள் உண்மை என உரைக்கின்றனவே!''</p>.<p><strong>ஆர்.ரூபன்குமார்:</strong> ''நீங்கள் கூறியது அரிதாக நடப்பது. ஆனால், சாதி - மதங்களை உடைத்து இன்று கலப்புத் திருமணங்கள் நடப்பதை சமூகம் ஏற்றுக்கொள்கிறதே!''</p>.<p><strong>கோ.அபினா:</strong>''உருவ வழிபாட்டையும், மூடநம்பிக்கைகளையும் பெரிதும் எதிர்த்தார் குருநானக். ஆனால், இன்றும் எல்லா மதங்களிலும் இந்த மூடநம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிக்கிடக்கின்றனர்.''</p>.<p><strong>எம்.அருண்கிளிண்டன்:</strong> ''கணினி யுகத்தில், விண்ணைத் தொட்டு இடம்பிடிக்க போட்டியிட்டுக்கொண்டு உள்ளபோது, மூடநம்பிக்கைகளில் மூழ்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.''</p>.<p><strong>மு.செவ்வந்தி:</strong> ''ஆனால், அதே கணினிக்குப் பொட்டு வைத்து, பூ வைத்துப் பூஜைபோட்டுத்தானே துவங்குகிறோம்.''</p>.<p><strong>க.பாக்கியலெட்சுமி: </strong>''உண்மைதான். ஆனால், அது நம் கலாசாரத்தைச் சார்ந்தது.''</p>.<p><strong>க.தீபா:</strong> ''நம் கலாசாரத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் பல அறிவியல் சார்ந்தே வகுக்கப்பட்டது. அது தெரியாமல் சிலர் மூடநம்பிக்கை எனக் கருதுகிறார்கள்.''</p>.<p><strong>வி.கோபாலகிருஷ்ணர்:</strong>'' 'கடவுள் ஒன்றே’ என்ற எண்ணம் மக்களிடையே இன்று மறைந்துவிட்டது.''</p>.<p><strong>எஸ்.கதிர்வேல்:</strong> ''ஆம். ஆனால், அந்த நிலைமை கூடிய விரைவில் மாறும்.''</p>.<p>இறுதியாகப் பேசிய ஆசிரியர்கள், ''நாம் அனைவரும் சாதி, மதம், இனத்தைத் தாண்டி ஒற்றுமையோடு வாழ்ந்தாலே இனி வரும் சமூகம் பக்தத் துறவிகள் எண்ணியது போல அமையும்'' எனக் கூறி முடித்தனர்.</p>.<p>* இதே போல், உங்கள் வகுப்பிலும் பாடத்தை ஒட்டிய தலைப்புகளில் விவாதமேடை நடத்தலாம். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்துகொள்ளலாம்.</p>.<p style="text-align: right"><span style="color: #800080"> -ஸ்ரீ.திலீப், ஆசிரியர், <br /> அரசு மேல்நிலைப் பள்ளி, <br /> சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.</span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'பக்தி</strong> இயக்கத் துறவிகளால் கண்டிக்கப்பட்ட சமுதாயச் சீர்கேடுகள் இப்போதும் தொடர்கிறதா? அவற்றைத் தடுக்கத் தீர்வுகள் யாவை?’ - இந்தத் தலைப்பில், விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்களைக்கொண்டு விவாத மேடை நடத்தப்பட்டது.</p>.<p>தலைமை ஆசிரியர் எஸ்.பரந்தாமன் முன்னிலையில் ஆசிரியர்கள் எம்.செல்வம் மற்றும் தி.கல்பனா ஆகியோர் நடத்திய விவாத மேடையில் மாணவர்கள் பேசியவற்றில் இருந்து...</p>.<p><strong>எஸ்.ஜெயச்சந்துரு:</strong> ''மாணிக்கவாசகர் பெரிதும் வலியுறுத்திய 'அன்பு’ ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி என்பது இப்பொழுது பொய்த்துப்போன ஒன்றாகிவிட்டது. குடும்பங்களுக்குள் அன்பைக் காண முடிவதில்லையே?''</p>.<p><strong>அ.மகாலட்சுமி: </strong>''ஏன் இல்லை என்கிறீர்கள்? மனிதர்களிடத்தில் அன்பு மிகுந்து காணப்படுகிறது. விலங்குகளிடம்கூட அன்பைக் காண முடிகிறது. நம் ஊருக்கு அருகில் உள்ள கீழ்பென்னாத்தூரில் மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குட்டிக் குரங்கைச் சூழ்ந்துநின்று அழுத, ஐந்து குரங்குகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா?''</p>.<p><strong>ஏ.குமரேஷ்: </strong>''ஆன்மிகப் பெரியவர்கள் 'கடவுள் ஒன்றே’ என்பதை வலியுறுத்தினர். ஆனால் இன்றோ, கடவுளின் பெயரால் பல சமூக அநீதிகள் நடப்பதைத் தினம் தினம் பத்திரிகைச் செய்திகளில் காண முடிகிறதே?''</p>.<p><strong>ர.மஞ்சுமாதேவி:</strong> ''இறை உணர்வை வளர்ப்பதன் மூலம் நல்லொழுக்கத்துடன் வாழலாம் என ஆசிரியர் கூறியதை நீங்கள் மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள். நாம் வளர்க்கும் இறை எண்ணம் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.''</p>.<p><strong>வி.விமல்: </strong>''இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் வலியுறுத்திய வல்லபாச்சாரியாரின் எண்ணம் தகர்ந்துவிட்டதா என எனக்கு சந்தேகமாக உள்ளது!''</p>.<p><strong>இ.ராம்குமார்: </strong>''செஞ்சி பகுதியைச் சார்ந்த நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கும் நட்புக்கும் இலக்கணமாக நம் செஞ்சிக்கோட்டை மன்னர் ராஜாதேசிங்குக்கும் முகமது கானுக்குமான நட்பையும் உலகம் மறக்குமா?''</p>.<p><strong>அ.செந்தமிழ்ச் செல்வி: </strong>''ஏன் ஓர் உதாரணத்தை நாட்டுக்கே உரியதாகச் சொல்கிறீர்கள்? நாடுகளுக்கு இடையே போர் வரக் காரணமாகவும் மதங்களே அமைகின்றன.''</p>.<p><strong>இ.சந்துரு: </strong>''எங்கள் தெருவில், ஏன் எங்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் இருந்து அன்பைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறோமே!''</p>.<p><strong>வெ.உமாமகேஸ்வரி: </strong>''இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு கபீர் பாடிய வரிகள் சாட்சி!</p>.<p>''ஓ மனிதனே!</p>.<p>என்னை நீ எங்கே தேடுகிறாய்?</p>.<p>உன்னருகே இருக்கிறேன்'' என்னும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.''</p>.<p><strong>ஜெ.மாலதி:</strong> ''ராமானுஜர், 'உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை’ என்கின்ற நல்லெண்ணத்தை வலியுறுத்தினார். ஆனால், இன்னமும் சமூகத்தில் இக்கொடுமை உள்ளதைப் 'பரமக்குடி’, 'தர்மபுரி’ சம்பவங்கள் உண்மை என உரைக்கின்றனவே!''</p>.<p><strong>ஆர்.ரூபன்குமார்:</strong> ''நீங்கள் கூறியது அரிதாக நடப்பது. ஆனால், சாதி - மதங்களை உடைத்து இன்று கலப்புத் திருமணங்கள் நடப்பதை சமூகம் ஏற்றுக்கொள்கிறதே!''</p>.<p><strong>கோ.அபினா:</strong>''உருவ வழிபாட்டையும், மூடநம்பிக்கைகளையும் பெரிதும் எதிர்த்தார் குருநானக். ஆனால், இன்றும் எல்லா மதங்களிலும் இந்த மூடநம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிக்கிடக்கின்றனர்.''</p>.<p><strong>எம்.அருண்கிளிண்டன்:</strong> ''கணினி யுகத்தில், விண்ணைத் தொட்டு இடம்பிடிக்க போட்டியிட்டுக்கொண்டு உள்ளபோது, மூடநம்பிக்கைகளில் மூழ்கியதாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.''</p>.<p><strong>மு.செவ்வந்தி:</strong> ''ஆனால், அதே கணினிக்குப் பொட்டு வைத்து, பூ வைத்துப் பூஜைபோட்டுத்தானே துவங்குகிறோம்.''</p>.<p><strong>க.பாக்கியலெட்சுமி: </strong>''உண்மைதான். ஆனால், அது நம் கலாசாரத்தைச் சார்ந்தது.''</p>.<p><strong>க.தீபா:</strong> ''நம் கலாசாரத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் பல அறிவியல் சார்ந்தே வகுக்கப்பட்டது. அது தெரியாமல் சிலர் மூடநம்பிக்கை எனக் கருதுகிறார்கள்.''</p>.<p><strong>வி.கோபாலகிருஷ்ணர்:</strong>'' 'கடவுள் ஒன்றே’ என்ற எண்ணம் மக்களிடையே இன்று மறைந்துவிட்டது.''</p>.<p><strong>எஸ்.கதிர்வேல்:</strong> ''ஆம். ஆனால், அந்த நிலைமை கூடிய விரைவில் மாறும்.''</p>.<p>இறுதியாகப் பேசிய ஆசிரியர்கள், ''நாம் அனைவரும் சாதி, மதம், இனத்தைத் தாண்டி ஒற்றுமையோடு வாழ்ந்தாலே இனி வரும் சமூகம் பக்தத் துறவிகள் எண்ணியது போல அமையும்'' எனக் கூறி முடித்தனர்.</p>.<p>* இதே போல், உங்கள் வகுப்பிலும் பாடத்தை ஒட்டிய தலைப்புகளில் விவாதமேடை நடத்தலாம். மாணவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மதிப்பீடு செய்துகொள்ளலாம்.</p>.<p style="text-align: right"><span style="color: #800080"> -ஸ்ரீ.திலீப், ஆசிரியர், <br /> அரசு மேல்நிலைப் பள்ளி, <br /> சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.</span></p>