<p>ஒரு செவ்வக வடிவ மின் அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது, முன்பின் ஆடும் சிறிய அட்டை ஒன்றை மேல் பகுதி மட்டும் இணைந்திருக்குமாறு ஒட்டவும். செவ்வக வடிவ அட்டையில், ஏதாவது ஒரு சொல்லைப் பிரித்து, தெளிவாக எழுதிக்கொள்ளவும்.</p>.<p>முன்பின் ஆடும் சிறிய அட்டையின் மீது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, வருமொழியின் முதல் எழுத்து மற்றும் கூட்டல் குறியீடு ஆகியன மறையும் வகையில், மாற்றம்பெறும் எழுத்தைப் பெரியதாக எழுதவும்.</p>.<p>எ.கா: சேர்த்து எழுதுதல்: தாம் உள = தாமுள<br /> பிரித்து எழுதுதல்: தாமுள = தாம் உள</p>.<p>சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக செயல்பாட்டைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பதைவிட, மாணவர்கள் கையில் இந்த அட்டையைக் கொடுத்து, ஆசிரியர் விளக்குவதன் மூலம் தெளிவுபெறச் </p>.<p>செய்யலாம். பிறகு, மாணவர்களை அந்த அட்டையைக்கொண்டு விளக்கச் சொல்லுமாறு கேட்கலாம். மாணவர்கள், சந்தேகம் நீங்கித் தெளிவான விளக்கம் பெறுவார்கள்.</p>.<p>சேர்த்து எழுதும்போது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக அமைந்தால், அவை, இணைந்து உயிர் மெய் வடிவம் பெறும் என்பதைத் தெளிவாக அறிவார்கள். (ம் + உ = மு).</p>.<p>இதனையே பிரித்து எழுதும் செயல்பாட்டுக்கு, மேலே சொன்னவாறு இணைந்து நிற்கும் உயிர்மெய் வடிவம், மெய்யெழுத்தாகவும் உயிரெழுத்தாகவும் பிரியும் என்பதைத் தெளிவாக அறியலாம். (மு = ம் + உ)</p>.<p style="text-align: right"><span style="color: #993300">- ரெ.இரமாதேவி,<br /> அரசினர் உயர்நிலைப் பள்ளி,<br /> ஆவூர், தி.மலை மாவட்டம்.</span></p>
<p>ஒரு செவ்வக வடிவ மின் அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது, முன்பின் ஆடும் சிறிய அட்டை ஒன்றை மேல் பகுதி மட்டும் இணைந்திருக்குமாறு ஒட்டவும். செவ்வக வடிவ அட்டையில், ஏதாவது ஒரு சொல்லைப் பிரித்து, தெளிவாக எழுதிக்கொள்ளவும்.</p>.<p>முன்பின் ஆடும் சிறிய அட்டையின் மீது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, வருமொழியின் முதல் எழுத்து மற்றும் கூட்டல் குறியீடு ஆகியன மறையும் வகையில், மாற்றம்பெறும் எழுத்தைப் பெரியதாக எழுதவும்.</p>.<p>எ.கா: சேர்த்து எழுதுதல்: தாம் உள = தாமுள<br /> பிரித்து எழுதுதல்: தாமுள = தாம் உள</p>.<p>சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக செயல்பாட்டைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பதைவிட, மாணவர்கள் கையில் இந்த அட்டையைக் கொடுத்து, ஆசிரியர் விளக்குவதன் மூலம் தெளிவுபெறச் </p>.<p>செய்யலாம். பிறகு, மாணவர்களை அந்த அட்டையைக்கொண்டு விளக்கச் சொல்லுமாறு கேட்கலாம். மாணவர்கள், சந்தேகம் நீங்கித் தெளிவான விளக்கம் பெறுவார்கள்.</p>.<p>சேர்த்து எழுதும்போது, நிலைமொழியின் ஈற்றெழுத்து, மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக அமைந்தால், அவை, இணைந்து உயிர் மெய் வடிவம் பெறும் என்பதைத் தெளிவாக அறிவார்கள். (ம் + உ = மு).</p>.<p>இதனையே பிரித்து எழுதும் செயல்பாட்டுக்கு, மேலே சொன்னவாறு இணைந்து நிற்கும் உயிர்மெய் வடிவம், மெய்யெழுத்தாகவும் உயிரெழுத்தாகவும் பிரியும் என்பதைத் தெளிவாக அறியலாம். (மு = ம் + உ)</p>.<p style="text-align: right"><span style="color: #993300">- ரெ.இரமாதேவி,<br /> அரசினர் உயர்நிலைப் பள்ளி,<br /> ஆவூர், தி.மலை மாவட்டம்.</span></p>