Published:Updated:

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

Published:Updated:

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

`எனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை!'- கே.எஸ்.அழகிரி

``காவல்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ``எனது 50 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்துகொண்டதைப் பார்த்ததில்லை. கரூர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கிறார். அதற்கு மாவட்ட ஆட்சியர் அரசியல்வாதிபோல் அவர் ஒரு புகார் கொடுக்கிறார். மாவட்ட ஆட்சியரின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசியல்வாதியைப்போல செயல்படக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியரை உடனடியாக தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும்.

காவல்துறை, வருமான வரித்துறை ,தேர்தல் ஆணையம் ஆகியவை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக செயல்படுகிறது. ஜனநாயக மரபை மோடி மறந்து செயல்படுகிறார். தூத்துக்குடியில் கனிமொழி மீது தவறான எண்ணத்தை உருவாக்க வீட்டில் ரெய்டு நடத்தி  மிரட்டுகின்றனர். 70 ஆண்டு ஜனநாயகத்தை அழிக்கும் வேலையைப் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க. செய்து வருகிறது. எல்லா  தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடந்து வருகிறது. தேனியில் பணம் ஆறாக ஓடுகிறது. மக்கள் பணத்தின் மீது நடந்து செல்கிறார்கள்.  அங்கு தேர்தலை நிறுத்தாமல் வேலூரில் நிறுத்தியுள்ளனர். கரூரில் தேர்தலை நிறுத்த அனைத்து வேலைகளும் செய்துவருகிறார்கள்.  வருமானவரித் துறையினருக்கு யாரிடம் பணம் உள்ளது என்று தெரியும் அவர்களை விட்டுவிட்டு மற்ற எதிர்க்கட்சியினரை மிரட்டும் தோணியில் சோதனை செய்து வருகிறார்கள். ஒருவரைப் பணிய வைப்பதற்காக எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். அதன்பிறகு அதைத்  தூக்கி எறிகிறார்கள். ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயத்தை அவரிடம் கூறினேன். தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவில் வெற்றி பெறும்" என்று கூறினார்.