<p><strong>அ</strong>ண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூருடன் உரையாடிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, `பணத்தை மதித்து சரியாகக் கையாள்பவரிடம்தான் பணம் சேரும்’ என்றார். </p>.<p>ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்து, கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் இருவரில் ஒருவர் மட்டும் நன்கு முன்னேறுவதையும், அடுத்தவர் தடுமாறுவதையும் பார்த்திருக்கிறோம். முகேஷ் அம்பானி, அனில் அம்பானியைவிட வேறோர் உதாரணம் இதற்குத் தேவையில்லை.</p><p>அப்படியானால் பணத்தை ஈர்க்கும் சக்தியும், இழக்கும் தன்மையும் நம் ஜீனிலேயே இருக்கின்றனவா? `ஆம்’ என்கிறது ஜர்னல் ஆஃப் ஃபைனான்ஷியல் தெரபி. நமக்குச் சிறு வயதில் பணம் தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்கள், பணத்துடன் நமக்கான உறவில் ஏற்படக்கூடிய பிழைகளைத் தீர்மானிக்கின்றனவாம். இதனால் ஏற்படும் தாக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். உடல்/மனநலத்தை இழப்பதிலிருந்து, உறவினர்கள், நண்பர்கள், ஏன்... கணவன்/மனைவியை இழப்பது வரை இந்தப் பணப்பிழைகளின் விளைவுகள் ஏராளம். </p><p>பணத்தை நிர்வகிக்கும்போது எல்லா விஷயங்களையும் எல்லோரும் மிகச் சரியாகச் செய்துவிடுவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்பச் செயல்படுகின்றனர். பொதுவாக, மனிதர்களிடம் பண நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் நான்குவிதமான போக்குகள் காணப்படுவதாக ஃபைனான்ஷியல் தெரபிஸ்டுகள் கூறுகிறார்கள். அந்த நான்கு வகைகள்...</p>.<p><strong>1. பண விஷயங்களைத் தவிர்க்க விரும்புபவர்கள்</strong></p><p>கரன்ட் பில், வாடகை, போன் பில் போன்றவற்றைத் தாமதமாகச் செலுத்துவது, பேங்க் ஸ்டேட்மென்ட், பத்திரங்கள் போன்றவற்றை மேம்போக்காகப் பார்ப்பது, அவசரகால நிதி, ஓய்வுக்கால சேமிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வமில்லாமலிருப்பது... இவையெல்லாம் இவர்களின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `எனக்கும், ஃபைனான்ஸ் விஷயங்களுக்கும் ரொம்ப தூரம்’, `எப்போ பார்த்தாலும் பணம் பணம்னு அலையறது தப்பு’, `பணம் எங்கே ஓடிப் போகப்போகுது... நாளைக்குப் பாத்துக்கலாம்.’</p><p>இத்தகைய மனநிலையால் ஏற்படும் நன்மை, தீமை எனப் பார்த்தோமானால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதை `நன்மை’ எனலாம். பணப் பற்றாக்குறையால் வாழ்வின் பிற்பகுதியில் கஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளதை `தீமை’ எனலாம். </p><p>இத்தகைய மனபோக்கு உடையவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத பண நிர்வாகம் தொடர்பான செயல்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கலாம். சேமிப்பு, முதலீடு, இ.எம்.ஐ போன்றவற்றை வங்கியில் ஒப்புதல் தருவதன் மூலம் ஆட்டோமேட் செய்யலாம். சற்று அதிகமாகப் பணப்புழக்கம் உள்ளவர்கள் ஆடிட்டர்கள், நிதி ஆலோசகர்கள் மூலம் நிதி நிர்வாகம் செய்ய முற்படலாம்.</p><p><strong>2. செலவு என்றாலே பதறுபவர்கள்</strong></p><p>பணத்தைப் பற்றிய அதீதக் கவலை, `சிக்கனம்’ என்ற பெயரில் கஞ்சத்தனத்தைப் பின்பற்றுவது, நிறைய பணம் இருந்தாலும் செலவழிக்க அஞ்சுவது இவையெல்லாம் பதற்ற மனதுக்காரர்களின் அம்சங்கள். பணத்தைச் சேர்ப்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள். அதற்காக எங்கெல்லாம் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, ஆஃபர் கிடைக்கிறது என்று கவனித்த வண்ணமிருப்பார்கள். கையில் பணமிருந்தாலும்கூட, அடிக்கடி பணப் பற்றாக்குறை பற்றியே மற்றவர்களிடம் சொல்லிப் புலம்புவார்கள்.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `தனக்காக அதிகம் செலவழிப்பது தவறு, `வருமுன் காப்பது நல்லது’, `எதையும் ஒரு முறைக்குப் பத்து முறை யோசித்து வாங்க வேண்டும்.</p><p>இந்த மனநிலையால் ஏற்படும் சாதக பாதகம் என்ன எனப் பார்த்தோமானால், எப்பேர்ப்பட்ட அவசரநிலைக்கும் தயார்நிலையில் இருப்பதை, `சாதகம்’ எனலாம். லாபகரமான ஆஃபர்கள் இவர்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. </p><p>ரிஸ்க் எடுக்க மிகவும் தயங்குவதையும், சேமித்தச் செல்வத்தை அனுபவிக்கக்கூட ஆயிரம் முறை யோசிப்பதையும் `பாதகம்’ எனக் கருதலாம்.</p><p>வாழ்வின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தோஷச் செலவுகளுக்காகப் பணம் ஒதுக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் குற்ற உணர்வின்றி வாழ்க்கையை ரசிக்கலாம்.</p>.<p><strong>3. பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள்</strong></p><p>கிராமங்களில் `ஓட்டைக் கை’ என்று பெயர் வாங்குவது இவர்கள்தான். `சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்’ என்று சொல்லி, தங்களையறியாமல் பெரிய மீன்களையே அள்ளி வீசுபவர்கள். பட்ஜெட் போட்டுச் செலவுசெய்வது, திட்டமிட்டுப் பொருள்கள் வாங்குவது என்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே கிடையாது.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `என்ன பெரிய செலவு பண்ணிட்டேன்?’, `பணம்தானே போச்சு, தலை போகலையே...’, `மேல போகையில பணத்தை எடுத்துக்கிட்டா போகப் போறோம்?’</p><p>இதன் சாதக பாதகங்ள் எனப் பார்த்தோமானால், கஞ்சத்தனம் இல்லாமல் எல்லோருக்கும் செலவு செய்யும் நல்ல மனது இருப்பதையும், சில நேரங்களில் இவர்கள் எடுக்கும் ரிஸ்க் பெரிய பலன்களைக் கொடுப்பதையும் `சாதகம்’ எனலாம். சிஸ்டமேட்டிக்காகச் சேமிக்க முடியாமல் போவதைப் `பாதகம்’ எனலாம்.</p>.<div><blockquote>தங்கள் குறையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் முன்னரோ அல்லது பெரிய செலவுகள் செய்யும் முன்னரோ தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பது, பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்களுக்கு நன்மை தரும்.</blockquote><span class="attribution"></span></div>.<p>தங்கள் குறையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் முன்னரோ அல்லது பெரிய செலவுகள் செய்யும் முன்னரோ தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பது இவர்களுக்கு நன்மை தரும்.</p><p><strong>4. பணத்துக்கு அதீத முக்கியத்துவம் தருபவர்கள்</strong></p><p>இவர்கள் பணத்தை வழிபடுவார்கள். பண விஷயத்தில் போட்டி, பொறாமை அதிகம் உள்ளவர்கள். தங்களைச் செல்வந்தர்களாகக் காட்டிக்கொள்வதில் ஆனந்தம் அடைவார்கள். ஆடம்பரப் பிரியர்கள். </p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `இன்னும் கொஞ்சம் பணம் கிடைச்சா என் லெவலே வேற...’, `பணம் பாதாளம் வரைக்கும் பாயும்!’</p><p>இதன் நன்மை, தீமைகள் எனப் பார்த்தோமானால், சமூகத்தில் நல்ல நிலையை அடைவதற்கு அதிகம் உழைக்கத் தயாராக இருப்பதை `நன்மை’ எனலாம். தகுதிக்கு மீறிச் செலவு செய்வதையும், அதற்காகக் கடன் வாங்குவதையும், குறுக்குவழியில் சம்பாதிக்க முயல்வதையும் `தீமை’ எனலாம். இது, இவர்களைக் கீழே தள்ளிவிடக்கூடும்.</p><p>நல்ல நிலைமைக்குவர ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை; அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. பணத்தைக் கையாளுவதில் நான்கு விதமான போக்குகளைப் பார்த்தோம். இந்த நான்கு வகைகளில் நாம் எந்த வகை என அடையாளம் கண்டு சரி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.</p>
<p><strong>அ</strong>ண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூருடன் உரையாடிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, `பணத்தை மதித்து சரியாகக் கையாள்பவரிடம்தான் பணம் சேரும்’ என்றார். </p>.<p>ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்து, கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் இருவரில் ஒருவர் மட்டும் நன்கு முன்னேறுவதையும், அடுத்தவர் தடுமாறுவதையும் பார்த்திருக்கிறோம். முகேஷ் அம்பானி, அனில் அம்பானியைவிட வேறோர் உதாரணம் இதற்குத் தேவையில்லை.</p><p>அப்படியானால் பணத்தை ஈர்க்கும் சக்தியும், இழக்கும் தன்மையும் நம் ஜீனிலேயே இருக்கின்றனவா? `ஆம்’ என்கிறது ஜர்னல் ஆஃப் ஃபைனான்ஷியல் தெரபி. நமக்குச் சிறு வயதில் பணம் தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்கள், பணத்துடன் நமக்கான உறவில் ஏற்படக்கூடிய பிழைகளைத் தீர்மானிக்கின்றனவாம். இதனால் ஏற்படும் தாக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். உடல்/மனநலத்தை இழப்பதிலிருந்து, உறவினர்கள், நண்பர்கள், ஏன்... கணவன்/மனைவியை இழப்பது வரை இந்தப் பணப்பிழைகளின் விளைவுகள் ஏராளம். </p><p>பணத்தை நிர்வகிக்கும்போது எல்லா விஷயங்களையும் எல்லோரும் மிகச் சரியாகச் செய்துவிடுவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்பச் செயல்படுகின்றனர். பொதுவாக, மனிதர்களிடம் பண நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் நான்குவிதமான போக்குகள் காணப்படுவதாக ஃபைனான்ஷியல் தெரபிஸ்டுகள் கூறுகிறார்கள். அந்த நான்கு வகைகள்...</p>.<p><strong>1. பண விஷயங்களைத் தவிர்க்க விரும்புபவர்கள்</strong></p><p>கரன்ட் பில், வாடகை, போன் பில் போன்றவற்றைத் தாமதமாகச் செலுத்துவது, பேங்க் ஸ்டேட்மென்ட், பத்திரங்கள் போன்றவற்றை மேம்போக்காகப் பார்ப்பது, அவசரகால நிதி, ஓய்வுக்கால சேமிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வமில்லாமலிருப்பது... இவையெல்லாம் இவர்களின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `எனக்கும், ஃபைனான்ஸ் விஷயங்களுக்கும் ரொம்ப தூரம்’, `எப்போ பார்த்தாலும் பணம் பணம்னு அலையறது தப்பு’, `பணம் எங்கே ஓடிப் போகப்போகுது... நாளைக்குப் பாத்துக்கலாம்.’</p><p>இத்தகைய மனநிலையால் ஏற்படும் நன்மை, தீமை எனப் பார்த்தோமானால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதை `நன்மை’ எனலாம். பணப் பற்றாக்குறையால் வாழ்வின் பிற்பகுதியில் கஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளதை `தீமை’ எனலாம். </p><p>இத்தகைய மனபோக்கு உடையவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத பண நிர்வாகம் தொடர்பான செயல்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கலாம். சேமிப்பு, முதலீடு, இ.எம்.ஐ போன்றவற்றை வங்கியில் ஒப்புதல் தருவதன் மூலம் ஆட்டோமேட் செய்யலாம். சற்று அதிகமாகப் பணப்புழக்கம் உள்ளவர்கள் ஆடிட்டர்கள், நிதி ஆலோசகர்கள் மூலம் நிதி நிர்வாகம் செய்ய முற்படலாம்.</p><p><strong>2. செலவு என்றாலே பதறுபவர்கள்</strong></p><p>பணத்தைப் பற்றிய அதீதக் கவலை, `சிக்கனம்’ என்ற பெயரில் கஞ்சத்தனத்தைப் பின்பற்றுவது, நிறைய பணம் இருந்தாலும் செலவழிக்க அஞ்சுவது இவையெல்லாம் பதற்ற மனதுக்காரர்களின் அம்சங்கள். பணத்தைச் சேர்ப்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள். அதற்காக எங்கெல்லாம் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, ஆஃபர் கிடைக்கிறது என்று கவனித்த வண்ணமிருப்பார்கள். கையில் பணமிருந்தாலும்கூட, அடிக்கடி பணப் பற்றாக்குறை பற்றியே மற்றவர்களிடம் சொல்லிப் புலம்புவார்கள்.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `தனக்காக அதிகம் செலவழிப்பது தவறு, `வருமுன் காப்பது நல்லது’, `எதையும் ஒரு முறைக்குப் பத்து முறை யோசித்து வாங்க வேண்டும்.</p><p>இந்த மனநிலையால் ஏற்படும் சாதக பாதகம் என்ன எனப் பார்த்தோமானால், எப்பேர்ப்பட்ட அவசரநிலைக்கும் தயார்நிலையில் இருப்பதை, `சாதகம்’ எனலாம். லாபகரமான ஆஃபர்கள் இவர்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. </p><p>ரிஸ்க் எடுக்க மிகவும் தயங்குவதையும், சேமித்தச் செல்வத்தை அனுபவிக்கக்கூட ஆயிரம் முறை யோசிப்பதையும் `பாதகம்’ எனக் கருதலாம்.</p><p>வாழ்வின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தோஷச் செலவுகளுக்காகப் பணம் ஒதுக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் குற்ற உணர்வின்றி வாழ்க்கையை ரசிக்கலாம்.</p>.<p><strong>3. பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள்</strong></p><p>கிராமங்களில் `ஓட்டைக் கை’ என்று பெயர் வாங்குவது இவர்கள்தான். `சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்’ என்று சொல்லி, தங்களையறியாமல் பெரிய மீன்களையே அள்ளி வீசுபவர்கள். பட்ஜெட் போட்டுச் செலவுசெய்வது, திட்டமிட்டுப் பொருள்கள் வாங்குவது என்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே கிடையாது.</p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `என்ன பெரிய செலவு பண்ணிட்டேன்?’, `பணம்தானே போச்சு, தலை போகலையே...’, `மேல போகையில பணத்தை எடுத்துக்கிட்டா போகப் போறோம்?’</p><p>இதன் சாதக பாதகங்ள் எனப் பார்த்தோமானால், கஞ்சத்தனம் இல்லாமல் எல்லோருக்கும் செலவு செய்யும் நல்ல மனது இருப்பதையும், சில நேரங்களில் இவர்கள் எடுக்கும் ரிஸ்க் பெரிய பலன்களைக் கொடுப்பதையும் `சாதகம்’ எனலாம். சிஸ்டமேட்டிக்காகச் சேமிக்க முடியாமல் போவதைப் `பாதகம்’ எனலாம்.</p>.<div><blockquote>தங்கள் குறையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் முன்னரோ அல்லது பெரிய செலவுகள் செய்யும் முன்னரோ தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பது, பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்களுக்கு நன்மை தரும்.</blockquote><span class="attribution"></span></div>.<p>தங்கள் குறையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் முன்னரோ அல்லது பெரிய செலவுகள் செய்யும் முன்னரோ தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பது இவர்களுக்கு நன்மை தரும்.</p><p><strong>4. பணத்துக்கு அதீத முக்கியத்துவம் தருபவர்கள்</strong></p><p>இவர்கள் பணத்தை வழிபடுவார்கள். பண விஷயத்தில் போட்டி, பொறாமை அதிகம் உள்ளவர்கள். தங்களைச் செல்வந்தர்களாகக் காட்டிக்கொள்வதில் ஆனந்தம் அடைவார்கள். ஆடம்பரப் பிரியர்கள். </p><p>இவர்களின் தாரக மந்திரங்கள்... `இன்னும் கொஞ்சம் பணம் கிடைச்சா என் லெவலே வேற...’, `பணம் பாதாளம் வரைக்கும் பாயும்!’</p><p>இதன் நன்மை, தீமைகள் எனப் பார்த்தோமானால், சமூகத்தில் நல்ல நிலையை அடைவதற்கு அதிகம் உழைக்கத் தயாராக இருப்பதை `நன்மை’ எனலாம். தகுதிக்கு மீறிச் செலவு செய்வதையும், அதற்காகக் கடன் வாங்குவதையும், குறுக்குவழியில் சம்பாதிக்க முயல்வதையும் `தீமை’ எனலாம். இது, இவர்களைக் கீழே தள்ளிவிடக்கூடும்.</p><p>நல்ல நிலைமைக்குவர ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை; அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. பணத்தைக் கையாளுவதில் நான்கு விதமான போக்குகளைப் பார்த்தோம். இந்த நான்கு வகைகளில் நாம் எந்த வகை என அடையாளம் கண்டு சரி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.</p>