<blockquote>ஏறத்தாழ நூறு நாடுகளைத் தாண்டி `கோவிட்-19' கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில், கடந்த இரு வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள்.</blockquote>.<p>இத்தகைய சூழலில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? </p><p>இதுகுறித்து மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் விளக்குகிறார்.</p>.<p>`கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், அவர்களின் தாய்மார்கள் என யாராக இருந்தாலும் சுயசுத்தம் மூலமாக கொரோனாவை எளிதாகத் தடுத்துவிடலாம்.</p>.<ul><li><p> சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.</p></li><li><p> ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.</p></li><li><p> வீட்டில் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.</p></li><li><p> இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது. </p></li><li><p> ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.</p></li><li><p> கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.</p></li><li><p> கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டு பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.</p></li><li><p> காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.</p></li></ul>.<ul><li><p> தாய்ப்பால் கொடுக்கும் முன், தாய்மார்கள் சுயசுத்தத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும். </p></li><li><p> தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.</p></li><li><p> சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளின் பொருள்களைக் கையாள்வதில் கவனமாக இருத்தல் அவசியம்.</p></li><li><p> பெற்றோர் இருவரும், குழந்தைகளுக்கு சுய சுத்தத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஹேண்ட் வாஷ் உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்து வது கட்டாயம்.</p></li><li><p> சில குழந்தைகளுக்கு, கைகளை அடிக்கடி முகத்துக்குக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்திலிருந்து அவர்களை வெளிக்கொணரவும்.</p></li><li><p> குழந்தைகள் எப்போதும் காற்றோட்டமான இடத்தில் இருப்பது நல்லது.</p></li></ul>.<ul><li><p>பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சுய சுத்தத்தை எடுத்துரைக்கும்போது, அவர்களுக்கு நோய் குறித்த தகவல்களைக் கதையாகச் சொல்வது நல்லது. காரணம், கொரோனா குறித்து அப்படியே சொன்னால், குழந்தைகள் பதற்றம் அல்லது பயம் கொள்ள நேரிடும்.</p></li></ul>.<ul><li><p>கொரோனா மற்றும் சுய சுத்தம் சார்ந்த சந்தேகம் ஏதும் குழந்தைகளுக்கு இருக்கிறதா எனப் பெற்றோர் அவ்வப்போது விசாரித்து, அவற்றை முறையாகத் தெளிவுபடுத்தவும். </p></li></ul><ul><li><p>சுய சுத்தத்தை குழந்தைகள் பின்பற்றுகிறார்களா என்பதைப் பெற்றோர் அடிக்கடி உறுதிசெய்யவும்.</p></li><li><p>சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்மார்கள், குழந்தை யோடு நேரம் செலவிடும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p></li><li><p>தொற்றுப்பிரச்னைக்கான தீவிரம் அதிகமுள்ள குழந்தைகள், சுவாச சிக்கல்கள் உள்ள குழந்தைகள் ஆகியோரை, பெற்றோர் கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொள்ள வேண்டும். உடல்நலன் விஷயத்தில் வழக்கத்துக்கு மீறிய, இயல்புக்கு அப்பாற்பட்டு இந்தக் குழந்தைகள் ஏதேனும் செய்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.</p></li></ul>.<ul><li><p>தாய்ப்பால் கொடுத்தால், கொரோனா பரவும்.</p></li><li><p>கர்ப்பிணிகள், மிகச் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்படும்.</p></li><li><p>கர்ப்பிணிக்கு பாதிப்பு ஏற்பட்டால், சிசுவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.</p></li><li><p>கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், கருக்கலைப்பு நிகழலாம்.</p></li><li><p>இருமல் தும்மல் இருந்தாலே, அது கொரோனா பாதிப்புதான்.</p></li><li><p>கொரோனா பாதிப்பில், இறப்பு விகிதம் அதிகம்.</p></li></ul>.<p>மேற்கண்ட ஆறு தகவல்களும் அறிவியல் அடிப்படையற்ற வெற்று வதந்திகளே... கவலை வேண்டாம்!</p>.<ul><li><p>சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தெரியவரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் கட்டாய விடுப்பு கொடுக்கவும்.</p></li><li><p>இருமல், தும்மல் போன்ற சிக்கலுள்ள குழந்தைகளுக்கு, முழங்கைக்கு அடியில் தும்முவது, இருமுவதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p></li><li><p>இவை அனைத்தையும்விட முக்கியமானது, கொரோனா குறித்து பதற்றமடையாமல் இருப்பது. நமக்குத் தேவைப்படுவதெல்லாம் விழிப்புணர்வு மட்டும்தானே அன்றி, பயம் இல்லை!</p></li></ul>.<h2>24 மணி நேர கொரோனா உதவி எண்கள்</h2><p>24 மணி நேர உதவி எண்: 104 / 011-23978046</p><p>தொலைபேசி: 044-29510400 / 044-29510500</p><p>கைப்பேசி: 9444340496 / 8754448477</p><p>கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்கண்ட எண்களில் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.</p>
<blockquote>ஏறத்தாழ நூறு நாடுகளைத் தாண்டி `கோவிட்-19' கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில், கடந்த இரு வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள்.</blockquote>.<p>இத்தகைய சூழலில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? </p><p>இதுகுறித்து மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் விளக்குகிறார்.</p>.<p>`கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், அவர்களின் தாய்மார்கள் என யாராக இருந்தாலும் சுயசுத்தம் மூலமாக கொரோனாவை எளிதாகத் தடுத்துவிடலாம்.</p>.<ul><li><p> சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.</p></li><li><p> ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.</p></li><li><p> வீட்டில் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.</p></li><li><p> இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது. </p></li><li><p> ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.</p></li><li><p> கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.</p></li><li><p> கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டு பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.</p></li><li><p> காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.</p></li></ul>.<ul><li><p> தாய்ப்பால் கொடுக்கும் முன், தாய்மார்கள் சுயசுத்தத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும். </p></li><li><p> தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.</p></li><li><p> சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளின் பொருள்களைக் கையாள்வதில் கவனமாக இருத்தல் அவசியம்.</p></li><li><p> பெற்றோர் இருவரும், குழந்தைகளுக்கு சுய சுத்தத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஹேண்ட் வாஷ் உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்து வது கட்டாயம்.</p></li><li><p> சில குழந்தைகளுக்கு, கைகளை அடிக்கடி முகத்துக்குக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்திலிருந்து அவர்களை வெளிக்கொணரவும்.</p></li><li><p> குழந்தைகள் எப்போதும் காற்றோட்டமான இடத்தில் இருப்பது நல்லது.</p></li></ul>.<ul><li><p>பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சுய சுத்தத்தை எடுத்துரைக்கும்போது, அவர்களுக்கு நோய் குறித்த தகவல்களைக் கதையாகச் சொல்வது நல்லது. காரணம், கொரோனா குறித்து அப்படியே சொன்னால், குழந்தைகள் பதற்றம் அல்லது பயம் கொள்ள நேரிடும்.</p></li></ul>.<ul><li><p>கொரோனா மற்றும் சுய சுத்தம் சார்ந்த சந்தேகம் ஏதும் குழந்தைகளுக்கு இருக்கிறதா எனப் பெற்றோர் அவ்வப்போது விசாரித்து, அவற்றை முறையாகத் தெளிவுபடுத்தவும். </p></li></ul><ul><li><p>சுய சுத்தத்தை குழந்தைகள் பின்பற்றுகிறார்களா என்பதைப் பெற்றோர் அடிக்கடி உறுதிசெய்யவும்.</p></li><li><p>சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்மார்கள், குழந்தை யோடு நேரம் செலவிடும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p></li><li><p>தொற்றுப்பிரச்னைக்கான தீவிரம் அதிகமுள்ள குழந்தைகள், சுவாச சிக்கல்கள் உள்ள குழந்தைகள் ஆகியோரை, பெற்றோர் கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொள்ள வேண்டும். உடல்நலன் விஷயத்தில் வழக்கத்துக்கு மீறிய, இயல்புக்கு அப்பாற்பட்டு இந்தக் குழந்தைகள் ஏதேனும் செய்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.</p></li></ul>.<ul><li><p>தாய்ப்பால் கொடுத்தால், கொரோனா பரவும்.</p></li><li><p>கர்ப்பிணிகள், மிகச் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்படும்.</p></li><li><p>கர்ப்பிணிக்கு பாதிப்பு ஏற்பட்டால், சிசுவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.</p></li><li><p>கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், கருக்கலைப்பு நிகழலாம்.</p></li><li><p>இருமல் தும்மல் இருந்தாலே, அது கொரோனா பாதிப்புதான்.</p></li><li><p>கொரோனா பாதிப்பில், இறப்பு விகிதம் அதிகம்.</p></li></ul>.<p>மேற்கண்ட ஆறு தகவல்களும் அறிவியல் அடிப்படையற்ற வெற்று வதந்திகளே... கவலை வேண்டாம்!</p>.<ul><li><p>சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தெரியவரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் கட்டாய விடுப்பு கொடுக்கவும்.</p></li><li><p>இருமல், தும்மல் போன்ற சிக்கலுள்ள குழந்தைகளுக்கு, முழங்கைக்கு அடியில் தும்முவது, இருமுவதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p></li><li><p>இவை அனைத்தையும்விட முக்கியமானது, கொரோனா குறித்து பதற்றமடையாமல் இருப்பது. நமக்குத் தேவைப்படுவதெல்லாம் விழிப்புணர்வு மட்டும்தானே அன்றி, பயம் இல்லை!</p></li></ul>.<h2>24 மணி நேர கொரோனா உதவி எண்கள்</h2><p>24 மணி நேர உதவி எண்: 104 / 011-23978046</p><p>தொலைபேசி: 044-29510400 / 044-29510500</p><p>கைப்பேசி: 9444340496 / 8754448477</p><p>கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்கண்ட எண்களில் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.</p>