<p><strong>https://twitter.com/cablesankar</strong></p><p>வெங்காய விலையேற்றக்காலம்தான் ஹோட்டல் ஆம்லெட்டுக்கு அப்ரைசல் காலம்.</p>.<p><strong>https://twitter.com/arattaigirl</strong></p><p>குளிர்காலத்திலும் அசந்து தூங்க முடியாத அளவு பொறுப்புணர்வோடு இருப்பதெல்லாம் சாபம்.</p><p><strong>https://twitter.com/mrithulaM</strong></p><p>ஓட்டலில் நாம் ஆர்டர் பண்ணும் உணவு, லேட்டா வந்தா, ப்ரெஷ்ஷா ரெடியாகி வருதுன்னு நம்ப வச்சிட்டாங்க.</p><p><strong>https://twitter.com/kumarfaculty</strong></p><p>வலதுசாரிகளை இடதுசாரிகளாகவும், இடதுசாரிகளை வலதுசாரிகளாகவும் மாற்றிவிடுகிறது செல்ஃபி...!</p>.<p><strong>https://twitter.com/iVenpu</strong></p><p>மூன்று பாலியல் வழக்குகள்... ஒண்ணு பொள்ளாச்சி, ரெண்டு ஹைதராபாத், மூணு நித்யானந்தா... மூணுலயும் நம்ம சட்டம் எப்படி நடந்துகிட்டு இருக்குன்னு பார்த்து நாமளே ஒரு முடிவுக்கு வரலாம்.</p>. <p><strong>facebook.com//Ilango Krishnan</strong></p><p>“அப்பா இங்கிலீஷைக் கண்டுபிடிச்சது யாருப்பா?”</p><p>“இங்கிலீஷ்காரங்க.”</p><p>“அப்போ எங்க இங்கிலீஷ்மிஸ் இங்கிலீஷ்காரங்களா?”</p><p>“இல்லடா, அவுங்க சொல்லித் தரவங்க. இங்கிலீஷ்காரங்க இங்கிலாந்தில் அமெரிக்காவில்தான் இருப்பாங்க.”</p><p>“அப்பா அப்பா மேத்ஸ்காரங்க எந்த நாட்டில் இருப்பாங்க?”</p><p>“மேத்ஸ்காரங்களா... மேத்ஸ்காரங்கன்னு யாரும் கிடையாது பாப்பா...”</p><p>“அப்புறம் எப்படி எங்க மேத்ஸ் மிஸ்ஸுக்கு மேத்ஸ் தெரியுது?”</p><p>மகளே, போதும் நிறுத்திக்குவோம்...</p>.<p><strong>facebook.com// Bogan Sankar</strong></p><p>ஃபேஸ்புக் வருவதற்கு முன்பு எல்லாவற்றைப் பற்றியும் எனக்குக் கருத்துகள் இருந்தன. நான் ஒரு சிந்தனையாளன் என்பது எனக்கு எப்படியோ தெரியாமல்போய்விட்டது.</p><p>ஃபேஸ்புக் வந்தபிறகுதான் எனக்கு நிறைய காதலிகள் இருந்திருக்கிறார்கள், நான் ஒரு காதல் மன்னன் என்பதும் எனக்குத் தெரியவந்தது. நான் அவசரப்படாமல் ஃபேஸ்புக் வரும்வரை காத்திருந்து பிறந்திருக்கலாம். </p>.<p><strong>https://twitter.com/ChainTweter</strong></p><p>கியூ வரிசை, நடு சென்டர், டான்ஸ் ஆடுறது வரிசையில Corn flour மாவு! Corn flour என்பதே சோள மாவுதான் அன்பர்களே...</p><p><strong>https://twitter.com/aloor_ShaNavas</strong></p><p>ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?</p><p>“அவர்கள் மதவழியில் ஒடுக்கப்படவில்லை!”</p><p>“மதவழியில் ஒடுக்கப்பட்ட ரோகிங்யாக்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?”</p><p>“அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்!”</p><p>``சீனாவுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களை ஏற்கிறீர்களே அது எப்படி?”</p><p>அது வந்து...</p>.<p><strong>https://twitter.com/Raittuvidu</strong></p><p>தமிழனுக்கு அடுத்தவன திட்டுறதுக்கும்கூட வெங்காயம்ன்றது தேவை... இதுல வெங்காயம் இல்லாம சமைங்களேன்றானுங்க.. அடேய்...</p><p><strong>https://twitter.com/salma_poet</strong></p><p>உள்ளாட்சி அமைப்பு மட்டும்தான் அடித்தட்டு மக்களையும் பெண்களையும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவது. அதைக் குறைவாக மதிப்பிடுவது என்பது மிக மோசமான மனநிலை. ஸாரி திரு கமல் சார்!</p>.<p><strong>https://twitter.com/smhrkalifa</strong></p><p>நாம் தூங்கும் நேரத்தையும் எழும்பும் நேரத்தையும் நமது வாட்ஸப் லாஸ்ட் சீன்கள் சொல்லிவிடுகின்றன.</p><p><strong>https://twitter.com/ItsJokker</strong></p><p>“என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண் போகாது” - ‘தர்பார்’ இசை விழாவில் ரஜினி! </p><p>“அது சரிங்க, நீங்க படிச்சா உங்க சொத்து, நாங்க படிச்சா எங்க சொத்து.” </p><p><strong>https://twitter.com/prakasht_</strong></p><p>நாம் பலநாளா முயற்சி பண்ணி நமக்கான நிம்மதி இங்கதான் கிடைக்கும்னு போறப்ப அது நமக்காகக் காத்திருந்து கடுப்பாகி வேற பக்கம் பயணிக்கிறதுதான் நம்மளோட டிசைன்.</p>.<p><strong>twitter.com/5Murugesan </strong></p><p>உலகிலேயே</p><p>மிகச்சிறியது</p><p>ஞாயிற்றுக்கிழமை. </p>.<p><strong>twitter.com/shivaas_twitz </strong></p><p>ஹாஸ்பிடல் வார்டு பாய்க்கு ஒரு கவர்னருக்கு நிகரான அதிகாரம் உள்ளது. </p><p><strong>twitter.com/prasathjammy </strong></p><p>சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு </p><p>விளம்பரம் தொடரும்..#Raj Tv </p><p><strong>twitter.com/Thaadikkaran </strong> </p><p>பக்கத்துல உக்காந்திருக்குறவங்க தட்டைப் பார்க்குறதும் மொபைலைப் பார்க்குறதும் உலகளாவிய நோய்தான் போல :( </p><p><strong>twitter.com/manipmp</strong> </p><p>நூறு ரூபாய் தட்சணை போட்டவரை கடவுளாய்ப் பார்த்தார் குருக்கள்.</p>.<p><strong>twitter.com/chithradevi_91 </strong></p><p>இப்போ நித்தியானந்தா இருக்கிற இடம்தான் ரெம்ப காலமா சிந்துபாத் தேடி அலைகிற கன்னித்தீவு. :) </p><p><strong>twitter.com/manipmp </strong></p><p>சாப்பிட்டாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்</p><p>சமைச்சாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் பெண்கள். </p><p><strong>twitter.com/RajeshNovelist </strong> </p><p>என் வாட்ஸ் அப்புக்கு வந்த திகில் கதை:</p><p>அவன் அன்று வீட்டுக்குப் போகும்</p><p>போது நள்ளிரவு கும்மிருட்டு. நாய்கள் ஊளை. மனதில் பயம்.</p><p>யோசித்தான்</p><p>உரத்தகுரலில் வெங்காயம் கிலோ 5 ரூபாய்... கத்தினான்.</p><p>வீடுகளில் லைட் எரிந்தது. எல்லோரும் வெளியே வந்து</p><p>வெங்காயகாரனைத் தேட, </p><p>அவன் வீடு போய்ச் சேர்ந்தான். </p>.<p><strong>twitter.com/naaraju </strong></p><p>அடுத்து உப்பு விலை ஏறி, நாடாளுமன்றத்துல அதைப் பத்திப் பேசாம இருக்கணும் நிர்மலா மேடம். </p><p><strong>twitter.com/Ramesh46025635 </strong> </p><p>மெல்லும்போது கடவாயில் ஒட்டிக்கொள்ளும் `நேந்திரம் பழ சிப்ஸ்’ போன்றது அவள் நினைவு..! #காதலிசம்.</p>
<p><strong>https://twitter.com/cablesankar</strong></p><p>வெங்காய விலையேற்றக்காலம்தான் ஹோட்டல் ஆம்லெட்டுக்கு அப்ரைசல் காலம்.</p>.<p><strong>https://twitter.com/arattaigirl</strong></p><p>குளிர்காலத்திலும் அசந்து தூங்க முடியாத அளவு பொறுப்புணர்வோடு இருப்பதெல்லாம் சாபம்.</p><p><strong>https://twitter.com/mrithulaM</strong></p><p>ஓட்டலில் நாம் ஆர்டர் பண்ணும் உணவு, லேட்டா வந்தா, ப்ரெஷ்ஷா ரெடியாகி வருதுன்னு நம்ப வச்சிட்டாங்க.</p><p><strong>https://twitter.com/kumarfaculty</strong></p><p>வலதுசாரிகளை இடதுசாரிகளாகவும், இடதுசாரிகளை வலதுசாரிகளாகவும் மாற்றிவிடுகிறது செல்ஃபி...!</p>.<p><strong>https://twitter.com/iVenpu</strong></p><p>மூன்று பாலியல் வழக்குகள்... ஒண்ணு பொள்ளாச்சி, ரெண்டு ஹைதராபாத், மூணு நித்யானந்தா... மூணுலயும் நம்ம சட்டம் எப்படி நடந்துகிட்டு இருக்குன்னு பார்த்து நாமளே ஒரு முடிவுக்கு வரலாம்.</p>. <p><strong>facebook.com//Ilango Krishnan</strong></p><p>“அப்பா இங்கிலீஷைக் கண்டுபிடிச்சது யாருப்பா?”</p><p>“இங்கிலீஷ்காரங்க.”</p><p>“அப்போ எங்க இங்கிலீஷ்மிஸ் இங்கிலீஷ்காரங்களா?”</p><p>“இல்லடா, அவுங்க சொல்லித் தரவங்க. இங்கிலீஷ்காரங்க இங்கிலாந்தில் அமெரிக்காவில்தான் இருப்பாங்க.”</p><p>“அப்பா அப்பா மேத்ஸ்காரங்க எந்த நாட்டில் இருப்பாங்க?”</p><p>“மேத்ஸ்காரங்களா... மேத்ஸ்காரங்கன்னு யாரும் கிடையாது பாப்பா...”</p><p>“அப்புறம் எப்படி எங்க மேத்ஸ் மிஸ்ஸுக்கு மேத்ஸ் தெரியுது?”</p><p>மகளே, போதும் நிறுத்திக்குவோம்...</p>.<p><strong>facebook.com// Bogan Sankar</strong></p><p>ஃபேஸ்புக் வருவதற்கு முன்பு எல்லாவற்றைப் பற்றியும் எனக்குக் கருத்துகள் இருந்தன. நான் ஒரு சிந்தனையாளன் என்பது எனக்கு எப்படியோ தெரியாமல்போய்விட்டது.</p><p>ஃபேஸ்புக் வந்தபிறகுதான் எனக்கு நிறைய காதலிகள் இருந்திருக்கிறார்கள், நான் ஒரு காதல் மன்னன் என்பதும் எனக்குத் தெரியவந்தது. நான் அவசரப்படாமல் ஃபேஸ்புக் வரும்வரை காத்திருந்து பிறந்திருக்கலாம். </p>.<p><strong>https://twitter.com/ChainTweter</strong></p><p>கியூ வரிசை, நடு சென்டர், டான்ஸ் ஆடுறது வரிசையில Corn flour மாவு! Corn flour என்பதே சோள மாவுதான் அன்பர்களே...</p><p><strong>https://twitter.com/aloor_ShaNavas</strong></p><p>ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?</p><p>“அவர்கள் மதவழியில் ஒடுக்கப்படவில்லை!”</p><p>“மதவழியில் ஒடுக்கப்பட்ட ரோகிங்யாக்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?”</p><p>“அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்!”</p><p>``சீனாவுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களை ஏற்கிறீர்களே அது எப்படி?”</p><p>அது வந்து...</p>.<p><strong>https://twitter.com/Raittuvidu</strong></p><p>தமிழனுக்கு அடுத்தவன திட்டுறதுக்கும்கூட வெங்காயம்ன்றது தேவை... இதுல வெங்காயம் இல்லாம சமைங்களேன்றானுங்க.. அடேய்...</p><p><strong>https://twitter.com/salma_poet</strong></p><p>உள்ளாட்சி அமைப்பு மட்டும்தான் அடித்தட்டு மக்களையும் பெண்களையும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவது. அதைக் குறைவாக மதிப்பிடுவது என்பது மிக மோசமான மனநிலை. ஸாரி திரு கமல் சார்!</p>.<p><strong>https://twitter.com/smhrkalifa</strong></p><p>நாம் தூங்கும் நேரத்தையும் எழும்பும் நேரத்தையும் நமது வாட்ஸப் லாஸ்ட் சீன்கள் சொல்லிவிடுகின்றன.</p><p><strong>https://twitter.com/ItsJokker</strong></p><p>“என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண் போகாது” - ‘தர்பார்’ இசை விழாவில் ரஜினி! </p><p>“அது சரிங்க, நீங்க படிச்சா உங்க சொத்து, நாங்க படிச்சா எங்க சொத்து.” </p><p><strong>https://twitter.com/prakasht_</strong></p><p>நாம் பலநாளா முயற்சி பண்ணி நமக்கான நிம்மதி இங்கதான் கிடைக்கும்னு போறப்ப அது நமக்காகக் காத்திருந்து கடுப்பாகி வேற பக்கம் பயணிக்கிறதுதான் நம்மளோட டிசைன்.</p>.<p><strong>twitter.com/5Murugesan </strong></p><p>உலகிலேயே</p><p>மிகச்சிறியது</p><p>ஞாயிற்றுக்கிழமை. </p>.<p><strong>twitter.com/shivaas_twitz </strong></p><p>ஹாஸ்பிடல் வார்டு பாய்க்கு ஒரு கவர்னருக்கு நிகரான அதிகாரம் உள்ளது. </p><p><strong>twitter.com/prasathjammy </strong></p><p>சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு </p><p>விளம்பரம் தொடரும்..#Raj Tv </p><p><strong>twitter.com/Thaadikkaran </strong> </p><p>பக்கத்துல உக்காந்திருக்குறவங்க தட்டைப் பார்க்குறதும் மொபைலைப் பார்க்குறதும் உலகளாவிய நோய்தான் போல :( </p><p><strong>twitter.com/manipmp</strong> </p><p>நூறு ரூபாய் தட்சணை போட்டவரை கடவுளாய்ப் பார்த்தார் குருக்கள்.</p>.<p><strong>twitter.com/chithradevi_91 </strong></p><p>இப்போ நித்தியானந்தா இருக்கிற இடம்தான் ரெம்ப காலமா சிந்துபாத் தேடி அலைகிற கன்னித்தீவு. :) </p><p><strong>twitter.com/manipmp </strong></p><p>சாப்பிட்டாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்</p><p>சமைச்சாச்சான்னு பேச ஆரம்பிக்கிறார்கள் பெண்கள். </p><p><strong>twitter.com/RajeshNovelist </strong> </p><p>என் வாட்ஸ் அப்புக்கு வந்த திகில் கதை:</p><p>அவன் அன்று வீட்டுக்குப் போகும்</p><p>போது நள்ளிரவு கும்மிருட்டு. நாய்கள் ஊளை. மனதில் பயம்.</p><p>யோசித்தான்</p><p>உரத்தகுரலில் வெங்காயம் கிலோ 5 ரூபாய்... கத்தினான்.</p><p>வீடுகளில் லைட் எரிந்தது. எல்லோரும் வெளியே வந்து</p><p>வெங்காயகாரனைத் தேட, </p><p>அவன் வீடு போய்ச் சேர்ந்தான். </p>.<p><strong>twitter.com/naaraju </strong></p><p>அடுத்து உப்பு விலை ஏறி, நாடாளுமன்றத்துல அதைப் பத்திப் பேசாம இருக்கணும் நிர்மலா மேடம். </p><p><strong>twitter.com/Ramesh46025635 </strong> </p><p>மெல்லும்போது கடவாயில் ஒட்டிக்கொள்ளும் `நேந்திரம் பழ சிப்ஸ்’ போன்றது அவள் நினைவு..! #காதலிசம்.</p>