<blockquote>உயர்தரமான தங்கும் விடுதி அது.</blockquote>.<p>20 அடுக்குகளைக்கொண்ட அந்த விடுதியின் தரை தளத்தில் ஒரு நீச்சல் குளம். அந்தக் கட்டடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த ஒருவன், கீழே இருந்த நீச்சல் குளத்தை எட்டிப் பார்த்தான். அப்போது குளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி சத்தமாகக் கத்தினான்... ‘`ஏ... குப்புசாமி, உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்!’’</p><p>இதைக் கேட்டதும் உச்சியில் நின்று கொண்டிருந்தவன் பதறிப் போய்க் கீழே குதித்தான்.</p><p>இப்போது, அவன் 20-வது மாடியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கித் தலைகீழாக வந்து கொண்டிருக்கிறான். அவன், 15-வது மாடியைக் கடக்கும்போது ‘பளிச்’சென்று ஒரு சிந்தனை.</p>.<p>‘ஆமாம்... நமக்குத்தான் மகனே கிடையாதே! அப்புறம் எதுக்கு அவசரப்பட்டு கீழே குதிச்சோம்?’</p><p>10-வது மாடியைக் கடந்தபோது, மற்றுமொரு சிந்தனை... ‘அது சரி, நமக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே!’</p>.<p>ஐந்தாவது மாடியைக் கடந்தபோது, இன்னும் ஓர் உண்மை புரிந்தது... ‘அவன் குப்புசாமியிடம்தானே சொன்னான்? நான் குப்புசாமி இல்லையே!’</p><p>கந்தசாமி கண் விழித்தான். கனவு கலைந்தது.</p><p>நல்லவேளை... அவன் நீச்சல் குளத்தில் கிடக்கவில்லை. படுக்கையில்தான் கிடக்கிறான்.</p><p>அந்தக் குளத்தில் விழுகிற கணத்தில், அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. தான் கண்டது கனவு என்பது புரிந்தது. ‘தான் யார்?’ என்ற உண்மையும் அவனுக்கு விளங்கியது.</p>.<p>இன்றைய மனிதனுக்கு, ‘தான் யார்?’ என்ற உண்மை புரிவதில்லை. அது புரியாமலேயே... கட்டடத்தின் உச்சியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கி விழுவதுபோல, அவனது உலகப் பயணமும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த பயணம் முழுவதும் பதற்றம்; நிம்மதி இன்மை!</p><p>விடிகிற வேளையில்தான் சிலருக்கு விழிப்பு வருகிறது. பலரும் விழிக்காமலேயே வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். நீங்கள், ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளுங்கள்; ஆனந்தமாகப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதற்கு ஆன்மிகம் உதவும்; நீங்கள் யார் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டும்.</p><p>உலகியலைப் பொறுத்தவரையில், விடியும் நேரமே விழிப்பு!</p><p>உண்மையைப் பொறுத்தவரையில், நீங்கள் விழித்துக்கொள்ளும் நேரமே விடியல்!</p><p><em>6.2.2008 இதழிலிருந்து...</em></p>
<blockquote>உயர்தரமான தங்கும் விடுதி அது.</blockquote>.<p>20 அடுக்குகளைக்கொண்ட அந்த விடுதியின் தரை தளத்தில் ஒரு நீச்சல் குளம். அந்தக் கட்டடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த ஒருவன், கீழே இருந்த நீச்சல் குளத்தை எட்டிப் பார்த்தான். அப்போது குளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி சத்தமாகக் கத்தினான்... ‘`ஏ... குப்புசாமி, உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்!’’</p><p>இதைக் கேட்டதும் உச்சியில் நின்று கொண்டிருந்தவன் பதறிப் போய்க் கீழே குதித்தான்.</p><p>இப்போது, அவன் 20-வது மாடியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கித் தலைகீழாக வந்து கொண்டிருக்கிறான். அவன், 15-வது மாடியைக் கடக்கும்போது ‘பளிச்’சென்று ஒரு சிந்தனை.</p>.<p>‘ஆமாம்... நமக்குத்தான் மகனே கிடையாதே! அப்புறம் எதுக்கு அவசரப்பட்டு கீழே குதிச்சோம்?’</p><p>10-வது மாடியைக் கடந்தபோது, மற்றுமொரு சிந்தனை... ‘அது சரி, நமக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே!’</p>.<p>ஐந்தாவது மாடியைக் கடந்தபோது, இன்னும் ஓர் உண்மை புரிந்தது... ‘அவன் குப்புசாமியிடம்தானே சொன்னான்? நான் குப்புசாமி இல்லையே!’</p><p>கந்தசாமி கண் விழித்தான். கனவு கலைந்தது.</p><p>நல்லவேளை... அவன் நீச்சல் குளத்தில் கிடக்கவில்லை. படுக்கையில்தான் கிடக்கிறான்.</p><p>அந்தக் குளத்தில் விழுகிற கணத்தில், அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. தான் கண்டது கனவு என்பது புரிந்தது. ‘தான் யார்?’ என்ற உண்மையும் அவனுக்கு விளங்கியது.</p>.<p>இன்றைய மனிதனுக்கு, ‘தான் யார்?’ என்ற உண்மை புரிவதில்லை. அது புரியாமலேயே... கட்டடத்தின் உச்சியிலிருந்து நீச்சல் குளத்தை நோக்கி விழுவதுபோல, அவனது உலகப் பயணமும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த பயணம் முழுவதும் பதற்றம்; நிம்மதி இன்மை!</p><p>விடிகிற வேளையில்தான் சிலருக்கு விழிப்பு வருகிறது. பலரும் விழிக்காமலேயே வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். நீங்கள், ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளுங்கள்; ஆனந்தமாகப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். அதற்கு ஆன்மிகம் உதவும்; நீங்கள் யார் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டும்.</p><p>உலகியலைப் பொறுத்தவரையில், விடியும் நேரமே விழிப்பு!</p><p>உண்மையைப் பொறுத்தவரையில், நீங்கள் விழித்துக்கொள்ளும் நேரமே விடியல்!</p><p><em>6.2.2008 இதழிலிருந்து...</em></p>