* இனிப்புகள் தயாரிக்க பாலை திரிக்கும்போது எலுமிச்சைக்கு பதிலாக வினிகர் சேர்த்துக் கொண்டால் அதிக புளிப்புத் தட்டாது.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்தம்பருப்புடன் சிறிதளவு கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்தால் மொறுமொறு தோசை கிடைக்கும்.
* பழ சாலட் தயாரிக்கும்போது கடுகு, மிளகு, உப்பு ஆகியவற்றை வறுத்து, நுணுக்கிச் சேர்த்தால் சுவை மேலும் கூடும்.
* தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது புளிக்காத தயிர் சேர்த்து அரைத்தால் வெண்மை நிறமும் மணமும் நிறைந்த சுவையான சட்னி கிடைக்கும்.
* சுண்டல் கடலை, பயறு வகைகளை வேகவைக்கும்போது சிறிதளவு இஞ்சியை தோல் சீவித் தட்டிச் சேர்த்தால் மணமாக இருப்பதுடன் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.
* உப்புமா தயாரிக்கும்போது ரவை வெந்துவரும் நேரத்தில் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறினால் அருமையாக இருக்கும்.
* மோர்க்குழம்பு தயாரிக்கும்போது இரண்டு மோர் மிளகாய் வற்றலை வறுத்து குழம்பில் சேர்த்தால் கமகமக்கும்.
*சாம்பாரில் மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கிச் சேர்த்தால் அருமையாக இருக்கும்.