<p><strong>ஆ</strong>யுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகமிருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும். `நார்த்தங்காய்’ என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.</p>.<p><strong>பயன்கள்:</strong></p><ul><li><p>உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.</p></li><li><p>செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.</p></li><li><p>வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்தப் பொடி சிறந்த மருந்து. </p></li><li><p>குடல் பிரச்னைகள் சரியாகும்.</p></li><li><p>இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.</p></li><li><p>நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.</p></li></ul>.<ul><li><p>மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.</p></li></ul><ul><li><p>இந்தப் பொடியை தினமும் சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம். </p></li><li><p>அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.</p></li><li><p>புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறையும்.</p></li><li><p>ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும். </p></li><li><p>சிறந்த வலி நிவாரணியாக நார்த்தை இருக்கும். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும்கூட நார்த்தை தீர்வளிக்கும். </p></li><li><p>எலும்பு சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மூட்டுவலியை முழுமையாகத் தவிர்க்கலாம்.</p></li></ul>.<p><strong>தேவையானவை: </strong></p><p>நரம்பு நீக்கிய, சுத்தமான நார்த்தை இலை : 20</p><p>காய்ந்த மிளகாய் : 5</p><p>கடலைப்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>எண்ணெய் : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை</p><p>உப்பு : தேவையான அளவு</p>.<p><strong>செய்முறை:</strong></p><p>கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் நன்கு வறுபட்டவுடன், அதில் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கலவை நன்கு வறுபட்டவுடன் நார்த்தை இலையைச் சேர்க்க வேண்டும். நார்த்தை இலைகள் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். கலவை நன்றாக ஆறிய பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். </p><p><strong>குறிப்பு:</strong></p><p>பெருங்காயம் சேர்ப்பதால் மணம் மாறிவிடுமோ எனச் சிலர் நினைக்கலாம். நார்த்தை இலை எலுமிச்சையின் சுவையைக் கொடுக்கும் என்பதால் பெருங்காயத்தின் மணம் இறுதியில் குறைந்துவிடும். எனவே, பெருங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பப்படாதவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம். உலர்ந்த தூய்மையான நார்த்தை இலைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்பதால், முதல் நாளே இலைகளைக் கழுவி, உலரவைத்துக்கொள்வது நல்லது. நார்த்தை இலைகளை உலரவைத்தாலும் நிறம் மாறாது. எலுமிச்சையின் சுவை அதிகமாக இருக்குமென்பதால் ரசம் தயாரிக்கும்போது இந்தப் பொடியைச் சேர்க்கலாம். தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.</p>
<p><strong>ஆ</strong>யுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகமிருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும். `நார்த்தங்காய்’ என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.</p>.<p><strong>பயன்கள்:</strong></p><ul><li><p>உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.</p></li><li><p>செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.</p></li><li><p>வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்தப் பொடி சிறந்த மருந்து. </p></li><li><p>குடல் பிரச்னைகள் சரியாகும்.</p></li><li><p>இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.</p></li><li><p>நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.</p></li></ul>.<ul><li><p>மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.</p></li></ul><ul><li><p>இந்தப் பொடியை தினமும் சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம். </p></li><li><p>அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.</p></li><li><p>புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறையும்.</p></li><li><p>ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும். </p></li><li><p>சிறந்த வலி நிவாரணியாக நார்த்தை இருக்கும். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும்கூட நார்த்தை தீர்வளிக்கும். </p></li><li><p>எலும்பு சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மூட்டுவலியை முழுமையாகத் தவிர்க்கலாம்.</p></li></ul>.<p><strong>தேவையானவை: </strong></p><p>நரம்பு நீக்கிய, சுத்தமான நார்த்தை இலை : 20</p><p>காய்ந்த மிளகாய் : 5</p><p>கடலைப்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>எண்ணெய் : ஒரு டேபிள்ஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை</p><p>உப்பு : தேவையான அளவு</p>.<p><strong>செய்முறை:</strong></p><p>கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் நன்கு வறுபட்டவுடன், அதில் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கலவை நன்கு வறுபட்டவுடன் நார்த்தை இலையைச் சேர்க்க வேண்டும். நார்த்தை இலைகள் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். கலவை நன்றாக ஆறிய பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். </p><p><strong>குறிப்பு:</strong></p><p>பெருங்காயம் சேர்ப்பதால் மணம் மாறிவிடுமோ எனச் சிலர் நினைக்கலாம். நார்த்தை இலை எலுமிச்சையின் சுவையைக் கொடுக்கும் என்பதால் பெருங்காயத்தின் மணம் இறுதியில் குறைந்துவிடும். எனவே, பெருங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பப்படாதவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம். உலர்ந்த தூய்மையான நார்த்தை இலைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்பதால், முதல் நாளே இலைகளைக் கழுவி, உலரவைத்துக்கொள்வது நல்லது. நார்த்தை இலைகளை உலரவைத்தாலும் நிறம் மாறாது. எலுமிச்சையின் சுவை அதிகமாக இருக்குமென்பதால் ரசம் தயாரிக்கும்போது இந்தப் பொடியைச் சேர்க்கலாம். தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.</p>