<blockquote>கொரானா ஊரடங்கு காலத்தில் அன்றாட உணவுக்கே திண்டாடுபவர்களை, தேடித்தேடி உதவிவருகிறது விகடனின் வாசன் சாரிடபிள் டிரஸ்ட். அதன் ஒருபகுதியாக ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் மனோலாயவிற்கு உதவிகள் செய்யப்பட்டது.</blockquote>.<p>ராமேஸ்வரத்தில் உள்ள வீதிகளில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்தவர்களைப் பாதுகாக்கும் வகையில் இயங்கிவரும் காப்பகம் மனோலயா. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 40 பேர் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட இந்த மனநலக் காப்பகத்தின் மூலம் குணமடைந்த 12 பேர் தங்கள் குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>.<p>ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ மக்கள், சுற்றுலாப் பயணிகள் தரும் நன்கொடைகள் மூலம் இந்தக் காப்பகம் இயங்கிவந்தது. இப்போது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி உள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்துவிட்டது.</p>.<p>இதனால் மனநலம் பாதித்த இந்த எளிய மனிதர்களின் பசி போக்க வழியின்றித் தவித்து போயினர் மனோலயா காப்பகத்தினர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலை அறிந்த விகடன், வாசகர்களின் பங்களிப்போடு அவர்களின் பசியைப் போக்க முடிந்த உதவிகளை உடனே செய்ய முடிவுசெய்தது. ஏப்ரல் 24-ம் தேதி மனோலயா காப்பகத்தில் பராமரிக்கப்படும் மனநலம் பாதித்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 540 கிலோ அரிசி மற்றும் ரூ. 46,878 மதிப்பிலான அரிசி, ரவை, பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 23 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கினோம். இந்தப் பணிகளை மேற்கொள்ள ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி என்.ரவிச்சந்திரன் உதவியாக இருந்தார்.</p>.<p>‘`இப்படியொரு இக்கட்டான தருணத்தில் விகடன் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. இந்த உதவியால் இனி வரும் 30 நாள்கள் மட்டுமல்ல அதற்குக் கூடுதலாகச் சில தினங்களுக்கும் இங்குள்ளவர் களின் பசியினைப் போக்க முடியும்’’ என நெகிழ்ந்தனர் மனோலயா காப்பகத்தினர்.</p>.<p>சென்னைத் திருவேற்காட்டை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் பூம்பூம் மாடு தொழில் செய்யும் பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 10 குடும்பங்கள் உணவின்றித் தவித்தார்கள். ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை என எதுவுமே இவர்களுக்கு இல்லை. அதனாலேயே அரசு அறிவித்த எந்த நிவாரண உதவியும் இவர்களுடைய குடிசைகளை எட்டவில்லை.</p>.<p>10 குடும்பங்களுக்கும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பருப்பு, சர்க்கரை உட்பட அத்தியாவசிய சமையல் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதியின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்கினோம்“இந்த மைதானத்திலேயேதான் நாங்க கடந்த முப்பது வருசமா எங்க புள்ளகுட்டிங்கள வெச்சிட்டு வாழ்ந்துட்டு வரோம். மைதானத்துல ஓலைக்குடிசை போட்டுட்டு இருக்குறோம், இப்பவும்கூட ராத்திரியானா பாம்பு, பூச்சித் தொல்லை,. எங்க எல்லாருக்கும் சோறு போடுறதே எங்க மாடுங்கதான். ஊரடங்கால வருமானத்துக்கு வழியில்லாம வீட்டுக்குள்ள முடங்கிக் கெடக்குறோம். இப்படிப்பட்ட நிலைமைல இப்போ இந்தப் பொருள்கள பார்த்த உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு சார்’’ என்றும் அன்பும் நன்றியுமாகப் பேசினார் காளிதாஸ்.</p>.<p>தொடர்ந்து, பேரிடரில் தவிப்போருக்குக் கரம் கொடுப்போம்!</p>.<p><strong>பே</strong>ரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.</p><p>நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.</p>.<p>Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.</p><p>வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.</p>.<p>நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.</p><p>குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.</p>
<blockquote>கொரானா ஊரடங்கு காலத்தில் அன்றாட உணவுக்கே திண்டாடுபவர்களை, தேடித்தேடி உதவிவருகிறது விகடனின் வாசன் சாரிடபிள் டிரஸ்ட். அதன் ஒருபகுதியாக ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் மனோலாயவிற்கு உதவிகள் செய்யப்பட்டது.</blockquote>.<p>ராமேஸ்வரத்தில் உள்ள வீதிகளில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநலம் பாதித்தவர்களைப் பாதுகாக்கும் வகையில் இயங்கிவரும் காப்பகம் மனோலயா. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 40 பேர் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட இந்த மனநலக் காப்பகத்தின் மூலம் குணமடைந்த 12 பேர் தங்கள் குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>.<p>ராமேஸ்வரத்தில் உள்ள மீனவ மக்கள், சுற்றுலாப் பயணிகள் தரும் நன்கொடைகள் மூலம் இந்தக் காப்பகம் இயங்கிவந்தது. இப்போது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி உள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்துவிட்டது.</p>.<p>இதனால் மனநலம் பாதித்த இந்த எளிய மனிதர்களின் பசி போக்க வழியின்றித் தவித்து போயினர் மனோலயா காப்பகத்தினர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலை அறிந்த விகடன், வாசகர்களின் பங்களிப்போடு அவர்களின் பசியைப் போக்க முடிந்த உதவிகளை உடனே செய்ய முடிவுசெய்தது. ஏப்ரல் 24-ம் தேதி மனோலயா காப்பகத்தில் பராமரிக்கப்படும் மனநலம் பாதித்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 540 கிலோ அரிசி மற்றும் ரூ. 46,878 மதிப்பிலான அரிசி, ரவை, பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 23 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கினோம். இந்தப் பணிகளை மேற்கொள்ள ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி என்.ரவிச்சந்திரன் உதவியாக இருந்தார்.</p>.<p>‘`இப்படியொரு இக்கட்டான தருணத்தில் விகடன் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. இந்த உதவியால் இனி வரும் 30 நாள்கள் மட்டுமல்ல அதற்குக் கூடுதலாகச் சில தினங்களுக்கும் இங்குள்ளவர் களின் பசியினைப் போக்க முடியும்’’ என நெகிழ்ந்தனர் மனோலயா காப்பகத்தினர்.</p>.<p>சென்னைத் திருவேற்காட்டை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் பூம்பூம் மாடு தொழில் செய்யும் பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 10 குடும்பங்கள் உணவின்றித் தவித்தார்கள். ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை என எதுவுமே இவர்களுக்கு இல்லை. அதனாலேயே அரசு அறிவித்த எந்த நிவாரண உதவியும் இவர்களுடைய குடிசைகளை எட்டவில்லை.</p>.<p>10 குடும்பங்களுக்கும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பருப்பு, சர்க்கரை உட்பட அத்தியாவசிய சமையல் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதியின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்கினோம்“இந்த மைதானத்திலேயேதான் நாங்க கடந்த முப்பது வருசமா எங்க புள்ளகுட்டிங்கள வெச்சிட்டு வாழ்ந்துட்டு வரோம். மைதானத்துல ஓலைக்குடிசை போட்டுட்டு இருக்குறோம், இப்பவும்கூட ராத்திரியானா பாம்பு, பூச்சித் தொல்லை,. எங்க எல்லாருக்கும் சோறு போடுறதே எங்க மாடுங்கதான். ஊரடங்கால வருமானத்துக்கு வழியில்லாம வீட்டுக்குள்ள முடங்கிக் கெடக்குறோம். இப்படிப்பட்ட நிலைமைல இப்போ இந்தப் பொருள்கள பார்த்த உடன் தான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு சார்’’ என்றும் அன்பும் நன்றியுமாகப் பேசினார் காளிதாஸ்.</p>.<p>தொடர்ந்து, பேரிடரில் தவிப்போருக்குக் கரம் கொடுப்போம்!</p>.<p><strong>பே</strong>ரிடரில் தவிக்கும் முகமறியா மக்களுக்கு எப்போதுமே மனமுவந்து உதவிகளைச் செய்யக் காத்திருக்கும் வாசகர்களிடமிருந்து நேரடியாகவும் பங்களிப்பைக் கோருகிறோம்.</p><p>நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.</p>.<p>Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.</p><p>வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.</p>.<p>நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரினைத் தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.</p><p>குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், ‘நிலம் நீர் நீதி’ மற்றும் ‘கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.</p>