மத்திய அரசு அலுவலங்களில், இந்த நிதியாண்டில் சுமார் 2.8 லட்சம் கூடுதல் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 1.8 லட்சம் ஊழியர்கள் காவல்துறை, வருமான வரி, சுங்கம் மற்றும் மத்திய கலால் ஆகிய துறைகளில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 32.84 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்த ஆண்டு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதால், மத்திய அரசுப் பணிக்கு முயற்சிசெய்து, எழுத்துத் தேர்வு எழுதிவருவோருக்கு இது நல்ல செய்தி.