<p><span style="font-size: medium;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span></span>டுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்காகப் பணம் செலுத்தியவர்கள், குடியிருப்பினைப் பெற ஓராண்டுக்கு மேல் தாமதமானால் ரீஃபண்ட் கேட்கலாம் என என்.சி.டி.ஆர்.சி (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் பிரேம் நரைன் வழக்கு ஒன்றில் இப்படித் தீர்ப்பளித்திருக் கிறார். </p>.<p>டெல்லியைச் சேர்ந்த ஷாலாபா நிகாம் என்பவர், கடந்த 2012-ம் ஆண்டில் கூர்கானில் சொகுசு குடியிருப்பு ஒன்றை ஓரிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் 3சி கம்பெனியிடமிருந்து வாங்கினார். அடுக்கு மாடி வீட்டின் விலை ரூ.1 கோடியாக இருந்தது. ஷாலாபா நிகாம் ரூ.90 லட்சத்தை பில்டருக்குக் கொடுத்துள்ளார். <br /> <br /> ஒப்பந்தப்படி பில்டர், 36 மாதங் களுக்குள் வீட்டைக் கட்டி முடித்து ஒப்படைத்திருக்க வேண்டும். இதற்கான கருணைக் காலம் ஆறு மாதங்களாக இருந்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பில்டர், வீட்டைக் கட்டித் தரவில்லை. இந்த நிலையில், என்.சி.டி.ஆர்.சி-யில் தனது வழக்கறிஞர்மூலம் வழக்குத் தொடர்ந்தார் நிகாம். வீட்டைக் கட்டிமுடித்து உடனே ஒப்படைக்க வேண்டும் அல்லது கட்டிய தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று கேட்டார் நிகாம். <br /> <br /> 2019 செப்டம்பருக்குள் வீட்டைக் கட்டி ஒப்படைக்க வேண்டும். காலதாமதமான ஆண்டுகளுக்கு மொத்தத் தொகைக்கு 6% வட்டியுடன் திரும்பத் தரவேண்டும் என கமிஷன் தீர்ப்பளித்தது. கமிஷன் சொன்ன கெடு வுக்குள் வீட்டைக் கட்டித் தரவில்லையெனில், மொத்தத் தொகைக்கு 10% வட்டியுடன் பணம் தர வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> அடுக்குமாடி வாங்குபவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை! <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சேனா சரவணன் </strong></span></p>
<p><span style="font-size: medium;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span></span>டுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்காகப் பணம் செலுத்தியவர்கள், குடியிருப்பினைப் பெற ஓராண்டுக்கு மேல் தாமதமானால் ரீஃபண்ட் கேட்கலாம் என என்.சி.டி.ஆர்.சி (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் பிரேம் நரைன் வழக்கு ஒன்றில் இப்படித் தீர்ப்பளித்திருக் கிறார். </p>.<p>டெல்லியைச் சேர்ந்த ஷாலாபா நிகாம் என்பவர், கடந்த 2012-ம் ஆண்டில் கூர்கானில் சொகுசு குடியிருப்பு ஒன்றை ஓரிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் 3சி கம்பெனியிடமிருந்து வாங்கினார். அடுக்கு மாடி வீட்டின் விலை ரூ.1 கோடியாக இருந்தது. ஷாலாபா நிகாம் ரூ.90 லட்சத்தை பில்டருக்குக் கொடுத்துள்ளார். <br /> <br /> ஒப்பந்தப்படி பில்டர், 36 மாதங் களுக்குள் வீட்டைக் கட்டி முடித்து ஒப்படைத்திருக்க வேண்டும். இதற்கான கருணைக் காலம் ஆறு மாதங்களாக இருந்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பில்டர், வீட்டைக் கட்டித் தரவில்லை. இந்த நிலையில், என்.சி.டி.ஆர்.சி-யில் தனது வழக்கறிஞர்மூலம் வழக்குத் தொடர்ந்தார் நிகாம். வீட்டைக் கட்டிமுடித்து உடனே ஒப்படைக்க வேண்டும் அல்லது கட்டிய தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று கேட்டார் நிகாம். <br /> <br /> 2019 செப்டம்பருக்குள் வீட்டைக் கட்டி ஒப்படைக்க வேண்டும். காலதாமதமான ஆண்டுகளுக்கு மொத்தத் தொகைக்கு 6% வட்டியுடன் திரும்பத் தரவேண்டும் என கமிஷன் தீர்ப்பளித்தது. கமிஷன் சொன்ன கெடு வுக்குள் வீட்டைக் கட்டித் தரவில்லையெனில், மொத்தத் தொகைக்கு 10% வட்டியுடன் பணம் தர வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> அடுக்குமாடி வாங்குபவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை! <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சேனா சரவணன் </strong></span></p>