<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பசுமைச் சுவர்கள்<br /> <br /> பெ</strong></span>ங்களூரில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்ததால் ஊரெங்கும் பெரிய பெரிய கான்கிரீட் தூண்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் பெங்களூரின் பழைய பெயரான ‘பூங்கா நகரம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது. </p>.<p>‘பிளான் பி’ என்ற அமைப்பினர், இந்தக் காங்கிரீட் தூண்களைக்கொண்டே பெங்களூரின் பூங்காக்களை மீட்கத் தீர்மானித்திருக்கிறார்கள். அதாவது, தூண்களைச் சுற்றிலும் Vertical Gardens எனப்படும் பசுமை அமைப்புகளை உருவாக்கப்போகிறார்கள். <br /> <br /> இந்தப் பூங்காவில், செடிகள் ஒன்றன்மேல் ஒன்றாக, ஏணிபோல் Verticalஆக உயர்ந்துகொண்டே போகும். ஏற்கெனவே பல அலுவலகங்கள், வணிக வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பூங்காக்களை இப்போது மெட்ரோ, ஃப்ளைஓவர் தூண்களிலும் உருவாருக்கப்போகிறார்களாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓடி விளையாடு பாப்பா!<br /> <br /> மா</strong></span>ணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாமல் எந்நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய உடல் பருமனாகிப்போகாதா... நலம்சார்ந்த பிரச்னைகள் வராதா? <br /> <br /> அதற்காகத்தான் பள்ளிகளில் ‘விளையாட்டு’க்கென்று ஒரு பாடவேளையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பல பள்ளிகள் அதை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்கள்கூட அதை விரும்புவதில்லை, ‘என்ன பெரிய விளையாட்டு? அந்த நேரத்துல நாலு பாடம் நடத்தலாம்’ என்கிறார்கள். <br /> <br /> ‘இனிமேல் இந்த வேலையே வேண்டாம்; ஒழுங்கா மாணவர்களை விளையாடவிடுங்க’ என்று எச்சரிக்கிறது CBSE அமைப்பு. இந்த ஆண்டு பள்ளிகளுக்காக அவர்கள் வெளியிட்டுள்ள கையேட்டில், ‘9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தினமும் ஒரு விளையாட்டுப் பாடவேளை இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்கள். இதன்மூலம் மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புஉணர்வு வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முதல் தீயணைப்புப்படை வீராங்கனை!<br /> <br /> நா</strong></span>டெங்கும் விமானநிலைய வசதிகள் விரிவாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பாதுகாப்புக்காக நிறைய தீயணைப்புவீரர்கள் தேவைப்படுகிறார்கள். பொதுவாக ஆண்களே செய்துவரும் இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள பெண்களையும் தேர்ந்தெடுத்தால் என்ன? </p>.<p><br /> <br /> இப்படி யோசித்த இந்திய விமானநிலைய அதிகார அமைப்பு, கொல்கத்தாவைச் சேர்ந்த தனியா சன்யாலை இப்பணிக்குத் தேர்வுசெய்தது. இதன்மூலம் இந்தியாவின் முதல் ‘விமானநிலையத் தீயணைப்புப்படை வீராங்கனை’ ஆகியிருக்கிறார், தனியா சன்யால்! <br /> <br /> ஆண் வீரர்களோடு ஒப்பிடும்போது, பெண்களுக்கான எடை, உயரம் போன்ற வரம்புகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பணிகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை; அவர்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுவார்கள். <br /> <br /> இது ஓர் ஆரம்பம்தான்! </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விழிப்போடு இருக்க வேண்டும்!<br /> <br /> ஒ</strong></span>ருவர் காபி குடிக்க ஸ்கூட்டரை கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறார். காபி குடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், ஸ்கூட்டரைக் காணோம். <br /> <br /> அவர், காவல் நிலையத்துக்குச் செல்கிறார். புகார் தருகிறார். காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ‘என்னுடைய வண்டியைக் காணோம் யாரோ திருடிட்டாங்க, அதனால், நீங்க எனக்கு புது வண்டி வாங்க பணம் தரணும்’ என்கிறார்.<br /> <br /> எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்கிறீர்களா? ஒரே ஒரு பிரச்னை: காபி குடிக்க கடைக்குள் சென்றவர், வண்டியிலேயே சாவியை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதை விசாரித்துக் கண்டுபிடித்த காப்பீட்டு நிறுவனம், ‘உங்கள் கவனக்குறைவுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது’ என்று சொல்லி அவருக்குப் பணம் தர மறுத்துவிட்டது. நுகர்வோர் நீதிமன்றமும் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முதுமை+இளமை=முன்னேற்றம்!<br /> <br /> ‘ஸ்</strong></span>டார்ட்டப்’ எனப்படும் புதிய தொழில் நிறுவனங்கள், இளைஞர்களின் கோட்டைகள். புதிய கனவுகள், சிந்தனைகளோடு அவர்கள் இந்நிறுவனங்களை நடத்துகிறார்கள். தங்களைப்போலவே ஆர்வமுள்ள இளைஞர்களை வேலைக்குச்சேர்க்கிறார்கள். <br /> <br /> ஆனால், இளமை மட்டும் போதுமா... அனுபவம் வேண்டாமா?<br /> <br /> இந்த இரண்டையும் சரிவிகிதத்தில் கலக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது Truebil என்ற நிறுவனம். மும்பையிலுள்ள இவர்களுடைய அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களுடைய சராசரி வயது 28 தான். இப்போது, அறுபதைத் தாண்டிய பலருக்குத் தங்களுடைய நிறுவனத்தில் வேலை கொடுக்கத் தொடங்கியிருக் கிறார்கள். <br /> <br /> ‘இதன்மூலம் இளைஞர்கள், முதியவர்கள் இருவருக்குமே நன்மை’ என்கிறது இந்நிறுவனம், ‘முதியவர்களுக்கு இந்த வயதில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வேலைசெய்கிற மகிழ்ச்சி; இளைஞர்களுக்கு, முதியவர்களிடமிருந்து அவர்களுடைய அனுபவத்தைக் கற்றுக்கொள்கிற வாய்ப்பு!’<br /> <br /> அனுபவம் மிக்கவர்களுடைய வழிகாட்டுதலில் இளைஞர்கள் முன்னேறினால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தெரியுமா?</strong></span><br /> <br /> ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டின் பெயர், லிட்டில் பாய். </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பசுமைச் சுவர்கள்<br /> <br /> பெ</strong></span>ங்களூரில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்ததால் ஊரெங்கும் பெரிய பெரிய கான்கிரீட் தூண்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் பெங்களூரின் பழைய பெயரான ‘பூங்கா நகரம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது. </p>.<p>‘பிளான் பி’ என்ற அமைப்பினர், இந்தக் காங்கிரீட் தூண்களைக்கொண்டே பெங்களூரின் பூங்காக்களை மீட்கத் தீர்மானித்திருக்கிறார்கள். அதாவது, தூண்களைச் சுற்றிலும் Vertical Gardens எனப்படும் பசுமை அமைப்புகளை உருவாக்கப்போகிறார்கள். <br /> <br /> இந்தப் பூங்காவில், செடிகள் ஒன்றன்மேல் ஒன்றாக, ஏணிபோல் Verticalஆக உயர்ந்துகொண்டே போகும். ஏற்கெனவே பல அலுவலகங்கள், வணிக வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பூங்காக்களை இப்போது மெட்ரோ, ஃப்ளைஓவர் தூண்களிலும் உருவாருக்கப்போகிறார்களாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓடி விளையாடு பாப்பா!<br /> <br /> மா</strong></span>ணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாமல் எந்நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய உடல் பருமனாகிப்போகாதா... நலம்சார்ந்த பிரச்னைகள் வராதா? <br /> <br /> அதற்காகத்தான் பள்ளிகளில் ‘விளையாட்டு’க்கென்று ஒரு பாடவேளையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பல பள்ளிகள் அதை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்கள்கூட அதை விரும்புவதில்லை, ‘என்ன பெரிய விளையாட்டு? அந்த நேரத்துல நாலு பாடம் நடத்தலாம்’ என்கிறார்கள். <br /> <br /> ‘இனிமேல் இந்த வேலையே வேண்டாம்; ஒழுங்கா மாணவர்களை விளையாடவிடுங்க’ என்று எச்சரிக்கிறது CBSE அமைப்பு. இந்த ஆண்டு பள்ளிகளுக்காக அவர்கள் வெளியிட்டுள்ள கையேட்டில், ‘9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தினமும் ஒரு விளையாட்டுப் பாடவேளை இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்கள். இதன்மூலம் மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புஉணர்வு வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முதல் தீயணைப்புப்படை வீராங்கனை!<br /> <br /> நா</strong></span>டெங்கும் விமானநிலைய வசதிகள் விரிவாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பாதுகாப்புக்காக நிறைய தீயணைப்புவீரர்கள் தேவைப்படுகிறார்கள். பொதுவாக ஆண்களே செய்துவரும் இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள பெண்களையும் தேர்ந்தெடுத்தால் என்ன? </p>.<p><br /> <br /> இப்படி யோசித்த இந்திய விமானநிலைய அதிகார அமைப்பு, கொல்கத்தாவைச் சேர்ந்த தனியா சன்யாலை இப்பணிக்குத் தேர்வுசெய்தது. இதன்மூலம் இந்தியாவின் முதல் ‘விமானநிலையத் தீயணைப்புப்படை வீராங்கனை’ ஆகியிருக்கிறார், தனியா சன்யால்! <br /> <br /> ஆண் வீரர்களோடு ஒப்பிடும்போது, பெண்களுக்கான எடை, உயரம் போன்ற வரம்புகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பணிகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை; அவர்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுவார்கள். <br /> <br /> இது ஓர் ஆரம்பம்தான்! </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விழிப்போடு இருக்க வேண்டும்!<br /> <br /> ஒ</strong></span>ருவர் காபி குடிக்க ஸ்கூட்டரை கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறார். காபி குடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், ஸ்கூட்டரைக் காணோம். <br /> <br /> அவர், காவல் நிலையத்துக்குச் செல்கிறார். புகார் தருகிறார். காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ‘என்னுடைய வண்டியைக் காணோம் யாரோ திருடிட்டாங்க, அதனால், நீங்க எனக்கு புது வண்டி வாங்க பணம் தரணும்’ என்கிறார்.<br /> <br /> எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்கிறீர்களா? ஒரே ஒரு பிரச்னை: காபி குடிக்க கடைக்குள் சென்றவர், வண்டியிலேயே சாவியை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதை விசாரித்துக் கண்டுபிடித்த காப்பீட்டு நிறுவனம், ‘உங்கள் கவனக்குறைவுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது’ என்று சொல்லி அவருக்குப் பணம் தர மறுத்துவிட்டது. நுகர்வோர் நீதிமன்றமும் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முதுமை+இளமை=முன்னேற்றம்!<br /> <br /> ‘ஸ்</strong></span>டார்ட்டப்’ எனப்படும் புதிய தொழில் நிறுவனங்கள், இளைஞர்களின் கோட்டைகள். புதிய கனவுகள், சிந்தனைகளோடு அவர்கள் இந்நிறுவனங்களை நடத்துகிறார்கள். தங்களைப்போலவே ஆர்வமுள்ள இளைஞர்களை வேலைக்குச்சேர்க்கிறார்கள். <br /> <br /> ஆனால், இளமை மட்டும் போதுமா... அனுபவம் வேண்டாமா?<br /> <br /> இந்த இரண்டையும் சரிவிகிதத்தில் கலக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது Truebil என்ற நிறுவனம். மும்பையிலுள்ள இவர்களுடைய அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களுடைய சராசரி வயது 28 தான். இப்போது, அறுபதைத் தாண்டிய பலருக்குத் தங்களுடைய நிறுவனத்தில் வேலை கொடுக்கத் தொடங்கியிருக் கிறார்கள். <br /> <br /> ‘இதன்மூலம் இளைஞர்கள், முதியவர்கள் இருவருக்குமே நன்மை’ என்கிறது இந்நிறுவனம், ‘முதியவர்களுக்கு இந்த வயதில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வேலைசெய்கிற மகிழ்ச்சி; இளைஞர்களுக்கு, முதியவர்களிடமிருந்து அவர்களுடைய அனுபவத்தைக் கற்றுக்கொள்கிற வாய்ப்பு!’<br /> <br /> அனுபவம் மிக்கவர்களுடைய வழிகாட்டுதலில் இளைஞர்கள் முன்னேறினால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தெரியுமா?</strong></span><br /> <br /> ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டின் பெயர், லிட்டில் பாய். </p>