<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடலுக்கு அடியில் அதிவேக ரயில்!<br /> <br /> சீ</strong></span>னாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன்முறையாகக் கடலுக்கு அடியில் 16.2 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் நிங்போ - சவுஷேன் என்ற பகுதிக்கிடையே 70 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் இதில், 16.2 கிமீ தூரம் கடலுக்கு அடியில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும். இதன்மூலம், வழக்கமான பயண நேரத்தைவிட ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரிய முயல்! <br /> <br /> மு</strong></span>யல் வகையிலேயே மிகப்பெரியது, துருக்கியில் காணப்படும் அங்கோரா. சுமார் 5 கிலோ எடை இருக்கும். இதில், 11 வகையான இனங்கள் உள்ளன. பஞ்சு போன்ற இவற்றின் முடி 3 சென்டிமீட்டர் வளரும். இந்த முடியில், கம்பளி செய்வார்கள். இந்தக் கம்பளிக்கு பெரும் வரவேற்பு உண்டு.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அண்ணல் அம்பேத்கர் வகித்த உயர் பதவிகள்! <br /> <br /> இ</strong></span>ந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர், பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவற்றில் சில...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மேலவை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1926<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சைமன் குழு உறுப்பினர் - 1928<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>அரசியலமைப்புக் குழு உறுப்பினர் - 1932<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்டக் கல்லூரி முதல்வர் - பம்பாய் மாகாணம் - 1935<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்டசபை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1937<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>தொழிலாளர் அமைச்சர் - வைஸ்ராயின் நிர்வாகக் குழு - 1942<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>உறுப்பினர், அரசியலைப்பு சபை - 1946<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்ட அமைச்சர் - 1947<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>ராஜ்யசபா உறுப்பினர் - 1952</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இமயமலையில் சிப்பி! <br /> <br /> இ</strong></span>மயமலையின் சிகரங்களில் கடற்சிப்பிகள் கிடைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அவ்வளவு உயரமான மலைப்பகுதியில் கடற்சிப்பி எப்படி வரும்?’ என்ற கேள்வி எழுகிறதல்லவா? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் பகுதியாக இருந்த இடம் இது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நிலப்பரப்பைத் தாங்கியிருக்கும் பூமித் தகடுகள், வடக்கு ஆசியாவை நோக்கி நகர்ந்தன. இதன் காரணமாக, கடலில் மூழ்கியிருந்த இமயமலைப் பகுதி உயர்ந்தது. அப்படி உருவான கடற்சிப்பிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களே இவை. </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கடலுக்கு அடியில் அதிவேக ரயில்!<br /> <br /> சீ</strong></span>னாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன்முறையாகக் கடலுக்கு அடியில் 16.2 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் நிங்போ - சவுஷேன் என்ற பகுதிக்கிடையே 70 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் இதில், 16.2 கிமீ தூரம் கடலுக்கு அடியில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும். இதன்மூலம், வழக்கமான பயண நேரத்தைவிட ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பெரிய முயல்! <br /> <br /> மு</strong></span>யல் வகையிலேயே மிகப்பெரியது, துருக்கியில் காணப்படும் அங்கோரா. சுமார் 5 கிலோ எடை இருக்கும். இதில், 11 வகையான இனங்கள் உள்ளன. பஞ்சு போன்ற இவற்றின் முடி 3 சென்டிமீட்டர் வளரும். இந்த முடியில், கம்பளி செய்வார்கள். இந்தக் கம்பளிக்கு பெரும் வரவேற்பு உண்டு.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அண்ணல் அம்பேத்கர் வகித்த உயர் பதவிகள்! <br /> <br /> இ</strong></span>ந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர், பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவற்றில் சில...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மேலவை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1926<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சைமன் குழு உறுப்பினர் - 1928<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>அரசியலமைப்புக் குழு உறுப்பினர் - 1932<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்டக் கல்லூரி முதல்வர் - பம்பாய் மாகாணம் - 1935<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்டசபை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1937<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>தொழிலாளர் அமைச்சர் - வைஸ்ராயின் நிர்வாகக் குழு - 1942<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>உறுப்பினர், அரசியலைப்பு சபை - 1946<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சட்ட அமைச்சர் - 1947<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>ராஜ்யசபா உறுப்பினர் - 1952</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>இமயமலையில் சிப்பி! <br /> <br /> இ</strong></span>மயமலையின் சிகரங்களில் கடற்சிப்பிகள் கிடைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அவ்வளவு உயரமான மலைப்பகுதியில் கடற்சிப்பி எப்படி வரும்?’ என்ற கேள்வி எழுகிறதல்லவா? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் பகுதியாக இருந்த இடம் இது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நிலப்பரப்பைத் தாங்கியிருக்கும் பூமித் தகடுகள், வடக்கு ஆசியாவை நோக்கி நகர்ந்தன. இதன் காரணமாக, கடலில் மூழ்கியிருந்த இமயமலைப் பகுதி உயர்ந்தது. அப்படி உருவான கடற்சிப்பிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களே இவை. </p>