<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>தூ</strong></span></span>த்துக்குடி என்றதும் உப்பு மற்றும் முத்து நினைவுக்கு வரும். எங்கள் தூத்துக்குடி இன்னும் பல விஷயங்களுக்குப் புகழ்பெற்றது. அதில் சில...<br /> <br /> </p>.<p>அதிகமான நீர் நிறைந்த நிலமாக இருந்ததால், ‘தூத்துத் துறைமுகம்' என்று கூறினர். குடியிருப்பும் தோன்றிய பிறகு ‘தூத்துக்குடி' என்று ஆயிற்று. சில கல்வெட்டுகளில் ‘தூற்றிக்குடி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>.<p>தாலமி என்ற கிரேக்கப் பயணியின் நூலில், ‘சோஷிக் குரி'(சிறு குடி) என்று குறிப்பிட்டுள்ளார். அது, தூத்துக்குடியின் பெயரே என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.<br /> <br /> </p>.<p>ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடமாக தூத்துக்குடி இருந்துள்ளது.</p>.<p>தூத்துக்குடி துறைமுகம் ஓர் இயற்கைத் துறைமுகம்.<br /> <br /> </p>.<p>சுதந்திரப் போராட்டத்தின்போது வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் செலுத்திய, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார், புரட்சிக் கவிஞர் பாரதியார் போன்றவர்கள் பிறந்த மண் இது.<br /> <br /> </p>.<p>திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து, 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.</p>.<p>தூத்துக்குடி அனல்மின் நிலையமும், ஸ்பிக் உரத் தொழிற்சாலையும் மிகவும் புகழ்பெற்றவை.<br /> <br /> </p>.<p>தூத்துக்குடியில் ‘மக்ரூன்’ என்ற இனிப்பு மிகவும் பிரபலம்.</p>.<p>தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத் தேர் திருவிழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, உலகப் புகழ்பெற்றது.<br /> <br /> </p>.<p>தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்குப் புகழ்பெற்றது.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>தூ</strong></span></span>த்துக்குடி என்றதும் உப்பு மற்றும் முத்து நினைவுக்கு வரும். எங்கள் தூத்துக்குடி இன்னும் பல விஷயங்களுக்குப் புகழ்பெற்றது. அதில் சில...<br /> <br /> </p>.<p>அதிகமான நீர் நிறைந்த நிலமாக இருந்ததால், ‘தூத்துத் துறைமுகம்' என்று கூறினர். குடியிருப்பும் தோன்றிய பிறகு ‘தூத்துக்குடி' என்று ஆயிற்று. சில கல்வெட்டுகளில் ‘தூற்றிக்குடி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>.<p>தாலமி என்ற கிரேக்கப் பயணியின் நூலில், ‘சோஷிக் குரி'(சிறு குடி) என்று குறிப்பிட்டுள்ளார். அது, தூத்துக்குடியின் பெயரே என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.<br /> <br /> </p>.<p>ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடமாக தூத்துக்குடி இருந்துள்ளது.</p>.<p>தூத்துக்குடி துறைமுகம் ஓர் இயற்கைத் துறைமுகம்.<br /> <br /> </p>.<p>சுதந்திரப் போராட்டத்தின்போது வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் செலுத்திய, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார், புரட்சிக் கவிஞர் பாரதியார் போன்றவர்கள் பிறந்த மண் இது.<br /> <br /> </p>.<p>திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து, 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.</p>.<p>தூத்துக்குடி அனல்மின் நிலையமும், ஸ்பிக் உரத் தொழிற்சாலையும் மிகவும் புகழ்பெற்றவை.<br /> <br /> </p>.<p>தூத்துக்குடியில் ‘மக்ரூன்’ என்ற இனிப்பு மிகவும் பிரபலம்.</p>.<p>தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத் தேர் திருவிழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, உலகப் புகழ்பெற்றது.<br /> <br /> </p>.<p>தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்குப் புகழ்பெற்றது.</p>