<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“மொ</strong></span>த்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?” </p>.<p>“பாபுஜி, ஒருவேளை நான் அப்படி செய்திருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள்தானே?”<br /> <br /> இந்த உரையாடல் மகாத்மா காந்திக்கும் அவரின் பிரிய தோழி சுமதி மொரார்ஜிக்கும் இடையே நடைபெற்றது என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கீதா பிராமல். முழுக்க இந்தியர்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுதேசிக் கப்பல் கம்பெனி, சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. 1919 ஏப்ரல் 5 அன்று `எஸ்.எஸ்.லாயல்டி’ என்ற சுதேசிக் கப்பல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளைத்தான் இந்தியா ‘தேசிய கடல்வழி தினமாக’ இன்றளவும் கொண்டாடிவருகிறது. <br /> <br /> சிந்தியா கப்பல் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான நரோத்தம் மொரார்ஜியின் வீட்டுக்குள் ஜமுனா காலடி எடுத்து வைக்கும்போது அவருக்கு வயது 13. மதுரதாஸ் கோகுல்தாஸ் என்ற செல்வந்தர் வீட்டில் பிறந்த இவர், `நான் பிறந்து வளர்ந்த குடும்பமும் என் புகுந்த வீட்டைப் போல தொழில்முனைவோர் நிறைந்தது. ஆறு ஆண் குழந்தைகளுடன் பிறந்த ஒரே பெண் என்பதால், வீட்டில் சகோதரர்களுக்கு இணையாகத்தான் நடத்தப்பட்டேன். புகுந்த வீட்டில் கிடைத்த அதே சுதந்திரம், நான் பிறந்த வீட்டிலும் எனக்குக் கிடைத்தது' என்று கூறியிருக்கிறார். நரோத்தம் மொரார்ஜியின் மகனான சாந்தகுமார் மொரார்ஜியைத் தன் பதின்மூன்றாவது வயதில் 1922-ம் ஆண்டு ஜமுனா மணக்கும்போது மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.<br /> <br /> ஜமுனாவுக்கு சுமதி எனப் பெயர் மாற்றம் செய்த நரோத்தம், அவரது அபார நிர்வாகத் திறமையைக்கண்டு வியந்தார். சுமதி, கணவர் சாந்தகுமாரின் தூண்டுதலால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார். கூடவே, நரோத்தம் மொரார்ஜி நிர்வாக ஏஜென்சியிலும் பணிக்குச் சென்றுவரத் தொடங்கினார். அலுவலகப் பணி பிடித்துப்போக, 1923-ல், திருமணமான ஓராண்டிலேயே நிர்வாக ஏஜென்சியில் இயக்குநராக அமர்ந்தார். மிகச் சில கப்பல் களையேகொண்டு இயங்கிய நிறுவனம், சுமதியின் நுணுக்கமான வியாபாரத் திறமை யால் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தது.<br /> <br /> சிந்தியா கப்பல் கம்பெனியின் பெரும்பான்மை பங்குகளை நரோத்தம் கையில் வைத்திருந்தாலும், நிர்வாகத்தை இரும்புக்கரம்கொண்டு பிடித்திருந்தார் வால்சந்த் என்ற அவருடைய நண்பர். 1929-ம் ஆண்டு ஒரு விபத்தில் நரோத்தம் இறந்துவிட, சிந்தியா கப்பல் நிறுவனத்தின் நிர்வாகம் பிரச்னைகளைச் சந்திக்க ஆரம்பித்தது. <br /> <br /> 1940-ல், ‘எக்ஸ்-அஃபீஷியோ இயக்குநர்’ எனப் புதிய பதவியை ஏற்படுத்திக்கொண்ட சுமதி, தினசரி நிர்வாகத்தில் முக்கியப் பங்கெடுக்க ஆரம்பித்தார். பின்னர் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட விரும்பிய சுமதி, தன் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். 1944-ல் ஆகாகான் அரண்மனையில் சிறைவைக்கப்பட்ட காந்தி விடுதலையானதும் முதலில் சென்றது சாந்தகுமார் மற்றும் சுமதியின் ஜுஹு வீட்டுக்குத்தான். கஸ்தூர்பாவின் மரணத்தின்போது, காந்தியுடன் துணை நின்றதும் இந்தத் தம்பதிதான். காந்தியின் அறிவுறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 1946-ல் பணியில் அமர்ந்தார். இம்முறை முழு மூச்சாக, முழுநேர நேரடி இயக்குநராகக் களம் இறங்கினார் சுமதி. வால்சந்த் வேறு வழியின்றி நிர்வாகத்திலிருந்து ஒதுங்க நேர்ந்தது.<br /> <br /> இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சிந்தியா கப்பல் நிறுவனத்திடமிருந்த கப்பல்களின் எண்ணிக்கை 19. ஏறத்தாழ ஆறாயிரம் ஊழியர்களை நிர்வகித்து வந்தார் சுமதி. ஆகஸ்ட் 15, 1947-ல் சுமதி தயாரித்த ஆவணப்படம் ஒன்றும் இந்திய விடுதலையோடு வெளியிடப்பட்டது. `தேசிய கப்பல் துறையில் இந்தியாவின் போராட்டம்’ என்ற அந்தப் படம், சிந்தியா கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனங்களின் பங்கு எனக் கப்பல் துறை அதுவரை சந்தித்த சவால்கள் குறித்துப் பேசியது. பால் சில்ஸ் என்ற ஜெர்மானியரால் இயக்கப்பட்ட படம், இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஆவணப்படம் என்ற பெருமையையும் பெற்றது.<br /> <br /> 1948-ன் தொடக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களின்போது, பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கான இந்துக்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தன சிந்தியா கப்பல்கள். 1957-ம் ஆண்டு, இந்திய தேசிய கப்பல் உரிமையாளர் சங்கத்தின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுமதி. உலகிலேயே கப்பல் உரிமை யாளர் சங்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அடைந்தார். <br /> <br /> 1970-ல் லண்டன் நகரைத் தலைமையகமாகக்கொண்ட சர்வதேச கப்பல் ஃபெடரேஷனின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுமதி. 1971-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது அளித்து சுமதியை கௌரவித்தது மத்திய அரசு. <br /> <br /> 43 கப்பல்களுடன் வளர்ச்சி கண்டு நின்ற சிந்தியா கப்பல் நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாகக் கடனில் மூழ்கத் தொடங்க, 1988-ல் அரசுடைமையாக்கப்பட்டது. மும்பை ஜுஹுவில் சுமதி வித்யா கேந்திரா என்ற பள்ளியையும் நிர்வகித்து வந்தார் சுமதி. நரோத்தம் மொரார்ஜி கப்பல் பயிற்சிக் கூடத்தின் தலைவராகவும் இருந்தார். 1992-ம் ஆண்டு வரை சிந்தியா நிறுவனத்தின் கௌரவ இயக்குநராகப் பணியாற்றினார். இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது சிந்தியா கப்பல் நிறுவனம். 1998-ல் மரணமடைந்த சுமதி, இந்தியக் கப்பல் துறையின் அன்னையாக இன்றும் போற்றப்படுகிறார். </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“மொ</strong></span>த்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?” </p>.<p>“பாபுஜி, ஒருவேளை நான் அப்படி செய்திருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள்தானே?”<br /> <br /> இந்த உரையாடல் மகாத்மா காந்திக்கும் அவரின் பிரிய தோழி சுமதி மொரார்ஜிக்கும் இடையே நடைபெற்றது என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கீதா பிராமல். முழுக்க இந்தியர்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுதேசிக் கப்பல் கம்பெனி, சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. 1919 ஏப்ரல் 5 அன்று `எஸ்.எஸ்.லாயல்டி’ என்ற சுதேசிக் கப்பல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளைத்தான் இந்தியா ‘தேசிய கடல்வழி தினமாக’ இன்றளவும் கொண்டாடிவருகிறது. <br /> <br /> சிந்தியா கப்பல் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான நரோத்தம் மொரார்ஜியின் வீட்டுக்குள் ஜமுனா காலடி எடுத்து வைக்கும்போது அவருக்கு வயது 13. மதுரதாஸ் கோகுல்தாஸ் என்ற செல்வந்தர் வீட்டில் பிறந்த இவர், `நான் பிறந்து வளர்ந்த குடும்பமும் என் புகுந்த வீட்டைப் போல தொழில்முனைவோர் நிறைந்தது. ஆறு ஆண் குழந்தைகளுடன் பிறந்த ஒரே பெண் என்பதால், வீட்டில் சகோதரர்களுக்கு இணையாகத்தான் நடத்தப்பட்டேன். புகுந்த வீட்டில் கிடைத்த அதே சுதந்திரம், நான் பிறந்த வீட்டிலும் எனக்குக் கிடைத்தது' என்று கூறியிருக்கிறார். நரோத்தம் மொரார்ஜியின் மகனான சாந்தகுமார் மொரார்ஜியைத் தன் பதின்மூன்றாவது வயதில் 1922-ம் ஆண்டு ஜமுனா மணக்கும்போது மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.<br /> <br /> ஜமுனாவுக்கு சுமதி எனப் பெயர் மாற்றம் செய்த நரோத்தம், அவரது அபார நிர்வாகத் திறமையைக்கண்டு வியந்தார். சுமதி, கணவர் சாந்தகுமாரின் தூண்டுதலால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார். கூடவே, நரோத்தம் மொரார்ஜி நிர்வாக ஏஜென்சியிலும் பணிக்குச் சென்றுவரத் தொடங்கினார். அலுவலகப் பணி பிடித்துப்போக, 1923-ல், திருமணமான ஓராண்டிலேயே நிர்வாக ஏஜென்சியில் இயக்குநராக அமர்ந்தார். மிகச் சில கப்பல் களையேகொண்டு இயங்கிய நிறுவனம், சுமதியின் நுணுக்கமான வியாபாரத் திறமை யால் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தது.<br /> <br /> சிந்தியா கப்பல் கம்பெனியின் பெரும்பான்மை பங்குகளை நரோத்தம் கையில் வைத்திருந்தாலும், நிர்வாகத்தை இரும்புக்கரம்கொண்டு பிடித்திருந்தார் வால்சந்த் என்ற அவருடைய நண்பர். 1929-ம் ஆண்டு ஒரு விபத்தில் நரோத்தம் இறந்துவிட, சிந்தியா கப்பல் நிறுவனத்தின் நிர்வாகம் பிரச்னைகளைச் சந்திக்க ஆரம்பித்தது. <br /> <br /> 1940-ல், ‘எக்ஸ்-அஃபீஷியோ இயக்குநர்’ எனப் புதிய பதவியை ஏற்படுத்திக்கொண்ட சுமதி, தினசரி நிர்வாகத்தில் முக்கியப் பங்கெடுக்க ஆரம்பித்தார். பின்னர் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட விரும்பிய சுமதி, தன் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். 1944-ல் ஆகாகான் அரண்மனையில் சிறைவைக்கப்பட்ட காந்தி விடுதலையானதும் முதலில் சென்றது சாந்தகுமார் மற்றும் சுமதியின் ஜுஹு வீட்டுக்குத்தான். கஸ்தூர்பாவின் மரணத்தின்போது, காந்தியுடன் துணை நின்றதும் இந்தத் தம்பதிதான். காந்தியின் அறிவுறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 1946-ல் பணியில் அமர்ந்தார். இம்முறை முழு மூச்சாக, முழுநேர நேரடி இயக்குநராகக் களம் இறங்கினார் சுமதி. வால்சந்த் வேறு வழியின்றி நிர்வாகத்திலிருந்து ஒதுங்க நேர்ந்தது.<br /> <br /> இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சிந்தியா கப்பல் நிறுவனத்திடமிருந்த கப்பல்களின் எண்ணிக்கை 19. ஏறத்தாழ ஆறாயிரம் ஊழியர்களை நிர்வகித்து வந்தார் சுமதி. ஆகஸ்ட் 15, 1947-ல் சுமதி தயாரித்த ஆவணப்படம் ஒன்றும் இந்திய விடுதலையோடு வெளியிடப்பட்டது. `தேசிய கப்பல் துறையில் இந்தியாவின் போராட்டம்’ என்ற அந்தப் படம், சிந்தியா கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனங்களின் பங்கு எனக் கப்பல் துறை அதுவரை சந்தித்த சவால்கள் குறித்துப் பேசியது. பால் சில்ஸ் என்ற ஜெர்மானியரால் இயக்கப்பட்ட படம், இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஆவணப்படம் என்ற பெருமையையும் பெற்றது.<br /> <br /> 1948-ன் தொடக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களின்போது, பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கான இந்துக்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தன சிந்தியா கப்பல்கள். 1957-ம் ஆண்டு, இந்திய தேசிய கப்பல் உரிமையாளர் சங்கத்தின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுமதி. உலகிலேயே கப்பல் உரிமை யாளர் சங்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அடைந்தார். <br /> <br /> 1970-ல் லண்டன் நகரைத் தலைமையகமாகக்கொண்ட சர்வதேச கப்பல் ஃபெடரேஷனின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுமதி. 1971-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது அளித்து சுமதியை கௌரவித்தது மத்திய அரசு. <br /> <br /> 43 கப்பல்களுடன் வளர்ச்சி கண்டு நின்ற சிந்தியா கப்பல் நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாகக் கடனில் மூழ்கத் தொடங்க, 1988-ல் அரசுடைமையாக்கப்பட்டது. மும்பை ஜுஹுவில் சுமதி வித்யா கேந்திரா என்ற பள்ளியையும் நிர்வகித்து வந்தார் சுமதி. நரோத்தம் மொரார்ஜி கப்பல் பயிற்சிக் கூடத்தின் தலைவராகவும் இருந்தார். 1992-ம் ஆண்டு வரை சிந்தியா நிறுவனத்தின் கௌரவ இயக்குநராகப் பணியாற்றினார். இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது சிந்தியா கப்பல் நிறுவனம். 1998-ல் மரணமடைந்த சுமதி, இந்தியக் கப்பல் துறையின் அன்னையாக இன்றும் போற்றப்படுகிறார். </p>