<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>லைப்பாம்பைத் தோளில் சுமந்து<br /> செல்வது போலிருக்கிறது அவனது<br /> நட்பு.<br /> <br /> பழகிய பாம்புதானெனினும்<br /> சில சமயம் கழுத்தை நெறிக்கிறது.<br /> <br /> சுருட்டு சாராயம் கோழிக்குழம்பு<br /> இதெல்லாம் இஷ்டமதற்கு.<br /> சாராயம் குடித்து சுருட்டைப் புகைத்து<br /> பல சமயம் பாசத்தைக் கொட்டும்<br /> சில சமயம் கோபத்தில் சீறும்.<br /> <br /> போதை ததும்பும்<br /> அழகிய தனது விழிகளால்<br /> அன்றொரு நாள் எனது<br /> கவிதைகளை வாசிக்கத் துவங்கியது.</p>.<p>நான் மண்ணைப் பற்றி எழுதிய கவிதையை<br /> வாசித்தபோது அதற்கு பருந்தின் கூடு<br /> நினைவிற்கு வந்திருக்க வேண்டும்.<br /> <br /> கழுத்தில் அதைக் காணவில்லை<br /> `பருந்தின் முட்டைகளைக் குடித்துவிட்டு<br /> <br /> என் கழுத்துக்கு வந்துவிடுமது இன்றிரவு.<br /> <br /> மலைப்பாம்பைத் தோளில் சுமந்தபடிக்கு<br /> எனக்குக் கடன் கொடுத்தவனிடம்<br /> வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறேன்.<br /> <br /> அவனையே உற்று நோக்கியது அது.<br /> அவன் கழுத்திலும் ஒரு மலைப்பாம்பு<br /> இருந்தது.<br /> <br /> நானும்<br /> அவனும்<br /> அறிந்திருக்கவில்லை<br /> அவ்விரு மலைப்பாம்புகளின் உரையாடலை.<br /> <br /> <br /> நான் உறங்க முயற்சிக்கிறேன்<br /> தன் பிடியை இன்னும் இறுக்கி<br /> என் சுவாசத்தைச் சிதைக்கிறது<br /> மலைப்பாம்பு.<br /> <br /> நான் உறக்கம் வருவதற்காக<br /> ஒரு புத்தகத்தை வாசிக்க எடுக்கிறேன்<br /> என் பார்வையில் தனது கரிய<br /> நிழலைப் படரவிடுகிறது.<br /> <br /> நான் மது அருந்த நினைக்கிறேன்<br /> பிடியை மெள்ளத் தளர்த்தி<br /> எனது கண்ணாடிக் கோப்பைக்கு<br /> முத்தம் தந்தபடி<br /> <br /> என்னோடு மதுவருந்தும் பொழுதின்<br /> அற்புதத்திற்காகக் காத்திருப்பதாகச்<br /> சொன்னது.</p>.<p>நான் புகைபிடிக்க நினைக்கிறேன்<br /> இப்போது எனது கழுத்தில் அது இல்லை.<br /> <br /> எனது பிறந்த நாளுக்கு<br /> ஒரு சட்டை வாங்க வேண்டுமென<br /> ஆயத்த ஆடையகத்துக்கு<br /> கூட்டிப்போனது மலைப்பாம்பு.<br /> நிறத்தேர்வு என்னிஷ்டப்படியில்லை<br /> கடைசியில் அது ஒரு<br /> சட்டை வாங்கித் தந்தது<br /> நாட்டுக்கோழி முட்டை ஓட்டின் நிறத்தில்.<br /> <br /> அது பரிசளித்த சட்டையை<br /> அணிந்துகொண்டு காதலியைப்<br /> பார்க்கப் போகிற வழியில்<br /> எனது தனிமைக்காக அதனிடம்<br /> கெஞ்சினேன்.<br /> அவள் வீட்டு வாசலருகே<br /> அது பார்த்துவிட்டக்<br /> கோழிக்குஞ்சொன்றைப்<br /> புசித்து முடிப்பதற்குள்<br /> வந்துவிட வேண்டுமென்றது.<br /> <br /> <br /> சாணம் மெழுகிய தரையில்<br /> நெல் மூட்டைகள் அடுக்கிய<br /> அறையில் அவளோடு<br /> தனிமையிலிருந்தேன்.<br /> வெளியே<br /> கோழிக்குஞ்சின் உயிர் பிரியும்<br /> சத்தம் கேட்டது.<br /> நான் விடைபெறும்போது<br /> அதற்குள் என்ன அவசரம்<br /> என்றாள்.<br /> <br /> <br /> மலைப்பாம்பு கருவுற்றிருப்பதாக<br /> என்னிடம் சொன்னது.<br /> எல்லாக் குட்டிகளுக்கும்<br /> எனது கழுத்து தாங்காதென்றேன்.<br /> <br /> சிரித்துக்கொண்டே<br /> ஒவ்வொரு குட்டிக்கும்<br /> ஒவ்வொரு கழுத்தை<br /> முன்பதிவு செய்திருக்கிறேன்<br /> என்றது.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ம</span></strong>லைப்பாம்பைத் தோளில் சுமந்து<br /> செல்வது போலிருக்கிறது அவனது<br /> நட்பு.<br /> <br /> பழகிய பாம்புதானெனினும்<br /> சில சமயம் கழுத்தை நெறிக்கிறது.<br /> <br /> சுருட்டு சாராயம் கோழிக்குழம்பு<br /> இதெல்லாம் இஷ்டமதற்கு.<br /> சாராயம் குடித்து சுருட்டைப் புகைத்து<br /> பல சமயம் பாசத்தைக் கொட்டும்<br /> சில சமயம் கோபத்தில் சீறும்.<br /> <br /> போதை ததும்பும்<br /> அழகிய தனது விழிகளால்<br /> அன்றொரு நாள் எனது<br /> கவிதைகளை வாசிக்கத் துவங்கியது.</p>.<p>நான் மண்ணைப் பற்றி எழுதிய கவிதையை<br /> வாசித்தபோது அதற்கு பருந்தின் கூடு<br /> நினைவிற்கு வந்திருக்க வேண்டும்.<br /> <br /> கழுத்தில் அதைக் காணவில்லை<br /> `பருந்தின் முட்டைகளைக் குடித்துவிட்டு<br /> <br /> என் கழுத்துக்கு வந்துவிடுமது இன்றிரவு.<br /> <br /> மலைப்பாம்பைத் தோளில் சுமந்தபடிக்கு<br /> எனக்குக் கடன் கொடுத்தவனிடம்<br /> வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறேன்.<br /> <br /> அவனையே உற்று நோக்கியது அது.<br /> அவன் கழுத்திலும் ஒரு மலைப்பாம்பு<br /> இருந்தது.<br /> <br /> நானும்<br /> அவனும்<br /> அறிந்திருக்கவில்லை<br /> அவ்விரு மலைப்பாம்புகளின் உரையாடலை.<br /> <br /> <br /> நான் உறங்க முயற்சிக்கிறேன்<br /> தன் பிடியை இன்னும் இறுக்கி<br /> என் சுவாசத்தைச் சிதைக்கிறது<br /> மலைப்பாம்பு.<br /> <br /> நான் உறக்கம் வருவதற்காக<br /> ஒரு புத்தகத்தை வாசிக்க எடுக்கிறேன்<br /> என் பார்வையில் தனது கரிய<br /> நிழலைப் படரவிடுகிறது.<br /> <br /> நான் மது அருந்த நினைக்கிறேன்<br /> பிடியை மெள்ளத் தளர்த்தி<br /> எனது கண்ணாடிக் கோப்பைக்கு<br /> முத்தம் தந்தபடி<br /> <br /> என்னோடு மதுவருந்தும் பொழுதின்<br /> அற்புதத்திற்காகக் காத்திருப்பதாகச்<br /> சொன்னது.</p>.<p>நான் புகைபிடிக்க நினைக்கிறேன்<br /> இப்போது எனது கழுத்தில் அது இல்லை.<br /> <br /> எனது பிறந்த நாளுக்கு<br /> ஒரு சட்டை வாங்க வேண்டுமென<br /> ஆயத்த ஆடையகத்துக்கு<br /> கூட்டிப்போனது மலைப்பாம்பு.<br /> நிறத்தேர்வு என்னிஷ்டப்படியில்லை<br /> கடைசியில் அது ஒரு<br /> சட்டை வாங்கித் தந்தது<br /> நாட்டுக்கோழி முட்டை ஓட்டின் நிறத்தில்.<br /> <br /> அது பரிசளித்த சட்டையை<br /> அணிந்துகொண்டு காதலியைப்<br /> பார்க்கப் போகிற வழியில்<br /> எனது தனிமைக்காக அதனிடம்<br /> கெஞ்சினேன்.<br /> அவள் வீட்டு வாசலருகே<br /> அது பார்த்துவிட்டக்<br /> கோழிக்குஞ்சொன்றைப்<br /> புசித்து முடிப்பதற்குள்<br /> வந்துவிட வேண்டுமென்றது.<br /> <br /> <br /> சாணம் மெழுகிய தரையில்<br /> நெல் மூட்டைகள் அடுக்கிய<br /> அறையில் அவளோடு<br /> தனிமையிலிருந்தேன்.<br /> வெளியே<br /> கோழிக்குஞ்சின் உயிர் பிரியும்<br /> சத்தம் கேட்டது.<br /> நான் விடைபெறும்போது<br /> அதற்குள் என்ன அவசரம்<br /> என்றாள்.<br /> <br /> <br /> மலைப்பாம்பு கருவுற்றிருப்பதாக<br /> என்னிடம் சொன்னது.<br /> எல்லாக் குட்டிகளுக்கும்<br /> எனது கழுத்து தாங்காதென்றேன்.<br /> <br /> சிரித்துக்கொண்டே<br /> ஒவ்வொரு குட்டிக்கும்<br /> ஒவ்வொரு கழுத்தை<br /> முன்பதிவு செய்திருக்கிறேன்<br /> என்றது.</p>