<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாவின் கைகள்<br /> பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் கொடுத்தனுப்பும்போதெல்லாம்<br /> பாத்திரத்தில் நாலுபிடி<br /> சர்க்கரையிட்டுத் திருப்பிக் கொடுப்பாள் அம்மா.<br /> <br /> சாப்பிட்டு முடித்துக் கழுவுவதற்குப் போடும் சோற்றுப் பானையில் <br /> ரெண்டுபிடிச் சோறிருக்கும்.<br /> ஒருபோதும் <br /> பாத்திரத்தைத் துடைக்கமாட்டாள் <br /> அம்மா.<br /> <br /> மூடை அரிசி தீர்ந்தாலும் புதிதாய்<br /> வாங்கும் வரை நாலுபிடி அரிசியாவது மிச்சமிருக்கும்<br /> அரிசிச் சாக்குப்பையில்.<br /> <br /> ஒருபோணி இட்லி மாவுக்கு <br /> அரைப்பிடி உப்பிடுவாள்.<br /> <br /> சோறூட்டும்போதெல்லாம்<br /> தட்டின் விளிம்போரம் கைப்பிடி<br /> சோற்றுக் கொழுக்கட்டையை<br /> மோதிரம் மினுங்க<br /> வரிசையாய் அடுக்குவாள்.<br /> <br /> நெற்றியில் பெரிதாய் குங்குமம்<br /> அப்பி நடுவீட்டில் கிடத்தியிருக்கையில்<br /> அம்மாவின் விரித்தபடி உறைந்திருக்கும் கைவிரல்களைப் <br /> பார்த்தபடியே விம்முகின்றன<br /> ரத்த சொந்தங்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயாபுதீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நி</strong></span>னைவில் காடுள்ள நான்<br /> எனக்கும் அந்த யானைக்கும் <br /> ஏதோ இருந்திருக்கிறது <br /> காடு பிடிக்கும் என்பதையும் தாண்டி<br /> யானை கோயில் யானை ஆவதில் <br /> எல்லாம் எந்த விருப்பமும் <br /> இல்லை எனக்கு <br /> கல்லூரி நாள்கள் முழுக்க <br /> யானை கட்டியிருக்கும் <br /> கோயில் வீதி வழியே சென்றது <br /> எங்கள் தொடர்பின் நம்பிக்கை <br /> திருவிழா நாள்களில் <br /> சீவி சிங்காரித்து பட்டாடை உடுத்தி <br /> ஊர்வலம் வரும்போதெல்லாம் <br /> ரகசியமாய்ப் பார்த்துக்கொள்வோம்<br /> வயதானதோ என்னவோ <br /> யானை செத்துப்போனது தெரிகையில் <br /> யானை எடைக்குக் கூடுதலாக <br /> துக்கமிருந்தது <br /> அதன்பிறகு அவ்வழியே <br /> செல்லும் போதெல்லாம் என்னையும் <br /> அறியாமல் மெல்லத் திரும்பி <br /> யானை கட்டியிருந்த <br /> இடத்தைக் காணத் தொடங்கியிருந்தேன் <br /> பின்னொரு இரவில் ஊர்க்காட்டில் <br /> அந்த யானையைப் போல <br /> ஒரு நிழலைக் கண்டதாகக் கூறிய <br /> நண்பனிடம் நான் எதுவும் பேசவில்லை <br /> நினைவில் காடுள்ள யானை சாவதில்லை <br /> யானை நடையில்<br /> ஊர் தாண்டிக்கொண்டிருந்தேன்..! <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி </strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>தனிமை தீர...</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஊ</strong></span>ர் திரும்பும்<br /> ஒவ்வொரு முறையும்<br /> ஒரு பூனைக்குட்டியோ<br /> நாய்க்குட்டியோ<br /> புதிதாய் இருக்கிறது வீட்டில்<br /> பாவம், தனிமையில் என்ன செய்வாள்<br /> வளர்த்துப் பழக்கப்பட்ட அம்மா.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- அரவிந்தன்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நம்பிக்கை</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>ற்றிலாடும் மரக்கிளை<br /> வெகு நேரமாய் அசைத்துக் கொண்டிருக்கிறது<br /> ஒரு நட்சத்திரத்தை <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மகேஷ் சிபி</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ம்மாவின் கைகள்<br /> பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் கொடுத்தனுப்பும்போதெல்லாம்<br /> பாத்திரத்தில் நாலுபிடி<br /> சர்க்கரையிட்டுத் திருப்பிக் கொடுப்பாள் அம்மா.<br /> <br /> சாப்பிட்டு முடித்துக் கழுவுவதற்குப் போடும் சோற்றுப் பானையில் <br /> ரெண்டுபிடிச் சோறிருக்கும்.<br /> ஒருபோதும் <br /> பாத்திரத்தைத் துடைக்கமாட்டாள் <br /> அம்மா.<br /> <br /> மூடை அரிசி தீர்ந்தாலும் புதிதாய்<br /> வாங்கும் வரை நாலுபிடி அரிசியாவது மிச்சமிருக்கும்<br /> அரிசிச் சாக்குப்பையில்.<br /> <br /> ஒருபோணி இட்லி மாவுக்கு <br /> அரைப்பிடி உப்பிடுவாள்.<br /> <br /> சோறூட்டும்போதெல்லாம்<br /> தட்டின் விளிம்போரம் கைப்பிடி<br /> சோற்றுக் கொழுக்கட்டையை<br /> மோதிரம் மினுங்க<br /> வரிசையாய் அடுக்குவாள்.<br /> <br /> நெற்றியில் பெரிதாய் குங்குமம்<br /> அப்பி நடுவீட்டில் கிடத்தியிருக்கையில்<br /> அம்மாவின் விரித்தபடி உறைந்திருக்கும் கைவிரல்களைப் <br /> பார்த்தபடியே விம்முகின்றன<br /> ரத்த சொந்தங்கள்.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயாபுதீன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நி</strong></span>னைவில் காடுள்ள நான்<br /> எனக்கும் அந்த யானைக்கும் <br /> ஏதோ இருந்திருக்கிறது <br /> காடு பிடிக்கும் என்பதையும் தாண்டி<br /> யானை கோயில் யானை ஆவதில் <br /> எல்லாம் எந்த விருப்பமும் <br /> இல்லை எனக்கு <br /> கல்லூரி நாள்கள் முழுக்க <br /> யானை கட்டியிருக்கும் <br /> கோயில் வீதி வழியே சென்றது <br /> எங்கள் தொடர்பின் நம்பிக்கை <br /> திருவிழா நாள்களில் <br /> சீவி சிங்காரித்து பட்டாடை உடுத்தி <br /> ஊர்வலம் வரும்போதெல்லாம் <br /> ரகசியமாய்ப் பார்த்துக்கொள்வோம்<br /> வயதானதோ என்னவோ <br /> யானை செத்துப்போனது தெரிகையில் <br /> யானை எடைக்குக் கூடுதலாக <br /> துக்கமிருந்தது <br /> அதன்பிறகு அவ்வழியே <br /> செல்லும் போதெல்லாம் என்னையும் <br /> அறியாமல் மெல்லத் திரும்பி <br /> யானை கட்டியிருந்த <br /> இடத்தைக் காணத் தொடங்கியிருந்தேன் <br /> பின்னொரு இரவில் ஊர்க்காட்டில் <br /> அந்த யானையைப் போல <br /> ஒரு நிழலைக் கண்டதாகக் கூறிய <br /> நண்பனிடம் நான் எதுவும் பேசவில்லை <br /> நினைவில் காடுள்ள யானை சாவதில்லை <br /> யானை நடையில்<br /> ஊர் தாண்டிக்கொண்டிருந்தேன்..! <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி </strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>தனிமை தீர...</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஊ</strong></span>ர் திரும்பும்<br /> ஒவ்வொரு முறையும்<br /> ஒரு பூனைக்குட்டியோ<br /> நாய்க்குட்டியோ<br /> புதிதாய் இருக்கிறது வீட்டில்<br /> பாவம், தனிமையில் என்ன செய்வாள்<br /> வளர்த்துப் பழக்கப்பட்ட அம்மா.<br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- அரவிந்தன்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நம்பிக்கை</strong></span></u><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>ற்றிலாடும் மரக்கிளை<br /> வெகு நேரமாய் அசைத்துக் கொண்டிருக்கிறது<br /> ஒரு நட்சத்திரத்தை <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><strong>- மகேஷ் சிபி</strong></span></p>