<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவே வளரும் கழுதை </strong></span></u><br /> <br /> கூடவே வளருகிற<br /> ஒரு கழுதைக்கு <br /> விதி என்று பெயர் சூட்டியுள்ளேன்.<br /> <br /> என்னால் சுமக்க முடியாததை <br /> ஆட்சேபிக்காத <br /> அதன்மீது ஏற்றுகிறேன். <br /> <br /> என் இயலாமை, பாரம், <br /> தோல்வி, வலி, <br /> உடையும் கனவுச்சில்லுகள் <br /> அனைத்தையும் மூட்டை கட்டி <br /> மறுப்பு தெரிவிக்காத <br /> அதன்மீது கட்டுகிறேன்.<br /> <br /> என் கண்ணீரை <br /> என் வியர்வையை <br /> என் காயத்தின் ரத்தத்தை <br /> அதன்மீது துடைக்கிறேன் <br /> அது வருந்துவதில்லை.<br /> <br /> என் எதிர்மறைகளின் <br /> எதிர்வினைகளுக்கு <br /> அதைக் காரணப்படுத்துகிறேன்<br /> அது இயல்பாகவே இருக்கிறது.<br /> <br /> கயிற்றின் ஒருமுனையை <br /> அதன் கழுத்திலும் <br /> மறுமுனையை <br /> என் கழுத்திலும் கட்டியுள்ளேன்.<br /> <br /> சிலநேரம் அதை நான்<br /> இழுத்துச்செல்கிறேன் <br /> சிலநேரம் அது என்னை <br /> இழுத்துச்செல்கிறது.<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நிம்மதியில் உறங்கும் அம்மன்...</strong></span></u><br /> <br /> கோயிலுக்குப்<br /> பாத்தியப்பட்டவர்களின்<br /> பிள்ளைகளில் ஒருவன்<br /> சாதிவிட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டதால்<br /> வருடந்தவறாமல் நடந்தேறும்<br /> அம்மன் கோயில் திருவிழா<br /> கடந்த நான்கு வருடமா<br /> நடக்கவேயில்லை.<br /> காதல் ஜோடிகளைத்<br /> தள்ளி வைத்துவிட்ட<br /> திருப்தியில்<br /> ஊர் இருக்க...<br /> ஊரையே ஒதுக்கி வைத்த<br /> நிம்மதியில் உறங்குகிறாள்<br /> ஆத்தா...<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>கீர்த்தனை </strong></span></u><br /> <br /> நகரச்சந்தடியின் எந்தப் பரபரப்பையும்<br /> உள்வாங்கிக்கொள்ளாமல்<br /> நெரிசல்மிகுந்த ரோட்டைக் கடக்கிறான்<br /> பார்வையற்றவன்.<br /> உழவர் சந்தையின் முன்முகப்பில்<br /> குழந்தைகள் விளையாட்டுப் <br /> பொருள்களை விற்பனை செய்கின்ற அவன்<br /> விற்கின்ற பொருள்களின் கவனம் ஈர்க்க <br /> ரோஸ் நிறத்திலான பிளாஸ்டிக் விசிலை <br /> சதா ஊதிக்கொண்டேயிருப்பான்<br /> இந்த முறை ரோட்டைக் கடக்க <br /> விசிலுக்குப் பதிலாக <br /> தேவனின் கீர்த்தனைகளை <br /> இசைக்கத் தொடங்கினான்<br /> பார்வையற்றோர் பள்ளியின் <br /> பிரார்த்தனைக் கூடத்தில் அவன் <br /> பலமுறை பாடிய பாடல் அது<br /> கையிலிருக்கிற துணைக்கம்பின் சத்தமே<br /> அவனது பாடலுக்கான சந்தம்<br /> தான் இசைத்துக்கொண்டிருக்கிற <br /> கீர்த்தனைகளின் வழியாக<br /> தனது வழிப்பாதையை வகுத்துக் கொண்டான்<br /> அவனது மஞ்சள்பையில் <br /> திணித்து வைக்கப்பட்டிருக்கிற<br /> பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு <br /> இதுபோன்று எப்போதாவதுதான் <br /> அவனுடைய கீர்த்தனைகளைக் <br /> கேட்கின்ற வாய்ப்புகள் கிட்டுவதுண்டு.<br /> அவனது நல்லிசையின் சிலிர்ப்பில்<br /> அவை ஒன்றோடொன்று <br /> உரசிக்கொள்வதுண்டு<br /> வாசம் உணர்ந்து தன் இருப்பிடமடைந்து <br /> இசைப்பதை நிறுத்திக்கொள்கிற <br /> அந்த கணத்தில் <br /> அவன் முன்னே விரிகிறது<br /> ஓர் கடல்<br /> ஓர் ஆகாயம்<br /> நிறைவாக ஓர் அண்டவெளி<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- வே.முத்துக்குமார்</strong></span></p>
<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூடவே வளரும் கழுதை </strong></span></u><br /> <br /> கூடவே வளருகிற<br /> ஒரு கழுதைக்கு <br /> விதி என்று பெயர் சூட்டியுள்ளேன்.<br /> <br /> என்னால் சுமக்க முடியாததை <br /> ஆட்சேபிக்காத <br /> அதன்மீது ஏற்றுகிறேன். <br /> <br /> என் இயலாமை, பாரம், <br /> தோல்வி, வலி, <br /> உடையும் கனவுச்சில்லுகள் <br /> அனைத்தையும் மூட்டை கட்டி <br /> மறுப்பு தெரிவிக்காத <br /> அதன்மீது கட்டுகிறேன்.<br /> <br /> என் கண்ணீரை <br /> என் வியர்வையை <br /> என் காயத்தின் ரத்தத்தை <br /> அதன்மீது துடைக்கிறேன் <br /> அது வருந்துவதில்லை.<br /> <br /> என் எதிர்மறைகளின் <br /> எதிர்வினைகளுக்கு <br /> அதைக் காரணப்படுத்துகிறேன்<br /> அது இயல்பாகவே இருக்கிறது.<br /> <br /> கயிற்றின் ஒருமுனையை <br /> அதன் கழுத்திலும் <br /> மறுமுனையை <br /> என் கழுத்திலும் கட்டியுள்ளேன்.<br /> <br /> சிலநேரம் அதை நான்<br /> இழுத்துச்செல்கிறேன் <br /> சிலநேரம் அது என்னை <br /> இழுத்துச்செல்கிறது.<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>நிம்மதியில் உறங்கும் அம்மன்...</strong></span></u><br /> <br /> கோயிலுக்குப்<br /> பாத்தியப்பட்டவர்களின்<br /> பிள்ளைகளில் ஒருவன்<br /> சாதிவிட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டதால்<br /> வருடந்தவறாமல் நடந்தேறும்<br /> அம்மன் கோயில் திருவிழா<br /> கடந்த நான்கு வருடமா<br /> நடக்கவேயில்லை.<br /> காதல் ஜோடிகளைத்<br /> தள்ளி வைத்துவிட்ட<br /> திருப்தியில்<br /> ஊர் இருக்க...<br /> ஊரையே ஒதுக்கி வைத்த<br /> நிம்மதியில் உறங்குகிறாள்<br /> ஆத்தா...<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- சாமி கிரிஷ்</strong></span></p>.<p><u><span style="color: rgb(255, 0, 0);"><strong>கீர்த்தனை </strong></span></u><br /> <br /> நகரச்சந்தடியின் எந்தப் பரபரப்பையும்<br /> உள்வாங்கிக்கொள்ளாமல்<br /> நெரிசல்மிகுந்த ரோட்டைக் கடக்கிறான்<br /> பார்வையற்றவன்.<br /> உழவர் சந்தையின் முன்முகப்பில்<br /> குழந்தைகள் விளையாட்டுப் <br /> பொருள்களை விற்பனை செய்கின்ற அவன்<br /> விற்கின்ற பொருள்களின் கவனம் ஈர்க்க <br /> ரோஸ் நிறத்திலான பிளாஸ்டிக் விசிலை <br /> சதா ஊதிக்கொண்டேயிருப்பான்<br /> இந்த முறை ரோட்டைக் கடக்க <br /> விசிலுக்குப் பதிலாக <br /> தேவனின் கீர்த்தனைகளை <br /> இசைக்கத் தொடங்கினான்<br /> பார்வையற்றோர் பள்ளியின் <br /> பிரார்த்தனைக் கூடத்தில் அவன் <br /> பலமுறை பாடிய பாடல் அது<br /> கையிலிருக்கிற துணைக்கம்பின் சத்தமே<br /> அவனது பாடலுக்கான சந்தம்<br /> தான் இசைத்துக்கொண்டிருக்கிற <br /> கீர்த்தனைகளின் வழியாக<br /> தனது வழிப்பாதையை வகுத்துக் கொண்டான்<br /> அவனது மஞ்சள்பையில் <br /> திணித்து வைக்கப்பட்டிருக்கிற<br /> பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு <br /> இதுபோன்று எப்போதாவதுதான் <br /> அவனுடைய கீர்த்தனைகளைக் <br /> கேட்கின்ற வாய்ப்புகள் கிட்டுவதுண்டு.<br /> அவனது நல்லிசையின் சிலிர்ப்பில்<br /> அவை ஒன்றோடொன்று <br /> உரசிக்கொள்வதுண்டு<br /> வாசம் உணர்ந்து தன் இருப்பிடமடைந்து <br /> இசைப்பதை நிறுத்திக்கொள்கிற <br /> அந்த கணத்தில் <br /> அவன் முன்னே விரிகிறது<br /> ஓர் கடல்<br /> ஓர் ஆகாயம்<br /> நிறைவாக ஓர் அண்டவெளி<br /> <br /> <span style="color: rgb(153, 51, 0);"><strong>- வே.முத்துக்குமார்</strong></span></p>