<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அழுகை </strong></span><br /> <br /> <strong>ஊ</strong>ரில் இருக்கும் முக்கியப் புள்ளிகள்<br /> எல்லாருக்கும் விஷயத்தை <br /> தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.<br /> நாளை ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது <br /> என்பதில் கூடுதல் கவனம் மண்டைக்குள் <br /> வெளியூரில் இருக்கும் சொந்த பந்தங்கள் <br /> எல்லாருக்கும் தகவல் சொல்லி <br /> தாவு தீர்ந்துபோகிறது <br /> இடையிடையே வந்தவர், வந்துகொண்டிருப்பவர்<br /> எல்லாருக்கும் தேநீர்... நாற்காலி என்று <br /> பார்த்துப் பார்த்து அது ஒரு பக்கம் <br /> ஏழெட்டு முறை முயன்ற பிறகுதான் <br /> கிடைக்கிறது ஸ்லாட் <br /> இடையிடையே துக்கம் விசாரிக்க <br /> வருபவர்களிடம் அதே முகபாவனையில் <br /> பதில் சொல்லக் கடமையும் இருக்கிறது <br /> சாமி சம்பிரதாயம் பழக்கவழக்கம் என்று <br /> எல்லாப் பேச்சுக்கும் முன்னிருக்க வேண்டியிருக்கிறது<br /> மழை வர்ற மாதிரி இருக்கு.. வந்துடக் கூடாதுங்கிற <br /> தடுமாற்றத்துல தவிப்போ தவிப்பு<br /> காடு போயிட்டு வந்த பிறகு எல்லாரும் <br /> சாப்பிடுவதற்குச் செய்ய நடக்கும் ஏற்பாட்டிலும் <br /> முதன்மைப் பங்கெடுக்க அவனுக்குத்தான்<br /> கோடித்துணி... கட்ட மொய்... <br /> பங்காளி சொந்தம்... பாதி சொந்தம்... <br /> கழுத்தறுக்கும் சம்பிரதாயங்களைக் கடப்பது பெரும்பாடு<br /> எல்லாம் முடிய காத்திருக்கிறான் <br /> விடிகாலை நேரம் கிடைக்கும்... <br /> வாய் திறந்து <br /> அம்மா அம்மா என்று அழுதுதீர்க்க..!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- கவிஜி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாதா பிதா குரு தெய்வம்</strong></span><br /> <br /> <strong>சா</strong>தம் ஊட்டாத அம்மாவுக்கு ஒன்று<br /> சாக்லேட் வாங்கித்தராத அப்பாவுக்கு ஒன்று<br /> ஸ்கேலால் அடித்த மிஸ்ஸுக்கு ஒன்று என்று<br /> மூன்று தோப்புக்கரணங்களைக் கடவுள் போடுகிறார்<br /> நிலாக்குட்டியின் கனவில்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- பனிமொழி சாதனா</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நீ<strong>ர் </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>முட்டைகளை உடைக்கும் `மியாவ்’கள்</strong></span><br /> <br /> <strong>வ</strong>ளர்ப்புப்பூனைக்கும் அலங்கார மீன்களுக்குமான<br /> உறவென்பது கண்ணாடித்தொட்டி அறிந்த ரகசியம்<br /> சதுரக்கடலை அவ்வப்போது வட்டமடிக்கும்<br /> மியாவ்களுக்கு விசிறத்தொடங்கும் வண்ணத் துடுப்புகள் <br /> <br /> இமைகளை மூடிக்கொண்டு சயனிக்கும் தருணங்களில்<br /> தன் ஒளிரும் கண்களை நீருக்குள் நீந்தவிடும் <br /> பூச்சையின் காதுகள் மெதுவாக அசைந்துகொண்டிருக்கும்,<br /> சலசலவென நீரின் சப்தமென செவிக்குள் நுழைந்து<br /> தாலாட்டுப் பாடும் மீனின் பாஷைகள்<br /> <br /> தொட்டிக்குள் மிளிரும் ஜோடி கால்பந்துகளை<br /> முட்டி விளையாடும் மீன்கள்<br /> அளவில்லா முத்தங்களைப் பரிசளிக்கின்றன.<br /> தன் வால் விறைத்து உயர்த்தி நன்றி நவிழும் பூனைக்கு<br /> காற்றுக்குமிழ்களைப் பூக்கின்றன மீன்கள்<br /> <br /> பூனைக்கும் வளர்ப்பு மீன்களுக்கும்<br /> ரகசிய உடன்படிக்கையெல்லாம் இல்லை<br /> சில நேரங்களில் தொடர்ந்து வரும்<br /> மியாவ் சப்தங்கள் பசியால் வருவதாக நினைக்கும் மீன்கள்<br /> அளவுக்கதிகமாக வெளியேற்றுகின்றன பிராணவாயுக் குமிழ்களை<br /> <br /> மியாவ் கூச்சல்கள்தான் கண்ணாடித்தொட்டிக்குள் பாய்ந்து<br /> மீன்கள் சுவாசிக்க குமிழ்களை உடைப்பதாகப் பூனையும்<br /> நீர் முட்டைகளை சாப்பிட்டு <br /> பூனை பசியாற்றிக்கொள்வதாக மீன்களும் நம்புவதை<br /> ஒருபோதும் தடுத்ததில்லை கண்ணாடிச் சுவர்கள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">- வலங்கைமான் நூர்தீன்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அழுகை </strong></span><br /> <br /> <strong>ஊ</strong>ரில் இருக்கும் முக்கியப் புள்ளிகள்<br /> எல்லாருக்கும் விஷயத்தை <br /> தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.<br /> நாளை ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது <br /> என்பதில் கூடுதல் கவனம் மண்டைக்குள் <br /> வெளியூரில் இருக்கும் சொந்த பந்தங்கள் <br /> எல்லாருக்கும் தகவல் சொல்லி <br /> தாவு தீர்ந்துபோகிறது <br /> இடையிடையே வந்தவர், வந்துகொண்டிருப்பவர்<br /> எல்லாருக்கும் தேநீர்... நாற்காலி என்று <br /> பார்த்துப் பார்த்து அது ஒரு பக்கம் <br /> ஏழெட்டு முறை முயன்ற பிறகுதான் <br /> கிடைக்கிறது ஸ்லாட் <br /> இடையிடையே துக்கம் விசாரிக்க <br /> வருபவர்களிடம் அதே முகபாவனையில் <br /> பதில் சொல்லக் கடமையும் இருக்கிறது <br /> சாமி சம்பிரதாயம் பழக்கவழக்கம் என்று <br /> எல்லாப் பேச்சுக்கும் முன்னிருக்க வேண்டியிருக்கிறது<br /> மழை வர்ற மாதிரி இருக்கு.. வந்துடக் கூடாதுங்கிற <br /> தடுமாற்றத்துல தவிப்போ தவிப்பு<br /> காடு போயிட்டு வந்த பிறகு எல்லாரும் <br /> சாப்பிடுவதற்குச் செய்ய நடக்கும் ஏற்பாட்டிலும் <br /> முதன்மைப் பங்கெடுக்க அவனுக்குத்தான்<br /> கோடித்துணி... கட்ட மொய்... <br /> பங்காளி சொந்தம்... பாதி சொந்தம்... <br /> கழுத்தறுக்கும் சம்பிரதாயங்களைக் கடப்பது பெரும்பாடு<br /> எல்லாம் முடிய காத்திருக்கிறான் <br /> விடிகாலை நேரம் கிடைக்கும்... <br /> வாய் திறந்து <br /> அம்மா அம்மா என்று அழுதுதீர்க்க..!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- கவிஜி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மாதா பிதா குரு தெய்வம்</strong></span><br /> <br /> <strong>சா</strong>தம் ஊட்டாத அம்மாவுக்கு ஒன்று<br /> சாக்லேட் வாங்கித்தராத அப்பாவுக்கு ஒன்று<br /> ஸ்கேலால் அடித்த மிஸ்ஸுக்கு ஒன்று என்று<br /> மூன்று தோப்புக்கரணங்களைக் கடவுள் போடுகிறார்<br /> நிலாக்குட்டியின் கனவில்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">- பனிமொழி சாதனா</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">நீ<strong>ர் </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>முட்டைகளை உடைக்கும் `மியாவ்’கள்</strong></span><br /> <br /> <strong>வ</strong>ளர்ப்புப்பூனைக்கும் அலங்கார மீன்களுக்குமான<br /> உறவென்பது கண்ணாடித்தொட்டி அறிந்த ரகசியம்<br /> சதுரக்கடலை அவ்வப்போது வட்டமடிக்கும்<br /> மியாவ்களுக்கு விசிறத்தொடங்கும் வண்ணத் துடுப்புகள் <br /> <br /> இமைகளை மூடிக்கொண்டு சயனிக்கும் தருணங்களில்<br /> தன் ஒளிரும் கண்களை நீருக்குள் நீந்தவிடும் <br /> பூச்சையின் காதுகள் மெதுவாக அசைந்துகொண்டிருக்கும்,<br /> சலசலவென நீரின் சப்தமென செவிக்குள் நுழைந்து<br /> தாலாட்டுப் பாடும் மீனின் பாஷைகள்<br /> <br /> தொட்டிக்குள் மிளிரும் ஜோடி கால்பந்துகளை<br /> முட்டி விளையாடும் மீன்கள்<br /> அளவில்லா முத்தங்களைப் பரிசளிக்கின்றன.<br /> தன் வால் விறைத்து உயர்த்தி நன்றி நவிழும் பூனைக்கு<br /> காற்றுக்குமிழ்களைப் பூக்கின்றன மீன்கள்<br /> <br /> பூனைக்கும் வளர்ப்பு மீன்களுக்கும்<br /> ரகசிய உடன்படிக்கையெல்லாம் இல்லை<br /> சில நேரங்களில் தொடர்ந்து வரும்<br /> மியாவ் சப்தங்கள் பசியால் வருவதாக நினைக்கும் மீன்கள்<br /> அளவுக்கதிகமாக வெளியேற்றுகின்றன பிராணவாயுக் குமிழ்களை<br /> <br /> மியாவ் கூச்சல்கள்தான் கண்ணாடித்தொட்டிக்குள் பாய்ந்து<br /> மீன்கள் சுவாசிக்க குமிழ்களை உடைப்பதாகப் பூனையும்<br /> நீர் முட்டைகளை சாப்பிட்டு <br /> பூனை பசியாற்றிக்கொள்வதாக மீன்களும் நம்புவதை<br /> ஒருபோதும் தடுத்ததில்லை கண்ணாடிச் சுவர்கள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);">- வலங்கைமான் நூர்தீன்</span></p>