<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்ஞை</strong></span></p>.<p>சருகோ இறகோ கோபுர நிழலோ<br /> மழைநீர்த் தேங்கலில்<br /> விழுவதெல்லாம் ஓவியமாகிவிடுகிறது<br /> அம்மாவுக்கு<br /> <br /> திமிறும் அருவிக்கு தாயத்து கட்டி<br /> அடக்கப் பார்க்கும் சிட்டுக்குருவியாகிறாள்<br /> <br /> கருகி விழும் இந்த விண்கல் வாழ்வை<br /> பஞ்சுக் கொட்டையாக்கி ஊதத் தருகிறாள்<br /> <br /> மகளின் கறைபடிந்த ஆடை கண்டு<br /> கண் சிமிட்டிச் சிரித்தபின்<br /> கசக்கித் தோய்க்கிறாள் ஆயாசமாய்<br /> <br /> குளவிக் கொடுக்கு வாழ்வை நேசிக்கிறவள்தான்<br /> சொல்கிறாள் <br /> அறுந்துபோன பல்லி வால் <br /> துளிர்க்கிற கதையையும்<br /> <br /> குழந்தைகள் தூங்கியதும்<br /> நட்சத்திரங்களோடு அழுகிறவளின் கண்ணீர்<br /> விடிந்ததும் தும்பைப் பூக்களாகி<br /> செடிகளில் ஒட்டிக்கொள்கின்றன.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயநதி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவின் பின்னால் ஒரு துர்மரணம்<br /> </strong></span><br /> நான் தட்டாமல் விட்ட <br /> ஏதோ ஒரு கதவுக்குப் பின்தான் <br /> அந்த யாரோ அவள் <br /> தொங்கிக்கொண்டிருக்க <br /> வேண்டும்<br /> <br /> பிறழ் எண்ணில் <br /> தற்கொலை செய்யப் போவதாக <br /> வந்த அழைப்பின் அழுகையை <br /> துருப்புச்சீட்டாக வைத்து<br /> இன்னமும் அந்த வீதியில் <br /> தேடிக்கொண்டிருக்கிறேன்<br /> <br /> அலைந்து திரிந்து கனத்து இப்போது<br /> பதற்றத்தோடு நின்றுவிட்ட <br /> எனைச் சுற்றி அடுத்தடுத்து <br /> காற்றில் பல கதவுகள்<br /> முளைத்துக்கொண்டிருந்தன <br /> <br /> ஒரு மரணத்துக்கும் <br /> ஒரு வாழ்வுக்குமான இடைவெளியை நிரப்ப <br /> ஏதோ ஒரு கதவு போதுமானதாயிருக்கிறது...!</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குடை நினைவுகள்<br /> </strong></span><br /> சாலை ஓரத்தில் <br /> குடைகளை வரிசையாக விரித்து<br /> விற்பனை செய்யும் வியாபாரி<br /> ஒரு காலக்கோழி.<br /> <br /> சிறுவயதில்<br /> தலையில் அணிந்த குடையால்<br /> மழைத்தாரைகளை <br /> எம்பி எம்பி முட்டியிருக்கிறேன்.<br /> <br /> முளைக்கயிற்றை அறுத்தோடிய மாட்டை இழுத்து வருவதைப்போல <br /> பெருங்காற்றோடு போராடி <br /> குடையை இழுத்துத் திருப்பியிருக்கிறேன்.<br /> <br /> அத்தை வீட்டுக்குக் கொடுத்து<br /> திரும்பி வராத குடையைக் குறித்து இன்னமும் குறைப்பட்டுக்கொள்வாள் அம்மா.<br /> <br /> அப்பா விரும்பிய விசாலமான குடை<br /> அவருக்கு அமையவேயில்லை.<br /> <br /> சுப்புலட்சுமி டீச்சரின் கைப்பையில்<br /> அடக்கமாக ஒரு குடை உறங்கும்.<br /> <br /> மாடசாமி பாட்டையாவுக்கு <br /> குடை ஒரு கைத்தடி.<br /> <br /> கிழிந்த குடை தைக்கும்<br /> இஸ்மாயில் பாய்<br /> ஏதோ வானத்தையே தைத்தாற்போல பெருமைப்படுவார்.<br /> <br /> இரையைத் தேடி<br /> நிலத்தைக் கிளறும் கோழியைப்போல<br /> கடந்து செல்பவர்களின் <br /> குடை ஞாபகங்களைக் கிளறுகிறார்<br /> குடை வியாபாரி.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- முத்துக்குமார் இருளப்பன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூர்</strong></span><br /> <br /> நீரோடு நீராடி<br /> முற்றும் துறந்து துறவியானது<br /> தன் கூராடை களைந்த<br /> ஆற்றின் கூழாங்கற்கள்..!</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ச.மோகனப்பிரியா</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அஞ்ஞை</strong></span></p>.<p>சருகோ இறகோ கோபுர நிழலோ<br /> மழைநீர்த் தேங்கலில்<br /> விழுவதெல்லாம் ஓவியமாகிவிடுகிறது<br /> அம்மாவுக்கு<br /> <br /> திமிறும் அருவிக்கு தாயத்து கட்டி<br /> அடக்கப் பார்க்கும் சிட்டுக்குருவியாகிறாள்<br /> <br /> கருகி விழும் இந்த விண்கல் வாழ்வை<br /> பஞ்சுக் கொட்டையாக்கி ஊதத் தருகிறாள்<br /> <br /> மகளின் கறைபடிந்த ஆடை கண்டு<br /> கண் சிமிட்டிச் சிரித்தபின்<br /> கசக்கித் தோய்க்கிறாள் ஆயாசமாய்<br /> <br /> குளவிக் கொடுக்கு வாழ்வை நேசிக்கிறவள்தான்<br /> சொல்கிறாள் <br /> அறுந்துபோன பல்லி வால் <br /> துளிர்க்கிற கதையையும்<br /> <br /> குழந்தைகள் தூங்கியதும்<br /> நட்சத்திரங்களோடு அழுகிறவளின் கண்ணீர்<br /> விடிந்ததும் தும்பைப் பூக்களாகி<br /> செடிகளில் ஒட்டிக்கொள்கின்றன.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ஜெயநதி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கதவின் பின்னால் ஒரு துர்மரணம்<br /> </strong></span><br /> நான் தட்டாமல் விட்ட <br /> ஏதோ ஒரு கதவுக்குப் பின்தான் <br /> அந்த யாரோ அவள் <br /> தொங்கிக்கொண்டிருக்க <br /> வேண்டும்<br /> <br /> பிறழ் எண்ணில் <br /> தற்கொலை செய்யப் போவதாக <br /> வந்த அழைப்பின் அழுகையை <br /> துருப்புச்சீட்டாக வைத்து<br /> இன்னமும் அந்த வீதியில் <br /> தேடிக்கொண்டிருக்கிறேன்<br /> <br /> அலைந்து திரிந்து கனத்து இப்போது<br /> பதற்றத்தோடு நின்றுவிட்ட <br /> எனைச் சுற்றி அடுத்தடுத்து <br /> காற்றில் பல கதவுகள்<br /> முளைத்துக்கொண்டிருந்தன <br /> <br /> ஒரு மரணத்துக்கும் <br /> ஒரு வாழ்வுக்குமான இடைவெளியை நிரப்ப <br /> ஏதோ ஒரு கதவு போதுமானதாயிருக்கிறது...!</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- கவிஜி</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>குடை நினைவுகள்<br /> </strong></span><br /> சாலை ஓரத்தில் <br /> குடைகளை வரிசையாக விரித்து<br /> விற்பனை செய்யும் வியாபாரி<br /> ஒரு காலக்கோழி.<br /> <br /> சிறுவயதில்<br /> தலையில் அணிந்த குடையால்<br /> மழைத்தாரைகளை <br /> எம்பி எம்பி முட்டியிருக்கிறேன்.<br /> <br /> முளைக்கயிற்றை அறுத்தோடிய மாட்டை இழுத்து வருவதைப்போல <br /> பெருங்காற்றோடு போராடி <br /> குடையை இழுத்துத் திருப்பியிருக்கிறேன்.<br /> <br /> அத்தை வீட்டுக்குக் கொடுத்து<br /> திரும்பி வராத குடையைக் குறித்து இன்னமும் குறைப்பட்டுக்கொள்வாள் அம்மா.<br /> <br /> அப்பா விரும்பிய விசாலமான குடை<br /> அவருக்கு அமையவேயில்லை.<br /> <br /> சுப்புலட்சுமி டீச்சரின் கைப்பையில்<br /> அடக்கமாக ஒரு குடை உறங்கும்.<br /> <br /> மாடசாமி பாட்டையாவுக்கு <br /> குடை ஒரு கைத்தடி.<br /> <br /> கிழிந்த குடை தைக்கும்<br /> இஸ்மாயில் பாய்<br /> ஏதோ வானத்தையே தைத்தாற்போல பெருமைப்படுவார்.<br /> <br /> இரையைத் தேடி<br /> நிலத்தைக் கிளறும் கோழியைப்போல<br /> கடந்து செல்பவர்களின் <br /> குடை ஞாபகங்களைக் கிளறுகிறார்<br /> குடை வியாபாரி.</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- முத்துக்குமார் இருளப்பன்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கூர்</strong></span><br /> <br /> நீரோடு நீராடி<br /> முற்றும் துறந்து துறவியானது<br /> தன் கூராடை களைந்த<br /> ஆற்றின் கூழாங்கற்கள்..!</p>.<p><span style="color: rgb(0, 0, 255);"><strong>- ச.மோகனப்பிரியா</strong></span></p>