<p><strong>க</strong>ணவன் மனைவி. கல்யாணமான புதிதில் மகிழ்ச்சியாக இருந்தனர். காலப்போக்கில் கருத்து வேறுபாடு வந்தது. அது வளர்ந்தது; முற்றியது. கடைசியில் நீதிமன்றத்தை நாடினார்கள். விவாகரத்து வேண்டினர். உற்றார் உறவினர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள். </p><p>‘‘கடவுளே... இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு’’ என்று வேண்டினார்கள். </p><p> ஒருநாள் பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். கணவனையும் மனைவியையும் அருகில் அழைத்தார்.</p><p>‘இப்போது நமக்குள் ஒரு போட்டி. அதில் நீங்கள் ஜெயித்துவிட்டால், நானே முன்னின்று உங்களுக்கு விவாகரத்து வாங்கித் தருகிறேன். நான் ஜெயித்துவிட்டால், நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும்!’’</p><p>‘‘சரி... என்ன போட்டி? அதைச் சொல்லுங்கள்!’’</p>.<p>‘‘முதலில் ஒரு மெல்லிய நூல் கொண்டு வாருங்கள். போட்டி என்ன என்பதை அப்புறம் சொல்கிறேன்!’’</p><p>கொண்டு வந்தார்கள். சுமார் இரண்டு அடி நீளமுள்ள மெல்லிய நூல் அது. பெரியவர் அதை வாங்கிக்கொண்டார்.</p><p>‘‘இதோ பாருங்கள்... இப்போது இந்த நூலின் ஒருமுனையை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து இழுத்து, இந்த நூலை அறுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!’’</p>.<p>‘‘இது ஒரு பெரிய காரியமா?’’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் அவர்களது பக்கம் இழுக்க ஆரம்பித்தார்கள்.</p><p>இந்தப்பக்கம் நின்ற பெரியவரோ அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பக்கம் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தார். அப்புறம் எப்படி நூல் அறுபடும்?</p><p>அவர்கள் சுற்றிச்சுற்றி வந்தார்கள். இவரும் கூடவே சுற்றிச்சுற்றி வந்தார். இறுதியாக அந்தக் கணவன் மனைவி தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். </p><p>இப்போது பெரியவர் சொன்னார்... ‘‘இவ்வளவுதான் வாழ்க்கை. விட்டுக்கொடுக்கத் தெரிந்தால், உறவு அறுந்துபோகாது!’’</p><p>வாழ்க்கையின் மகத்துவத்தைக் கண நேரத்தில் புரிந்துகொண்ட கணவனும் மனைவியும் கண்கள் பனிக்க பெரியவரின் காலில் விழுந்தார்கள். விட்டுக் கொடுக்கத்தெரிந்தவர்களே, ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்!</p><p><strong>(30.6.07 இதழிலிருந்து...)</strong></p>
<p><strong>க</strong>ணவன் மனைவி. கல்யாணமான புதிதில் மகிழ்ச்சியாக இருந்தனர். காலப்போக்கில் கருத்து வேறுபாடு வந்தது. அது வளர்ந்தது; முற்றியது. கடைசியில் நீதிமன்றத்தை நாடினார்கள். விவாகரத்து வேண்டினர். உற்றார் உறவினர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள். </p><p>‘‘கடவுளே... இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு’’ என்று வேண்டினார்கள். </p><p> ஒருநாள் பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். கணவனையும் மனைவியையும் அருகில் அழைத்தார்.</p><p>‘இப்போது நமக்குள் ஒரு போட்டி. அதில் நீங்கள் ஜெயித்துவிட்டால், நானே முன்னின்று உங்களுக்கு விவாகரத்து வாங்கித் தருகிறேன். நான் ஜெயித்துவிட்டால், நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும்!’’</p><p>‘‘சரி... என்ன போட்டி? அதைச் சொல்லுங்கள்!’’</p>.<p>‘‘முதலில் ஒரு மெல்லிய நூல் கொண்டு வாருங்கள். போட்டி என்ன என்பதை அப்புறம் சொல்கிறேன்!’’</p><p>கொண்டு வந்தார்கள். சுமார் இரண்டு அடி நீளமுள்ள மெல்லிய நூல் அது. பெரியவர் அதை வாங்கிக்கொண்டார்.</p><p>‘‘இதோ பாருங்கள்... இப்போது இந்த நூலின் ஒருமுனையை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து இழுத்து, இந்த நூலை அறுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!’’</p>.<p>‘‘இது ஒரு பெரிய காரியமா?’’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் அவர்களது பக்கம் இழுக்க ஆரம்பித்தார்கள்.</p><p>இந்தப்பக்கம் நின்ற பெரியவரோ அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பக்கம் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தார். அப்புறம் எப்படி நூல் அறுபடும்?</p><p>அவர்கள் சுற்றிச்சுற்றி வந்தார்கள். இவரும் கூடவே சுற்றிச்சுற்றி வந்தார். இறுதியாக அந்தக் கணவன் மனைவி தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். </p><p>இப்போது பெரியவர் சொன்னார்... ‘‘இவ்வளவுதான் வாழ்க்கை. விட்டுக்கொடுக்கத் தெரிந்தால், உறவு அறுந்துபோகாது!’’</p><p>வாழ்க்கையின் மகத்துவத்தைக் கண நேரத்தில் புரிந்துகொண்ட கணவனும் மனைவியும் கண்கள் பனிக்க பெரியவரின் காலில் விழுந்தார்கள். விட்டுக் கொடுக்கத்தெரிந்தவர்களே, ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்!</p><p><strong>(30.6.07 இதழிலிருந்து...)</strong></p>