<p><strong><ins>கரும்பு தானம்!</ins></strong></p><p><strong>ம</strong>கான் துகாராம் பொறுமை நிறைந்தவர். அவர் மனைவியோ கோபக்காரி. ஒருநாள், வயலுக்குச் சென்ற துகாராம், கரும்புக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினார்.</p><p>வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் தன்னிடம் இருந்த கரும்புகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். இறுதியில் ஒரே ஒரு கரும்பு மட்டுமே மிஞ்சியது. அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் துகாராம்.</p><p>நடந்ததை அறிந்த அவர் மனைவி, கடுங்கோபம் கொண்டாள். துகாராமின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கி, அவர் முதுகில் ஓங்கி அடித்தாள். அடித்த அடியில் கரும்பு முறிந்து, இரண்டு துண்டானது.</p><p>அடி வாங்கிய நிலையிலும் கோபப்படாத துகாராம், மனைவியிடம் கூறினார்</p><p>‘`அன்பே... ஒரு கரும்பை இருவர் சாப்பிடுவது எப்படி என குழம்பினேன். இப்போது, நீ அதை இரண்டாக்கிவிட்டாய். வா, ஆளுக்கு ஒன்றாகக் கடித்துச் சாப்பிடலாம்!’’</p><p><strong>- ஆர்.பிருந்தா ரமணி, மதுரை-20</strong></p>.<p><strong>தாமிரபரணியும் செயலிழந்ததா?</strong></p><p>பாரதியார் தனது பாடல்களை, தேவார இசைப் பாடகரான சுந்தர ஓதுவாமூர்த்தியிடம் கொடுத்து இசையோடு பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.</p><p>தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து, பாரதியார் பாடல் இயற்ற... அந்தப் பாடலுக்கு சுந்தர ஓதுவாமூர்த்திகள் இசையமைத்துப் பாடுவது வழக்கம்.</p><p>ஒருநாள், சுந்தர ஓதுவாமூர்த்தி பாடி முடித்ததும் ‘சரே’லென்று எழுந்த பாரதியார், ஆற்றுக்குள் இறங்கி ஓடும் நீரைத் தொட்டுத் திரும்பினாராம். இதைக் கண்ட சுந்தர ஓதுவாமூர்த்திக்கு வியப்பு!</p><p>அவர், ‘`திடீரென ஓடிச்சென்று, ஆற்று நீரைத் தொட்டுவிட்டு வருகிறீர்களே... ஏன்?’’ என்று பாரதியாரிடம் கேட்டார்.</p>.<p>உடனே, ‘`நண்பரே! உமது பாடலைக் கேட்டு மெய்ம்மறந்த நான் செயலிழந்து போனேன். இந்தத் தாமிரபரணி நதியும் என்னைப் போன்றே செயலிழந்து போயிருக்குமோ என்று ஒரு சந்தேகம். எனவேதான் ஓடிச்சென்று ஆற்றின் ஓட்டத்தை சோதித்துத் திரும்பினேன்!’’ என்றாராம் பாரதியார்.</p><p><strong>- ஏ.கே.என், திருப்பட்டினம்</strong></p>
<p><strong><ins>கரும்பு தானம்!</ins></strong></p><p><strong>ம</strong>கான் துகாராம் பொறுமை நிறைந்தவர். அவர் மனைவியோ கோபக்காரி. ஒருநாள், வயலுக்குச் சென்ற துகாராம், கரும்புக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினார்.</p><p>வழியில் கேட்டவர்களுக்கெல்லாம் தன்னிடம் இருந்த கரும்புகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். இறுதியில் ஒரே ஒரு கரும்பு மட்டுமே மிஞ்சியது. அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் துகாராம்.</p><p>நடந்ததை அறிந்த அவர் மனைவி, கடுங்கோபம் கொண்டாள். துகாராமின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கி, அவர் முதுகில் ஓங்கி அடித்தாள். அடித்த அடியில் கரும்பு முறிந்து, இரண்டு துண்டானது.</p><p>அடி வாங்கிய நிலையிலும் கோபப்படாத துகாராம், மனைவியிடம் கூறினார்</p><p>‘`அன்பே... ஒரு கரும்பை இருவர் சாப்பிடுவது எப்படி என குழம்பினேன். இப்போது, நீ அதை இரண்டாக்கிவிட்டாய். வா, ஆளுக்கு ஒன்றாகக் கடித்துச் சாப்பிடலாம்!’’</p><p><strong>- ஆர்.பிருந்தா ரமணி, மதுரை-20</strong></p>.<p><strong>தாமிரபரணியும் செயலிழந்ததா?</strong></p><p>பாரதியார் தனது பாடல்களை, தேவார இசைப் பாடகரான சுந்தர ஓதுவாமூர்த்தியிடம் கொடுத்து இசையோடு பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.</p><p>தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து, பாரதியார் பாடல் இயற்ற... அந்தப் பாடலுக்கு சுந்தர ஓதுவாமூர்த்திகள் இசையமைத்துப் பாடுவது வழக்கம்.</p><p>ஒருநாள், சுந்தர ஓதுவாமூர்த்தி பாடி முடித்ததும் ‘சரே’லென்று எழுந்த பாரதியார், ஆற்றுக்குள் இறங்கி ஓடும் நீரைத் தொட்டுத் திரும்பினாராம். இதைக் கண்ட சுந்தர ஓதுவாமூர்த்திக்கு வியப்பு!</p><p>அவர், ‘`திடீரென ஓடிச்சென்று, ஆற்று நீரைத் தொட்டுவிட்டு வருகிறீர்களே... ஏன்?’’ என்று பாரதியாரிடம் கேட்டார்.</p>.<p>உடனே, ‘`நண்பரே! உமது பாடலைக் கேட்டு மெய்ம்மறந்த நான் செயலிழந்து போனேன். இந்தத் தாமிரபரணி நதியும் என்னைப் போன்றே செயலிழந்து போயிருக்குமோ என்று ஒரு சந்தேகம். எனவேதான் ஓடிச்சென்று ஆற்றின் ஓட்டத்தை சோதித்துத் திரும்பினேன்!’’ என்றாராம் பாரதியார்.</p><p><strong>- ஏ.கே.என், திருப்பட்டினம்</strong></p>