<p><strong>வெ</strong>றிச்சென இருக்கும்</p><p>நிர்மலமான நீலவானத்தில்</p><p>தனியாய்ப் பறந்து போகும் பறவையொன்று</p><p>பேரழகாக்கிவிடும் வானத்தை</p><p>ஆங்காங்கே தண்ணீர் நிற்கும்</p> <p>யாரும் நடந்து போய்க்கொண்டிருக்காத</p><p>சாலையில்</p><p>மழைபெய்யவில்லையென்றாலும்</p><p>குடைபிடித்து நடந்து போகும் பெண்ணொருத்தி</p><p>பேரழகாக்கிவிடுவாள் அச்சாலையை</p>.<p>தண்ணீரூற்றி ஊற்றி</p><p>எப்போதடா பூக்குமென</p><p>பார்க்கும்போதெல்லாம் சலித்துக்கொள்ளும்</p><p>செடியொன்றில்</p><p>ஓர் அதிகாலையில்</p><p>அத்தனை பச்சை இலைகளுக்கு நடுவே</p><p>அடர் பிங்க் நிறத்தில் தோன்றும்</p><p>ரோஜா ஒன்று</p><p>பேரழகாக்கிவிடும் அச்செடியை</p> <p>மணலள்ளி மணலள்ளி</p><p>உடலெங்கும் காயப்பட்டு</p><p>அலங்கோலப்பட்டுக்கிடக்கும் ஆற்றில்</p><p>திடீரென மழை பெய்து</p><p>கரைகள் தழுவ வரும் வெள்ளம்</p><p>பேரழகாக்கிவிடும் ஆற்றை</p> <p>பார்த்தாலே கண்களை மூடி</p><p>தலைதிருப்பிக்கொள்ளச் செய்தபடி</p><p>மரத்திலூரும் கம்பளிப்புழு</p><p>வண்ணங்கள் தடவிய சிறகுகளோடு</p><p>அதே செடியில் வந்தமர்கையில்</p><p>பேரழகாக்கிவிடுகிறது காட்சியை</p> <p>அழகுக்கு</p><p>கொஞ்சம் காத்திருக்கவேண்டும்</p><p>பேரழகுக்கு</p><p>இன்னும் கொஞ்சம் காத்திருக்கவேண்டும்</p><p>அவ்வளவே.</p><p><em><strong>- சௌவி</strong></em></p>.<p><strong>கூ</strong>டு கட்ட முயலும் குருவிக்கு</p><p>நினைத்தவுடனே நான்கைந்து காய்ந்த குச்சிகள்</p><p>கண்ணில்பட்டுவிட்டன.</p><p>சிறிதுதூரம் பறந்தவுடன்</p><p>சில வைக்கோல் துண்டுகள் கிடைத்தன.</p><p>காய்ந்த புற்களுக்காகத்தான் ஒருகாத தூரம்</p><p>அது பயணிக்க வேண்டியிருந்தது.</p><p>கூடமைக்கத் தேவையான பொருள்களுடன்</p><p>நெடுங்காலமாய் ஒரு நிரந்தர அமைதி பொருந்திய </p><p>இடமாய்த் தேடியலையும்</p><p>அந்தக் குருவியைக் காணநேர்ந்தால்</p><p>உங்களின் சத்தத்தையோ அல்லது</p><p>இரைச்சலையோ</p><p>வாகன அரவங்களையோ</p><p>கொஞ்சம் நிறுத்தி மௌனமாக்கிக்கொள்வீராக... </p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p>.<p><strong>கா</strong>ணாமல்போன ஒருவனை</p><p>கண்டுபிடிக்கும் பொறுப்பு</p><p>ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எனக்கு</p>. <p>அவன் குறித்த அங்க அடையாளங்களைப்</p><p>பதிவு செய்துகொள்ள</p><p>குறிப்பேடுகள் கொடுக்கப்பட்டன</p> <p>அடையாளமெனச் சொல்லப்பட்ட யாவுமே</p><p>இதற்குமுன் யார்சொல்லியோ</p><p>பார்க்கப்பட்டதாகவோ அல்லது</p><p>எழுதப்பட்டதாகவோ தோன்றியதெனக்கு</p> <p>குற்றங்களைக் குறித்துக்கொண்டிருக்கிறேன்</p><p>குற்றமெனச் சொல்லப்படுபவையாவும் </p><p>குற்றமேயில்லையென</p><p>மனம் விலக்கிக்கொண்டிருக்கிறது</p> <p>தேடலின் பொருட்டு </p><p>சற்று நாள்களாய்</p><p>தொலைந்துபோயிருக்கிறேன் நானும்...</p> <p>கடவுச்சீட்டளவு அச்சடிக்கப்பட்டு</p><p>நாளிதழ்களில் பிரசுரமாயிருக்கும் </p><p>காணாமல்போனவர் பற்றிய விவரத்தில்</p><p>யாரோ பொருத்திப்பார்க்கக்கூடும் </p><p>என்னைப்போலவே எனதடையாளங்களையும்</p><p>பின்குறிப்பாய்...</p><p><em><strong>- பன்னீர்.மு</strong></em></p>
<p><strong>வெ</strong>றிச்சென இருக்கும்</p><p>நிர்மலமான நீலவானத்தில்</p><p>தனியாய்ப் பறந்து போகும் பறவையொன்று</p><p>பேரழகாக்கிவிடும் வானத்தை</p><p>ஆங்காங்கே தண்ணீர் நிற்கும்</p> <p>யாரும் நடந்து போய்க்கொண்டிருக்காத</p><p>சாலையில்</p><p>மழைபெய்யவில்லையென்றாலும்</p><p>குடைபிடித்து நடந்து போகும் பெண்ணொருத்தி</p><p>பேரழகாக்கிவிடுவாள் அச்சாலையை</p>.<p>தண்ணீரூற்றி ஊற்றி</p><p>எப்போதடா பூக்குமென</p><p>பார்க்கும்போதெல்லாம் சலித்துக்கொள்ளும்</p><p>செடியொன்றில்</p><p>ஓர் அதிகாலையில்</p><p>அத்தனை பச்சை இலைகளுக்கு நடுவே</p><p>அடர் பிங்க் நிறத்தில் தோன்றும்</p><p>ரோஜா ஒன்று</p><p>பேரழகாக்கிவிடும் அச்செடியை</p> <p>மணலள்ளி மணலள்ளி</p><p>உடலெங்கும் காயப்பட்டு</p><p>அலங்கோலப்பட்டுக்கிடக்கும் ஆற்றில்</p><p>திடீரென மழை பெய்து</p><p>கரைகள் தழுவ வரும் வெள்ளம்</p><p>பேரழகாக்கிவிடும் ஆற்றை</p> <p>பார்த்தாலே கண்களை மூடி</p><p>தலைதிருப்பிக்கொள்ளச் செய்தபடி</p><p>மரத்திலூரும் கம்பளிப்புழு</p><p>வண்ணங்கள் தடவிய சிறகுகளோடு</p><p>அதே செடியில் வந்தமர்கையில்</p><p>பேரழகாக்கிவிடுகிறது காட்சியை</p> <p>அழகுக்கு</p><p>கொஞ்சம் காத்திருக்கவேண்டும்</p><p>பேரழகுக்கு</p><p>இன்னும் கொஞ்சம் காத்திருக்கவேண்டும்</p><p>அவ்வளவே.</p><p><em><strong>- சௌவி</strong></em></p>.<p><strong>கூ</strong>டு கட்ட முயலும் குருவிக்கு</p><p>நினைத்தவுடனே நான்கைந்து காய்ந்த குச்சிகள்</p><p>கண்ணில்பட்டுவிட்டன.</p><p>சிறிதுதூரம் பறந்தவுடன்</p><p>சில வைக்கோல் துண்டுகள் கிடைத்தன.</p><p>காய்ந்த புற்களுக்காகத்தான் ஒருகாத தூரம்</p><p>அது பயணிக்க வேண்டியிருந்தது.</p><p>கூடமைக்கத் தேவையான பொருள்களுடன்</p><p>நெடுங்காலமாய் ஒரு நிரந்தர அமைதி பொருந்திய </p><p>இடமாய்த் தேடியலையும்</p><p>அந்தக் குருவியைக் காணநேர்ந்தால்</p><p>உங்களின் சத்தத்தையோ அல்லது</p><p>இரைச்சலையோ</p><p>வாகன அரவங்களையோ</p><p>கொஞ்சம் நிறுத்தி மௌனமாக்கிக்கொள்வீராக... </p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p>.<p><strong>கா</strong>ணாமல்போன ஒருவனை</p><p>கண்டுபிடிக்கும் பொறுப்பு</p><p>ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எனக்கு</p>. <p>அவன் குறித்த அங்க அடையாளங்களைப்</p><p>பதிவு செய்துகொள்ள</p><p>குறிப்பேடுகள் கொடுக்கப்பட்டன</p> <p>அடையாளமெனச் சொல்லப்பட்ட யாவுமே</p><p>இதற்குமுன் யார்சொல்லியோ</p><p>பார்க்கப்பட்டதாகவோ அல்லது</p><p>எழுதப்பட்டதாகவோ தோன்றியதெனக்கு</p> <p>குற்றங்களைக் குறித்துக்கொண்டிருக்கிறேன்</p><p>குற்றமெனச் சொல்லப்படுபவையாவும் </p><p>குற்றமேயில்லையென</p><p>மனம் விலக்கிக்கொண்டிருக்கிறது</p> <p>தேடலின் பொருட்டு </p><p>சற்று நாள்களாய்</p><p>தொலைந்துபோயிருக்கிறேன் நானும்...</p> <p>கடவுச்சீட்டளவு அச்சடிக்கப்பட்டு</p><p>நாளிதழ்களில் பிரசுரமாயிருக்கும் </p><p>காணாமல்போனவர் பற்றிய விவரத்தில்</p><p>யாரோ பொருத்திப்பார்க்கக்கூடும் </p><p>என்னைப்போலவே எனதடையாளங்களையும்</p><p>பின்குறிப்பாய்...</p><p><em><strong>- பன்னீர்.மு</strong></em></p>