<p>நாங்களும் அவரும்</p>.<p>அவருக்கு இளையராஜாதான் பிடிக்கும்,</p><p>என்னைப்போலவே!</p><p>ராஜாவின் பாட்டில்லையெனில்</p><p>ரேடியோவைச் சட்டென ஊமையாக்குவார்,</p><p>என்னைப்போலவே!</p><p>இசைத்தட்டு, ஒலிநாடா, குறுந்தகடு,</p><p>நினைவக அட்டை</p><p>என்று தொழில்நுட்ப மாறுதல்கள் நடந்தாலும்</p><p>அவர் மாறாமல் சேமிப்பது இளையராஜா பாடல்களைத்தான்,</p><p>என்னைப்போலவே!</p><p>இளையராஜா பற்றிப் பேச எவ்வளவோ விடயங்கள் அவரிடம்,</p><p>என்னிடமும்!</p><p>மருத்துவமனையில் சாவின் நெருக்கத்தில் இருந்தபோதும்,</p><p>இவ்வளவு இளையராஜா பாட்ட விட்டுட்டு எப்படிடா போவேன்</p><p>என்று அவர் சொன்னது நான் சொல்வது போலத்தான் இருந்தது.</p><p>இதோ, திரும்பியாச்சு! </p><p>அதோ மயானம் தெரிகிறது</p><p>எறக்குங்கப்பா! என்ற குரல் கேட்டு அவரை இறக்கி வைத்தார்கள்.</p><p>பணிச்சவன் தன் பாறைக் குரலில் பாடிய </p><p>அவருக்கான கடைசிப் பாட்டுக்கு,</p><p>அவர் கண்டிப்பாய்</p><p>செவி சாய்த்திருக்கமாட்டார்! </p><p>எனக்குத் தெரியும்,</p><p>அந்த அரிச்சந்திரன் பாட்டில் இளையராஜா இல்லை.</p><p><em>- சா.நாதன் ரவிகுமார்.</em></p>.<p>நீட்சி</p>.<p>ஒருநாள் வந்த மழையை </p><p>இரண்டு நாள்களாகச் </p><p>சொல்லிக்கொண்டிருக்கின்றன</p><p>ஓலைக்குடிசைகள்.</p><p><em>- திருவெங்கட்</em></p>.<p>சொல்வதற்கு ஒரு காது</p>.<p><strong>எ</strong>ண்ண அலைகளுக்குள்</p><p>மிதக்கின்றன சொற்கள்</p><p>முக்காலத்தின் பிரதிநிதிகளாய்</p><p>அவை தேடுவது</p><p>ஒரு காது</p><p>வளைந்து நெளிந்து</p><p>ஓடும் நதி</p><p>பெரும் பள்ளத்தின்</p><p>ஆழம் அறியாமலே</p><p>சட்டென வீழ்ந்து</p><p>இரைவது போல்</p><p>காதொன்று கிடைத்ததும்</p><p>கொட்டத் தொடஙகுகின்றன</p><p>சொற்கள்</p><p>நல்ல காது</p><p>நிதானித்துக் கேட்கும்</p><p>பிடிக்காமல் போய்விடும்</p><p>காதுகளுக்கு</p><p>கேட்பதற்கான</p><p>பொறுமையோ சகிப்புத்தன்மையோ</p><p>இல்லையென ஆகிவிடுகிறது</p><p>பிரிவுத்துயர்</p><p>வருத்துவதற்கு</p><p>ஆகப்பெரிய காரணம்</p><p>காதுகள்.</p><p><em>- எஸ். விஜயலக்ஷ்மி</em></p>
<p>நாங்களும் அவரும்</p>.<p>அவருக்கு இளையராஜாதான் பிடிக்கும்,</p><p>என்னைப்போலவே!</p><p>ராஜாவின் பாட்டில்லையெனில்</p><p>ரேடியோவைச் சட்டென ஊமையாக்குவார்,</p><p>என்னைப்போலவே!</p><p>இசைத்தட்டு, ஒலிநாடா, குறுந்தகடு,</p><p>நினைவக அட்டை</p><p>என்று தொழில்நுட்ப மாறுதல்கள் நடந்தாலும்</p><p>அவர் மாறாமல் சேமிப்பது இளையராஜா பாடல்களைத்தான்,</p><p>என்னைப்போலவே!</p><p>இளையராஜா பற்றிப் பேச எவ்வளவோ விடயங்கள் அவரிடம்,</p><p>என்னிடமும்!</p><p>மருத்துவமனையில் சாவின் நெருக்கத்தில் இருந்தபோதும்,</p><p>இவ்வளவு இளையராஜா பாட்ட விட்டுட்டு எப்படிடா போவேன்</p><p>என்று அவர் சொன்னது நான் சொல்வது போலத்தான் இருந்தது.</p><p>இதோ, திரும்பியாச்சு! </p><p>அதோ மயானம் தெரிகிறது</p><p>எறக்குங்கப்பா! என்ற குரல் கேட்டு அவரை இறக்கி வைத்தார்கள்.</p><p>பணிச்சவன் தன் பாறைக் குரலில் பாடிய </p><p>அவருக்கான கடைசிப் பாட்டுக்கு,</p><p>அவர் கண்டிப்பாய்</p><p>செவி சாய்த்திருக்கமாட்டார்! </p><p>எனக்குத் தெரியும்,</p><p>அந்த அரிச்சந்திரன் பாட்டில் இளையராஜா இல்லை.</p><p><em>- சா.நாதன் ரவிகுமார்.</em></p>.<p>நீட்சி</p>.<p>ஒருநாள் வந்த மழையை </p><p>இரண்டு நாள்களாகச் </p><p>சொல்லிக்கொண்டிருக்கின்றன</p><p>ஓலைக்குடிசைகள்.</p><p><em>- திருவெங்கட்</em></p>.<p>சொல்வதற்கு ஒரு காது</p>.<p><strong>எ</strong>ண்ண அலைகளுக்குள்</p><p>மிதக்கின்றன சொற்கள்</p><p>முக்காலத்தின் பிரதிநிதிகளாய்</p><p>அவை தேடுவது</p><p>ஒரு காது</p><p>வளைந்து நெளிந்து</p><p>ஓடும் நதி</p><p>பெரும் பள்ளத்தின்</p><p>ஆழம் அறியாமலே</p><p>சட்டென வீழ்ந்து</p><p>இரைவது போல்</p><p>காதொன்று கிடைத்ததும்</p><p>கொட்டத் தொடஙகுகின்றன</p><p>சொற்கள்</p><p>நல்ல காது</p><p>நிதானித்துக் கேட்கும்</p><p>பிடிக்காமல் போய்விடும்</p><p>காதுகளுக்கு</p><p>கேட்பதற்கான</p><p>பொறுமையோ சகிப்புத்தன்மையோ</p><p>இல்லையென ஆகிவிடுகிறது</p><p>பிரிவுத்துயர்</p><p>வருத்துவதற்கு</p><p>ஆகப்பெரிய காரணம்</p><p>காதுகள்.</p><p><em>- எஸ். விஜயலக்ஷ்மி</em></p>