<p>அடுக்ககத்தின் கார் சகடங்களுக்கு </p><p>தன் முதற்குட்டியைப் பறிகொடுத்த </p><p>நாயொன்று </p><p>நேற்று பெய்த </p><p>பெருமழையில் </p><p>அதே காருக்கு அடியில் தஞ்சமடைகிறது </p><p>இரண்டாம் குட்டியுடன், </p><p>எஞ்சியிருக்கும் மானுடத்திடம் </p><p>சற்றே காருண்யத்தை எதிர்பார்த்து...</p><p>நீட்டப்பட்ட துடைப்பத்துடன்,</p><p>அண்டிய சிறுகுடும்பத்தை </p><p>விரட்ட எத்தனிக்கிறது </p><p>மாடிவீட்டுக் கையொன்று...</p><p>மொழி புரியா நோக்கு கொண்டு </p><p>நீர்த்திவலை விழிகளுடன் </p><p>அமர்ந்திருந்தார் முதிய காவலாளி</p><p>வடகிழக்கிலிருந்து </p><p>புலம்பெயர்க்கப்பட்டதை </p><p>எண்ணிக்கொள்கிறாரோ என்னவோ...</p><p><strong>- அனலோன்</strong></p>.<p>திரவ முத்தங்கள்</p>. <p>பள்ளிக்குச் செல்லுமுன் </p><p>வீடெல்லாம் </p><p>சிந்திவிட்டுப்போயிருக்கும்</p><p>சோற்றுப் பருக்கைகளை</p><p>அள்ளிக்கொண்டிருக்கிறாள்</p><p>அம்முக்குட்டியின் அம்மா...</p><p>சோற்றிலிருந்து பிரிந்து </p><p>மீண்டும் தரையை முத்தமிடுகின்றன</p><p>அம்முக்குட்டியின் திரவ முத்தங்கள்.</p><p><strong>- திருவெங்கட்</strong></p>.<p>சூடு</p>.<p><strong>இ</strong>தோ ஒரு தேநீர்ப் பையின் உதவி</p><p>கொண்டு</p><p>பீங்கான் கோப்பையின்</p><p>சுடுநீரையோ அன்றி</p><p>தேநீர்ப் பையையோ சுவையூட்ட</p><p>முயற்சி செய்கிறீர்கள்</p><p>பையை நீங்கள் பருக</p><p>முடியாதாகையால்</p><p>நீங்கள் சுடுநீரையே</p><p>சுவையூட்ட முயல்வதாக ஒரு</p><p>முடிவுக்கு வரலாம்.</p><p><strong>- தேவசீமா</strong></p>.<p>சொல்</p>.<p><strong>ஓ</strong>ர் அழகான பூ</p><p>ஓர் ஆள்துளை கத்தி</p><p>நீ கையிலெடுப்பதைப்</p><p>பொறுத்துதான்</p><p>மௌனம்!</p><p><strong>- விஜி</strong></p>
<p>அடுக்ககத்தின் கார் சகடங்களுக்கு </p><p>தன் முதற்குட்டியைப் பறிகொடுத்த </p><p>நாயொன்று </p><p>நேற்று பெய்த </p><p>பெருமழையில் </p><p>அதே காருக்கு அடியில் தஞ்சமடைகிறது </p><p>இரண்டாம் குட்டியுடன், </p><p>எஞ்சியிருக்கும் மானுடத்திடம் </p><p>சற்றே காருண்யத்தை எதிர்பார்த்து...</p><p>நீட்டப்பட்ட துடைப்பத்துடன்,</p><p>அண்டிய சிறுகுடும்பத்தை </p><p>விரட்ட எத்தனிக்கிறது </p><p>மாடிவீட்டுக் கையொன்று...</p><p>மொழி புரியா நோக்கு கொண்டு </p><p>நீர்த்திவலை விழிகளுடன் </p><p>அமர்ந்திருந்தார் முதிய காவலாளி</p><p>வடகிழக்கிலிருந்து </p><p>புலம்பெயர்க்கப்பட்டதை </p><p>எண்ணிக்கொள்கிறாரோ என்னவோ...</p><p><strong>- அனலோன்</strong></p>.<p>திரவ முத்தங்கள்</p>. <p>பள்ளிக்குச் செல்லுமுன் </p><p>வீடெல்லாம் </p><p>சிந்திவிட்டுப்போயிருக்கும்</p><p>சோற்றுப் பருக்கைகளை</p><p>அள்ளிக்கொண்டிருக்கிறாள்</p><p>அம்முக்குட்டியின் அம்மா...</p><p>சோற்றிலிருந்து பிரிந்து </p><p>மீண்டும் தரையை முத்தமிடுகின்றன</p><p>அம்முக்குட்டியின் திரவ முத்தங்கள்.</p><p><strong>- திருவெங்கட்</strong></p>.<p>சூடு</p>.<p><strong>இ</strong>தோ ஒரு தேநீர்ப் பையின் உதவி</p><p>கொண்டு</p><p>பீங்கான் கோப்பையின்</p><p>சுடுநீரையோ அன்றி</p><p>தேநீர்ப் பையையோ சுவையூட்ட</p><p>முயற்சி செய்கிறீர்கள்</p><p>பையை நீங்கள் பருக</p><p>முடியாதாகையால்</p><p>நீங்கள் சுடுநீரையே</p><p>சுவையூட்ட முயல்வதாக ஒரு</p><p>முடிவுக்கு வரலாம்.</p><p><strong>- தேவசீமா</strong></p>.<p>சொல்</p>.<p><strong>ஓ</strong>ர் அழகான பூ</p><p>ஓர் ஆள்துளை கத்தி</p><p>நீ கையிலெடுப்பதைப்</p><p>பொறுத்துதான்</p><p>மௌனம்!</p><p><strong>- விஜி</strong></p>