Published:Updated:
இறந்ததாக அரசு டாக்டர் சான்றிதழ் : புதைக்கும் நேரத்தில் குழந்தைக்கு உயிர் வந்தது!

இறந்ததாக அரசு டாக்டர் சான்றிதழ் : புதைக்கும் நேரத்தில் குழந்தைக்கு உயிர் வந்தது!

திண்டுக்கல், கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் - மரிய வினிதா தம்பதிக்கு இன்று காலை 8 மணிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைப் பிறந்தது. பிறந்த பெண் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தபோது குழந்தை அழுததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, இறந்ததாகத் தெரிவித்த அரசு மருத்துவமனையை உறுவினர்கள் முற்றுகையிட்டனர்.