

லடாக்: லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீன படையினர், ’இது சீனாவிற்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன படையினர், முதலில் 10 கி.மீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீன ராணுவத்தின் தொடர் எல்லை மீறல் குறித்து, நாளை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள்
##~~## |