<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>''மிரட்டல்களில் உங்களுக்குப் பிடித்த மிரட்டல் எது?'' </strong></span></p>.<p> ''பெரியாரின் பிளாக்மெயில். காதல், திருமணம், குழந்தைப்பேறு ஆகியவைபற்றி பல அதிர்ச்சி அளிக்கும் கருத்துகளைச் சொன்ன பெரியார்தான், தமிழகத்தில் முதன்முறையாக விவாகரத்துபற்றியும் குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் வலியுறுத்திப் பேசியவர்.</p>.<p><span style="color: #800080"><em> 'காதலுக்கு வழிவைத்து<br /> கருப்பாதை சாத்த<br /> கதவொன்று கண்டறிவோம்<br /> இதில் என்ன குற்றம்?’ </em></span></p>.<p>- என்று குடும்பக் கட்டுப்பாடுபற்றி கவிதை தீட்டினார், பெரியார் வழியில் வந்த பாவேந்தர் பாரதிதாசன். 1930-களிலேயே விவாகரத்தை வலியுறுத்தி, 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்யாண விடுதலை வேண்டும்’ என்று செங்கல்பட்டு சுய மரியாதை மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது, தமிழகத்தில் இருந்த பழமைவாதிகள், விவாகரத்தை மறுத்துப் பேசினார்கள். அப்போது பெரியார் எழுதினார்,</p>.<p>'நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பதுபோல கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரசாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பல தார மணப் பிரசாரமும்தான் செய்ய வேண்டியது வரும்’ என்றார். என்ன ஒரு தில்லான மிரட்டல்!''</p>.<p><strong>- அக்ஷயா, வேலூர். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவரும்கூட ஊழல் செய்திருப்பார்’ என்கிறாரே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி?'' </strong></span></p>.<p>''இது காந்தியைத் துளைத்த நான்காவது குண்டு!''</p>.<p><strong> - ஆர்.ஆர்.உமா, திசையன்விளை. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதைத்தானே ஒசாமா பின்லேடனின் மரணம் காட்டுகிறது?'' </strong></span></p>.<p>''சதாம் உசேன், ஒசாமா பின்லேடன் இருவரையுமே உருவாக்கியதும் அமெரிக்காதான், அழித்ததும் அமெரிக்காதான். கத்தியை எடுத்தவன் மட்டும்தான் கத்தியால் சாவானா? கத்தியை உருவாக்குபவர்களுக்கு, இந்தப் பழமொழிகள் பொருந்தாதோ?''</p>.<p><strong>- கா.வினோதினி, சேலம். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'ராணா படமாவது, கானா படமாவது’ என்று சொன்னதற்காக ரஜினி ரசிகர்கள் வடிவேலுவுக்கு எதிராகக் கொதிக்கிறார்களே?'' </strong></span></p>.<p>''பொதுவாகவே, வெளியில் வீராவேசமாக வடிவேலு பேசி வந்தாலும், உள்ளுக்குள் ஒரு உதைப்பு இருக்கும்... 'உளவுத் துறை அளவுக்கு நான் வொர்த் இல்லைங்க!’.''</p>.<p><strong>- பா.நகைமுகன், மதுரை. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''தேடிச் செல்லுதல், தேடி வரவழைத்தல்... இரண்டில் எது சிறந்தது?'' </strong></span></p>.<p>''கருணாநிதியிடம் கேட்க வேண்டிய கேள்வி. 'அஜீரணக் கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிகாந்த்தை, முதல்வர் மருத்துவமனைக்கே சென்று பார்த்தார். தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பாலசந்தரோ, முதல்வரை வீட்டுக்குச் சென்று பார்த்தார்!''</p>.<p><strong>- பா.மதி, சென்னை-91.</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>''மிரட்டல்களில் உங்களுக்குப் பிடித்த மிரட்டல் எது?'' </strong></span></p>.<p> ''பெரியாரின் பிளாக்மெயில். காதல், திருமணம், குழந்தைப்பேறு ஆகியவைபற்றி பல அதிர்ச்சி அளிக்கும் கருத்துகளைச் சொன்ன பெரியார்தான், தமிழகத்தில் முதன்முறையாக விவாகரத்துபற்றியும் குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் வலியுறுத்திப் பேசியவர்.</p>.<p><span style="color: #800080"><em> 'காதலுக்கு வழிவைத்து<br /> கருப்பாதை சாத்த<br /> கதவொன்று கண்டறிவோம்<br /> இதில் என்ன குற்றம்?’ </em></span></p>.<p>- என்று குடும்பக் கட்டுப்பாடுபற்றி கவிதை தீட்டினார், பெரியார் வழியில் வந்த பாவேந்தர் பாரதிதாசன். 1930-களிலேயே விவாகரத்தை வலியுறுத்தி, 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்யாண விடுதலை வேண்டும்’ என்று செங்கல்பட்டு சுய மரியாதை மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது, தமிழகத்தில் இருந்த பழமைவாதிகள், விவாகரத்தை மறுத்துப் பேசினார்கள். அப்போது பெரியார் எழுதினார்,</p>.<p>'நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பதுபோல கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரசாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பல தார மணப் பிரசாரமும்தான் செய்ய வேண்டியது வரும்’ என்றார். என்ன ஒரு தில்லான மிரட்டல்!''</p>.<p><strong>- அக்ஷயா, வேலூர். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவரும்கூட ஊழல் செய்திருப்பார்’ என்கிறாரே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி?'' </strong></span></p>.<p>''இது காந்தியைத் துளைத்த நான்காவது குண்டு!''</p>.<p><strong> - ஆர்.ஆர்.உமா, திசையன்விளை. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதைத்தானே ஒசாமா பின்லேடனின் மரணம் காட்டுகிறது?'' </strong></span></p>.<p>''சதாம் உசேன், ஒசாமா பின்லேடன் இருவரையுமே உருவாக்கியதும் அமெரிக்காதான், அழித்ததும் அமெரிக்காதான். கத்தியை எடுத்தவன் மட்டும்தான் கத்தியால் சாவானா? கத்தியை உருவாக்குபவர்களுக்கு, இந்தப் பழமொழிகள் பொருந்தாதோ?''</p>.<p><strong>- கா.வினோதினி, சேலம். </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>'' 'ராணா படமாவது, கானா படமாவது’ என்று சொன்னதற்காக ரஜினி ரசிகர்கள் வடிவேலுவுக்கு எதிராகக் கொதிக்கிறார்களே?'' </strong></span></p>.<p>''பொதுவாகவே, வெளியில் வீராவேசமாக வடிவேலு பேசி வந்தாலும், உள்ளுக்குள் ஒரு உதைப்பு இருக்கும்... 'உளவுத் துறை அளவுக்கு நான் வொர்த் இல்லைங்க!’.''</p>.<p><strong>- பா.நகைமுகன், மதுரை. </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>''தேடிச் செல்லுதல், தேடி வரவழைத்தல்... இரண்டில் எது சிறந்தது?'' </strong></span></p>.<p>''கருணாநிதியிடம் கேட்க வேண்டிய கேள்வி. 'அஜீரணக் கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிகாந்த்தை, முதல்வர் மருத்துவமனைக்கே சென்று பார்த்தார். தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற பாலசந்தரோ, முதல்வரை வீட்டுக்குச் சென்று பார்த்தார்!''</p>.<p><strong>- பா.மதி, சென்னை-91.</strong></p>