<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பி</strong></span>ரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க-வின் நான்கு ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டு களுக்கு நீங்கள் தரும் மதிப்பெண் என்ன என்று நாணயம் டிவிட்டரில் (<a href="https://twitter.com/NaanayamVikatan#innerlink" target="_blank">https://twitter.com/NaanayamVikatan</a>) ஒரு சர்வே நடத்தினோம். </p>.<p>இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 9% பேர், 61-க்கு மேல் மதிப்பெண் அளித்திருக்கிறார்கள். இதேபோல, 40-60 மதிப்பெண்களை 11% பேர் மட்டுமே அளித்திருக்கிறார்கள். மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்று நினைப்பவர்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதையே இது காட்டுகிறது. </p>.<p>ஆனால், 35 -க்கும்கீழ் மதிப்பெண் தந்தவர்களே மிக அதிகமாக அதாவது, 80% என்கிற அளவில் இருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்தியது என மத்திய அரசு எடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் தங்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகச் சாதாரண மக்கள் நினைப்பதால்தான், அதிகமானவர்கள் குறைந்த மதிப்பெண்களையே தந்திருக்கிறார்கள். </p>.<p>தற்போது நிலவும் மனநிலையே மக்களிடம் அடுத்த ஓராண்டு காலத்துக்குப்பின்னும் நிலவினால், தமிழகத்தில் பா.ஜ.க பெறும் வாக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு! <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஏ.ஆர்.கே. </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பி</strong></span>ரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க-வின் நான்கு ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டு களுக்கு நீங்கள் தரும் மதிப்பெண் என்ன என்று நாணயம் டிவிட்டரில் (<a href="https://twitter.com/NaanayamVikatan#innerlink" target="_blank">https://twitter.com/NaanayamVikatan</a>) ஒரு சர்வே நடத்தினோம். </p>.<p>இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 9% பேர், 61-க்கு மேல் மதிப்பெண் அளித்திருக்கிறார்கள். இதேபோல, 40-60 மதிப்பெண்களை 11% பேர் மட்டுமே அளித்திருக்கிறார்கள். மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்று நினைப்பவர்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதையே இது காட்டுகிறது. </p>.<p>ஆனால், 35 -க்கும்கீழ் மதிப்பெண் தந்தவர்களே மிக அதிகமாக அதாவது, 80% என்கிற அளவில் இருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்தியது என மத்திய அரசு எடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் தங்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகச் சாதாரண மக்கள் நினைப்பதால்தான், அதிகமானவர்கள் குறைந்த மதிப்பெண்களையே தந்திருக்கிறார்கள். </p>.<p>தற்போது நிலவும் மனநிலையே மக்களிடம் அடுத்த ஓராண்டு காலத்துக்குப்பின்னும் நிலவினால், தமிழகத்தில் பா.ஜ.க பெறும் வாக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு! <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஏ.ஆர்.கே. </strong></span></p>