<p><strong>'கா</strong>லம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் இருட்டுக்குள் கிடக்க... அ.தி.மு.க-வின் அதிகார மையங்களாக விளங்கிய ராவணன், திவாகரன் ஆகியோரின் பார்வை பட்டு திடீர் அமைச்சர்களாக அவதாரம் எடுத்தவர்களின் பட்டியல் முதல்வரின் பார்வைக்குப் போயிருக்கிறது’ என்று உளவுத்துறை வட்டாரத்தில் சுட்டிக் காட்டப்படும் லிஸ்ட் இதோ...</p>.<p><strong>இவர்கள் திவாகரனின் கைப்பாவைகள்... </strong></p>.<p>வைத்திலிங்கம் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை): டெல்டா மாவட்டத்தில் திவாகரனுக்கு ஆல் இன் ஆளாக இருப்பவர். திவாகரனின் தளபதி என்று கூட இவருக்கு பெயர் உண்டு.</p>.<p>ஆர். காமராஜ் (உணவுத் துறை): திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த காமராஜுக்கு எம்.எல்.ஏ. ஸீட் வாங்கிக் கொடுத்து, அவரை அமைச்சர் ஆக்கியது வரை அத்தனையும் திவாகரன் லீலைதான். திவாகரனுக்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிறார்கள்.</p>.<p>கே.டி.ராஜேந்திரபாலாஜி (செய்தி மற்றும் சிறப்பு பணிகள் செயலாக்கத் துறை): நாடார்கள் நிரம்பிய சிவகாசி பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கொடுத்து அவரை அமைச்சரவையிலும் இடம்பெற வைத்தது திவாகரன்தான். திவாகரன் கல்லூரிக்குத் தேவையான நூல்கள், நோட்டு புத்தகங்கள் எல்லாமே ராஜேந்திர பாலாஜியின் தயவால் பிரின்ட் ஆகிறதாம்.</p>.<p><strong>இவங்க ராவணன் ஆளுங்க... </strong></p>.<p>வி. செந்தில் பாலாஜி (போக்குவரத்துத் துறை)</p>.<p>மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக கரூரை வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, ராவணன் தொடர்பு ஏற்பட்டதும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைத்தது. கட்சிக்காரர்களிடம் இருந்த அதிருப்தியையும் தாண்டி அவருக்கு பவர்ஃபுல்லான போக்குவரத்துத் துறையை செந்தில் பாலாஜிக்கு டிக் அடித்தது ராவணன்தான்.</p>.<p>அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை): ராவணனும், கிருஷ்ணமூர்த்தியும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம். அக்ரி படிப்பை முடித்துவிட்டு வேளாண்மை துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் கொண்டு வந்ததும், பதவி வாங்கிக் கொடுத்ததும் ராவணன்தானாம். </p>.<p>செ.தாமோதரன் (வேளாண்மைத் துறை): கோவையில் எத்தனையோ சீனியர்கள் இருக்க அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தாமோதரன் அமைச்சர் ஆனார் என்றால், அதற்கு ஒரே காரணம், ராவணனிடம் அவர் காட்டிய பணிவுதானாம்.</p>.<p>எடப்பாடி கே.பழனிச்சாமி (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை): கட்சியில் இறங்கு முகமாக இருந்த பழனிச்சாமியின் வாழ்க்கை, ராவணன் வருகைக்குப் பிறகுதான் மாறியது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.கே.செல்வராஜ் மூலமாக ராவணனின் தொடர்பு கிடைக்க... எது நடக்க வேண்டுமோ அதுவே நல்லபடியாக நடந்தது.</p>.<p>கே.வி.ராமலிங்கம் (பொதுப்பணித் துறை): 'கொங்கு மண்டலத்தில் எந்த மாவட்டத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்தான். ஈரோட்டுக்கு நீதான் அமைச்சர். உனக்கு பொதுப்பணித் துறை. போய் வேலைகளைப் பார்’ என்று அட்வான்ஸாகவே சொல்லி அனுப்பினாராம், ராவணன்.</p>.<p>எஸ்.பி. வேலுமணி (தொழில்துறை): மாநிலத்தையே கையில் வைத்துக்கொள்ள நினைத்த ராவணன், தன் சொந்த மாவட்டத்தை விட்டுக் கொடுப்பாரா? கடந்த ஐந்து வருடங்களாக ராவணன் வீடே கதி என்று கிடந்ததால்தான், வேலுமணிக்கு அமைச்சர் பதவி.</p>.<p>பி. தங்கமணி (வருவாய்த் துறை): நாமக்கல் மாவட்டச் செயலாளரான தங்கமணிக்கு திருச்சி கலியபெருமாள் மூலமாகத்தான் ராவணன் தொடர்பு கிடைத்தது. 'நான் அம்மாவின் விசுவாசி’ என்று தங்கமணி சொல்லிக் கொண் டாலும், அவர் யாருடைய விசுவாசி என்பது அவரது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.</p>.<p>எஸ்.கோகுல இந்திரா (சுற்றுலாத் துறை): டி.டி.வி.யின் ஆதரவாளரான கோகுல இந்தி ராவை ஜெயிக்க வைத்து அமைச்சராக்கியவர் ராவணன். இடையில் கோகுல இந்திரா மீது சில புகார்கள் கிளம்ப, ராவணன்தான் தலை யிட்டு அவரைச் சுற்றுலாத் துறைக்கு மாற்ற வைத்தாராம்.</p>.<p>எம்.எஸ்.எம்.ஆனந்தன் (இந்து அறநிலையத் துறை): ராவணனைக் கண்டால் அம்மாவுக்கு போடும் கும்பிடை விட இன்னும் சில டிகிரி அதிகமாக வளைந்து வணங்குவாராம் ஆனந்தன். இவர் அமைச்சர் ஆனதில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் தினமும் ராவணன் பெயரில் அர்ச்சனைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.</p>.<p>கே.பி.முனுசாமி (ஊரக வளர்ச்சித்துறை): எடப்பாடி பழனிசாமி மூலமாகத்தான் ராவண னுக்கு அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார் முனுசாமி. 'எந்த காலத் துலயும் நீங்க சொல்றதை நான் தட்ட மாட்டேன். எனக்கு எல்லாமே நீங்கதான்’ என்று முனுசாமி காட்டிய பணிவுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது!</p>.<p>சி.த.செல்லபாண்டியன் (தொழிலாளர் நலத்துறை): தென் மாவட்டத்தில் ராவணனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே அமைச்சர் செல்லபாண்டியன். இவருக்காகவே எஸ்.பி. சண்முக நாதனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விட்டு அந்த பொறுப்பை செல்லபாண்டியனுக்கு வாங்கி கொடுத்தார் ராவணன்.</p>.<p>பா.வளர்மதி ( சமூக நலத்துறை): முன்னாள் அமைச்சராக இருந்தும் கூட இந்த முறை அமைச்சரவையில் வளர்மதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 'நீங்க ராவணனை போய் பாருங்க..’ என்று சசி வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் சொல்ல.. ராவணனை சந்தித்திருக்கிறார். அடுத்த சில வாரங்களிலேயே அமைச்சராகி விட்டார் வளர்மதி. </p>.<p><strong>கே.ராஜாதிருவேங்கடம்</strong></p>
<p><strong>'கா</strong>லம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் இருட்டுக்குள் கிடக்க... அ.தி.மு.க-வின் அதிகார மையங்களாக விளங்கிய ராவணன், திவாகரன் ஆகியோரின் பார்வை பட்டு திடீர் அமைச்சர்களாக அவதாரம் எடுத்தவர்களின் பட்டியல் முதல்வரின் பார்வைக்குப் போயிருக்கிறது’ என்று உளவுத்துறை வட்டாரத்தில் சுட்டிக் காட்டப்படும் லிஸ்ட் இதோ...</p>.<p><strong>இவர்கள் திவாகரனின் கைப்பாவைகள்... </strong></p>.<p>வைத்திலிங்கம் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை): டெல்டா மாவட்டத்தில் திவாகரனுக்கு ஆல் இன் ஆளாக இருப்பவர். திவாகரனின் தளபதி என்று கூட இவருக்கு பெயர் உண்டு.</p>.<p>ஆர். காமராஜ் (உணவுத் துறை): திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த காமராஜுக்கு எம்.எல்.ஏ. ஸீட் வாங்கிக் கொடுத்து, அவரை அமைச்சர் ஆக்கியது வரை அத்தனையும் திவாகரன் லீலைதான். திவாகரனுக்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிறார்கள்.</p>.<p>கே.டி.ராஜேந்திரபாலாஜி (செய்தி மற்றும் சிறப்பு பணிகள் செயலாக்கத் துறை): நாடார்கள் நிரம்பிய சிவகாசி பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கொடுத்து அவரை அமைச்சரவையிலும் இடம்பெற வைத்தது திவாகரன்தான். திவாகரன் கல்லூரிக்குத் தேவையான நூல்கள், நோட்டு புத்தகங்கள் எல்லாமே ராஜேந்திர பாலாஜியின் தயவால் பிரின்ட் ஆகிறதாம்.</p>.<p><strong>இவங்க ராவணன் ஆளுங்க... </strong></p>.<p>வி. செந்தில் பாலாஜி (போக்குவரத்துத் துறை)</p>.<p>மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக கரூரை வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, ராவணன் தொடர்பு ஏற்பட்டதும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைத்தது. கட்சிக்காரர்களிடம் இருந்த அதிருப்தியையும் தாண்டி அவருக்கு பவர்ஃபுல்லான போக்குவரத்துத் துறையை செந்தில் பாலாஜிக்கு டிக் அடித்தது ராவணன்தான்.</p>.<p>அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை): ராவணனும், கிருஷ்ணமூர்த்தியும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம். அக்ரி படிப்பை முடித்துவிட்டு வேளாண்மை துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் கொண்டு வந்ததும், பதவி வாங்கிக் கொடுத்ததும் ராவணன்தானாம். </p>.<p>செ.தாமோதரன் (வேளாண்மைத் துறை): கோவையில் எத்தனையோ சீனியர்கள் இருக்க அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தாமோதரன் அமைச்சர் ஆனார் என்றால், அதற்கு ஒரே காரணம், ராவணனிடம் அவர் காட்டிய பணிவுதானாம்.</p>.<p>எடப்பாடி கே.பழனிச்சாமி (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை): கட்சியில் இறங்கு முகமாக இருந்த பழனிச்சாமியின் வாழ்க்கை, ராவணன் வருகைக்குப் பிறகுதான் மாறியது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.கே.செல்வராஜ் மூலமாக ராவணனின் தொடர்பு கிடைக்க... எது நடக்க வேண்டுமோ அதுவே நல்லபடியாக நடந்தது.</p>.<p>கே.வி.ராமலிங்கம் (பொதுப்பணித் துறை): 'கொங்கு மண்டலத்தில் எந்த மாவட்டத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்தான். ஈரோட்டுக்கு நீதான் அமைச்சர். உனக்கு பொதுப்பணித் துறை. போய் வேலைகளைப் பார்’ என்று அட்வான்ஸாகவே சொல்லி அனுப்பினாராம், ராவணன்.</p>.<p>எஸ்.பி. வேலுமணி (தொழில்துறை): மாநிலத்தையே கையில் வைத்துக்கொள்ள நினைத்த ராவணன், தன் சொந்த மாவட்டத்தை விட்டுக் கொடுப்பாரா? கடந்த ஐந்து வருடங்களாக ராவணன் வீடே கதி என்று கிடந்ததால்தான், வேலுமணிக்கு அமைச்சர் பதவி.</p>.<p>பி. தங்கமணி (வருவாய்த் துறை): நாமக்கல் மாவட்டச் செயலாளரான தங்கமணிக்கு திருச்சி கலியபெருமாள் மூலமாகத்தான் ராவணன் தொடர்பு கிடைத்தது. 'நான் அம்மாவின் விசுவாசி’ என்று தங்கமணி சொல்லிக் கொண் டாலும், அவர் யாருடைய விசுவாசி என்பது அவரது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.</p>.<p>எஸ்.கோகுல இந்திரா (சுற்றுலாத் துறை): டி.டி.வி.யின் ஆதரவாளரான கோகுல இந்தி ராவை ஜெயிக்க வைத்து அமைச்சராக்கியவர் ராவணன். இடையில் கோகுல இந்திரா மீது சில புகார்கள் கிளம்ப, ராவணன்தான் தலை யிட்டு அவரைச் சுற்றுலாத் துறைக்கு மாற்ற வைத்தாராம்.</p>.<p>எம்.எஸ்.எம்.ஆனந்தன் (இந்து அறநிலையத் துறை): ராவணனைக் கண்டால் அம்மாவுக்கு போடும் கும்பிடை விட இன்னும் சில டிகிரி அதிகமாக வளைந்து வணங்குவாராம் ஆனந்தன். இவர் அமைச்சர் ஆனதில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் தினமும் ராவணன் பெயரில் அர்ச்சனைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.</p>.<p>கே.பி.முனுசாமி (ஊரக வளர்ச்சித்துறை): எடப்பாடி பழனிசாமி மூலமாகத்தான் ராவண னுக்கு அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார் முனுசாமி. 'எந்த காலத் துலயும் நீங்க சொல்றதை நான் தட்ட மாட்டேன். எனக்கு எல்லாமே நீங்கதான்’ என்று முனுசாமி காட்டிய பணிவுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது!</p>.<p>சி.த.செல்லபாண்டியன் (தொழிலாளர் நலத்துறை): தென் மாவட்டத்தில் ராவணனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே அமைச்சர் செல்லபாண்டியன். இவருக்காகவே எஸ்.பி. சண்முக நாதனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விட்டு அந்த பொறுப்பை செல்லபாண்டியனுக்கு வாங்கி கொடுத்தார் ராவணன்.</p>.<p>பா.வளர்மதி ( சமூக நலத்துறை): முன்னாள் அமைச்சராக இருந்தும் கூட இந்த முறை அமைச்சரவையில் வளர்மதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 'நீங்க ராவணனை போய் பாருங்க..’ என்று சசி வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் சொல்ல.. ராவணனை சந்தித்திருக்கிறார். அடுத்த சில வாரங்களிலேயே அமைச்சராகி விட்டார் வளர்மதி. </p>.<p><strong>கே.ராஜாதிருவேங்கடம்</strong></p>