Published:Updated:
மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 160 அடியில் மணல் சிற்பம்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே 160 அடி நீளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது
மாமல்லபுரம் கடற்கரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களில் 50 மணல் சிற்பக் கலைஞர்களால் 50 டன் மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சிற்பம். திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க-வினர் ஏற்பாட்டில் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிரமாண்ட சிற்பம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.