சென்னை, ஜூலை 22,2011
இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 12-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதிமுக தீர்மானித்துள்ளது. ##~~##
மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
* பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு.
*அதிமுக அரசு, தன் போக்கை மாற்றிக்கொண்டு, சமச்சீர் கல்வியை, சமநிலைக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
* தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம்
* சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும்.
*சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி தலைநகர் தில்லியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.