<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"><tbody><tr><td class="blue_color"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">சாதிப் பெரும்பான்மை வாதம் என்ற ஆபத்து!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>''சா</strong>திவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் செய்ய வேண்டும்!'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்துவிட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பாலான கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள காரணத்தால், மத்திய அரசும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இதை ஏற்காவிட்டால், 'பிற்படுத்தப்பட்டோரின் எதிரி' என்று வர்ணிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக காங்கிரஸ் அரசும் இதற்கு ஒப்புக்கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்னையை இப்போது அமைச்சர்களின் குழு ஒன்றின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லை. எம்.எஸ்.கில், கபில்சிபல், ஆனந்த் சர்மா ஆகியோர் </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியதாகவும் செய்திகள். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ, தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இதைச் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது. </p> <p>இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட ஒரு நடைமுறை. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பது ஏறத்தாழ 1871-ல் இருந்து நடந்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மத்திய அரசு இதைச் செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1931-ம் ஆண்டு வரை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. அப்போது சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதா? இல்லையா? என்று மத்திய அரசு ஆலோசித்தது. அப்படிக் கணக்கெடுப்பதால், மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவை இல்லை என்று முடிவு செய்த மத்திய அரசு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்றும் மற்றவர்களை அவ்வாறு கணக்கெடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது. அந்த நடைமுறைதான் இதுவரை தொடர்கிறது. ஆனால், அதை மாற்ற வேண்டும். மீண்டும் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. </p> <p>அண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதுபற்றி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?' எனக் கேட்டது. அப்போது முதல் இந்தக் கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கிவிட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அது மேலும் தீவிரமடைந்துவிட்டது. தூங்கிக்கிடந்த பூதம் ஒன்றை உசுப்பிவிட்ட கதையாக இப்போது இந்தக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. </p> <p>1955-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியது. 2,399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்ட அந்த அறிக்கை, அவற்றுள் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் குறிப்பிட்டது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமோ, எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் மக்கள்தொகை அல்லாது இந்தியாவில் 54 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வதாகவும், 3,743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனவும் கூறியது.</p> <p>மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னால், பிற்படுத்தப்பட்டவரின் மக்கள் தொகையைச் சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் இருக்கும் எண்ணிக்கை பலம்கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோரிக்கையை அதிகமாக வலியுறுத்துகின்றனர். லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் இதை வலியுறுத்துவது அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.</p> <p>சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்பது இடஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்காக மட்டும் அல்ல. அது, சமூக நலத் திட்டங்களுக்கான நிதி </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>ஒதுக்கப்படுவதோடும் தொடர்புடையது. இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சமூக நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான நிதியை அந்தச் சமூகத்தினரின் மக்கள்தொகைக்கு ஏற்பவே ஒதுக்க வேண்டும். 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் யூகமாக ஒரு விழுக்காட்டை கற்பனைசெய்து அதற்கேற்பத்தான் இப்போது நிதி ஒதுக்குகிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான மக்கள்தொகை சரியாகத் தெரிந்தால், அதன் அடிப்படையில் தமக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த சமூகத்தினர் எதிர்பார்க்கிறார்கள். </p> <p>பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே இருக்கின்ற எண்ணிக்கை பலம் குறைந்த சில சாதிகளும் தமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. பெரிய சாதியினரோடு இடஒதுக்கீட்டு உரிமைக்காகப் போராடி, தமது பங்கை அவர்கள் பெறுவது சாத்தியம் இல்லை. எனவே, எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு தொகுப்பை ஏற்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், நரிக்குறவர், நாவிதர் முதலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தமக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கேட்கின்றனர். அதற்காக, சாதிவாரி இடஒதுக்கீடு அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களிடையேயும் இதுதான் நிலை. அவர்களிலும் எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால், தம்மைச் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்து உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்றனர். அண்மையில், அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு இதற்கு ஒரு சான்று.</p> <p>சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதால், சில நன்மைகள் இருந்தபோதிலும், சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவ உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப இருந்தாலும், அது பிரதிநிதித்துவம் ஆகாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும், தீண்டாமை என்னும் கொடுமைக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாக்கப்படுவதை உணர்ந்து அதற்கான இழப்பீடாகவும்தான் அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி, பொருளாதாரம் ஆகிய தளங்களில் பிற்படுத்தப்பட்டோரும் இதேவிதமான புறக்கணிப்புகளுக்கு ஆளானபோதிலும், சமூகத் தளத்தில் அவர்கள் அத்தகைய இழிநிலையை அனுபவிப்பதில்லை. எனவே, இந்த இரண்டு பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டை ஒரேவிதமாகப் பார்ப்பதில் பிரச்னை இருக்கிறது.</p> <p>இடஒதுக்கீட்டைச் சர்வரோக நிவாரணியாகக் கருதுகிற ஒரு போக்கு நம்மிடையே அதிகரித்து வருகிறது. இட ஒதுக்கீட்டைக்கொண்டு இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது. அது மட்டுமின்றி, இப்போது அளிக்கப்படும் இடஒதுக்கீடானது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், ஒரு சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே அதை அனுபவிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. மண்டல் குழு பரிந்துரைகளை ஒட்டி உச்ச நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட புகழ்பெற்ற தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று வரை யறுத்ததை நாம் அறிவோம். அது மட்டுமின்றி, இந்த இடஒதுக்கீடு என்பது அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இன்று எல்லாமே தனியார்மயம் ஆகிவரும் சூழலில், இதற்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கும் என்பதும் ஒரு கேள்விதான். </p> <p>சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்றம் அத்துடன் இன்னொருகருத்தையும் சொன்னது. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். ஒருவேளை, சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால், அந்த விவரங்கள் வெளியானவுடன் நிச்சயமாக அடுத்த கோரிக்கையாக, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என அதை முன்னிலும் வலுவாக முன்வைக்கப்படும்.</p> <p>சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை இல்லை என்று சொல்பவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள் 'இது மக்களிடையே பிரிவினை உணர்வை அதிகமாக்கிவிடும், இது சிறிய சாதிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்' என்கிறார்கள். இரண்டாவது காரணத்தை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கூறினார். மக்களிடையே இப்போது சாதி உணர்வே இல்லை என்று கூறிவிட முடியாது. ஏற்கெனவே, இந்தியச் சமூகம் சாதிகளால்தான் பிரிந்துகிடக்கிறது. அதனால்தான், அம்பேத்கர், 'இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கு இருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்' என்று சாடினார். ஆனால், சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. இந்தியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு சாதிகள் இல்லை என்றே தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் மெக்கன்ஸி என்ற வெள்ளைக்கார அதிகாரியால் தொகுக்கப்பட்ட வலங்கை, இடங்கை சாதிகளின் சரித்திரம் என்ற நூலில் 200 சாதிகளுக்கும் குறைவாகவே தமிழ்நாட்டுச் சாதிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சாதி உணர்வு அதிகரிப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லலாம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அந்த சாதி உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. </p> <p>சிறிய சாதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. ஏற்கெனவே, எண்ணிக்கை பலம்கொண்ட சாதிகள் இந்த நாட்டை ஆள்வதற்குத் தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன. நமது தேர்தல் அமைப்பு முறை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும். அதிக எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுகிறவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுகின்றனர். எனவே, பெரும்பான்மை வாதம் என்பது இங்கு எளிதில் தலைதூக்கக்கூடிய சூழல் உள்ளது. அப்படித்தான் மதப் பெரும்பான்மை வாதம் இந்திய அரசியலில் தீவிரம் பெற்றது. அதனால், ஏற்பட்ட சீரழிவுகளைக் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துவிட்டோம். இப்போது, சாதிப்பெரும்பான்மை வாதம் அதேபோல தலைதூக்கக்கூடிய ஆபத்து இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படக்கூடும். மதப்பெரும்பான்மை வாதத்தைவிட சாதிப்பெரும்பான்மை வாதம் ஆபத்தானதாகும். </p> <p>அப்படியானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா? வேண்டாமா? அதற்கு என்னதான் பதில் என்ற கேள்வி எழலாம். 1881 மற்றும் 1891-ம் ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்தபோது, தமிழ்மக்களை 'சாதியற்ற திராவிடர்கள்' எனப் பதிவுசெய்துகொள்ளுமாறு அயோத்திதாசப் பண்டிதர் வற்புறுத்தினார். 'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்றபோதிலும் 'அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' எனக் கேட்டார் பாரதி. அவர்களைப்போன்ற சீர்திருத்தவாதிகள் இன்று இல்லை. மேலும் மேலும் சாதிவெறிகொண்டவர்களாகவே மக்கள் மாற்றப் படுகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா என்பதைவிட சாதி வேண்டுமா என்ற கேள்வியே முக்கியமானது. அந்தக் கேள்வியை முன்வைத்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்!</p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="brown_color_bodytext" width="100%"><tbody><tr><td class="blue_color"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">சாதிப் பெரும்பான்மை வாதம் என்ற ஆபத்து!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tbody><tr><td bgcolor="#990000"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="10"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"> <tbody><tr> <td class="big_block_color_bodytext" valign="top"> <p><strong>''சா</strong>திவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் செய்ய வேண்டும்!'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்துவிட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பாலான கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள காரணத்தால், மத்திய அரசும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இதை ஏற்காவிட்டால், 'பிற்படுத்தப்பட்டோரின் எதிரி' என்று வர்ணிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக காங்கிரஸ் அரசும் இதற்கு ஒப்புக்கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்னையை இப்போது அமைச்சர்களின் குழு ஒன்றின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. </p><p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p align="center"> </p><p>சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லை. எம்.எஸ்.கில், கபில்சிபல், ஆனந்த் சர்மா ஆகியோர் </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியதாகவும் செய்திகள். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ, தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இதைச் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது. </p> <p>இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட ஒரு நடைமுறை. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பது ஏறத்தாழ 1871-ல் இருந்து நடந்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மத்திய அரசு இதைச் செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1931-ம் ஆண்டு வரை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. அப்போது சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதா? இல்லையா? என்று மத்திய அரசு ஆலோசித்தது. அப்படிக் கணக்கெடுப்பதால், மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவை இல்லை என்று முடிவு செய்த மத்திய அரசு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்றும் மற்றவர்களை அவ்வாறு கணக்கெடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது. அந்த நடைமுறைதான் இதுவரை தொடர்கிறது. ஆனால், அதை மாற்ற வேண்டும். மீண்டும் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. </p> <p>அண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதுபற்றி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?' எனக் கேட்டது. அப்போது முதல் இந்தக் கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கிவிட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அது மேலும் தீவிரமடைந்துவிட்டது. தூங்கிக்கிடந்த பூதம் ஒன்றை உசுப்பிவிட்ட கதையாக இப்போது இந்தக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. </p> <p>1955-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியது. 2,399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்ட அந்த அறிக்கை, அவற்றுள் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் குறிப்பிட்டது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமோ, எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் மக்கள்தொகை அல்லாது இந்தியாவில் 54 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வதாகவும், 3,743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனவும் கூறியது.</p> <p>மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னால், பிற்படுத்தப்பட்டவரின் மக்கள் தொகையைச் சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் இருக்கும் எண்ணிக்கை பலம்கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோரிக்கையை அதிகமாக வலியுறுத்துகின்றனர். லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் இதை வலியுறுத்துவது அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.</p> <p>சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்பது இடஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்காக மட்டும் அல்ல. அது, சமூக நலத் திட்டங்களுக்கான நிதி </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>ஒதுக்கப்படுவதோடும் தொடர்புடையது. இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சமூக நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான நிதியை அந்தச் சமூகத்தினரின் மக்கள்தொகைக்கு ஏற்பவே ஒதுக்க வேண்டும். 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் யூகமாக ஒரு விழுக்காட்டை கற்பனைசெய்து அதற்கேற்பத்தான் இப்போது நிதி ஒதுக்குகிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான மக்கள்தொகை சரியாகத் தெரிந்தால், அதன் அடிப்படையில் தமக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த சமூகத்தினர் எதிர்பார்க்கிறார்கள். </p> <p>பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே இருக்கின்ற எண்ணிக்கை பலம் குறைந்த சில சாதிகளும் தமக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. பெரிய சாதியினரோடு இடஒதுக்கீட்டு உரிமைக்காகப் போராடி, தமது பங்கை அவர்கள் பெறுவது சாத்தியம் இல்லை. எனவே, எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு தொகுப்பை ஏற்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், நரிக்குறவர், நாவிதர் முதலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தமக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கேட்கின்றனர். அதற்காக, சாதிவாரி இடஒதுக்கீடு அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களிடையேயும் இதுதான் நிலை. அவர்களிலும் எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால், தம்மைச் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்து உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்றனர். அண்மையில், அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு இதற்கு ஒரு சான்று.</p> <p>சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதால், சில நன்மைகள் இருந்தபோதிலும், சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவ உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப இருந்தாலும், அது பிரதிநிதித்துவம் ஆகாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும், தீண்டாமை என்னும் கொடுமைக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாக்கப்படுவதை உணர்ந்து அதற்கான இழப்பீடாகவும்தான் அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்வி, பொருளாதாரம் ஆகிய தளங்களில் பிற்படுத்தப்பட்டோரும் இதேவிதமான புறக்கணிப்புகளுக்கு ஆளானபோதிலும், சமூகத் தளத்தில் அவர்கள் அத்தகைய இழிநிலையை அனுபவிப்பதில்லை. எனவே, இந்த இரண்டு பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டை ஒரேவிதமாகப் பார்ப்பதில் பிரச்னை இருக்கிறது.</p> <p>இடஒதுக்கீட்டைச் சர்வரோக நிவாரணியாகக் கருதுகிற ஒரு போக்கு நம்மிடையே அதிகரித்து வருகிறது. இட ஒதுக்கீட்டைக்கொண்டு இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது. அது மட்டுமின்றி, இப்போது அளிக்கப்படும் இடஒதுக்கீடானது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், ஒரு சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே அதை அனுபவிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. மண்டல் குழு பரிந்துரைகளை ஒட்டி உச்ச நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட புகழ்பெற்ற தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று வரை யறுத்ததை நாம் அறிவோம். அது மட்டுமின்றி, இந்த இடஒதுக்கீடு என்பது அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இன்று எல்லாமே தனியார்மயம் ஆகிவரும் சூழலில், இதற்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கும் என்பதும் ஒரு கேள்விதான். </p> <p>சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்றம் அத்துடன் இன்னொருகருத்தையும் சொன்னது. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். ஒருவேளை, சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால், அந்த விவரங்கள் வெளியானவுடன் நிச்சயமாக அடுத்த கோரிக்கையாக, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என அதை முன்னிலும் வலுவாக முன்வைக்கப்படும்.</p> <p>சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை இல்லை என்று சொல்பவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள் 'இது மக்களிடையே பிரிவினை உணர்வை அதிகமாக்கிவிடும், இது சிறிய சாதிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்' என்கிறார்கள். இரண்டாவது காரணத்தை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கூறினார். மக்களிடையே இப்போது சாதி உணர்வே இல்லை என்று கூறிவிட முடியாது. ஏற்கெனவே, இந்தியச் சமூகம் சாதிகளால்தான் பிரிந்துகிடக்கிறது. அதனால்தான், அம்பேத்கர், 'இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கு இருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்' என்று சாடினார். ஆனால், சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. இந்தியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு சாதிகள் இல்லை என்றே தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் மெக்கன்ஸி என்ற வெள்ளைக்கார அதிகாரியால் தொகுக்கப்பட்ட வலங்கை, இடங்கை சாதிகளின் சரித்திரம் என்ற நூலில் 200 சாதிகளுக்கும் குறைவாகவே தமிழ்நாட்டுச் சாதிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சாதி உணர்வு அதிகரிப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லலாம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அந்த சாதி உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. </p> <p>சிறிய சாதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. ஏற்கெனவே, எண்ணிக்கை பலம்கொண்ட சாதிகள் இந்த நாட்டை ஆள்வதற்குத் தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன. நமது தேர்தல் அமைப்பு முறை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும். அதிக எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுகிறவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுகின்றனர். எனவே, பெரும்பான்மை வாதம் என்பது இங்கு எளிதில் தலைதூக்கக்கூடிய சூழல் உள்ளது. அப்படித்தான் மதப் பெரும்பான்மை வாதம் இந்திய அரசியலில் தீவிரம் பெற்றது. அதனால், ஏற்பட்ட சீரழிவுகளைக் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துவிட்டோம். இப்போது, சாதிப்பெரும்பான்மை வாதம் அதேபோல தலைதூக்கக்கூடிய ஆபத்து இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படக்கூடும். மதப்பெரும்பான்மை வாதத்தைவிட சாதிப்பெரும்பான்மை வாதம் ஆபத்தானதாகும். </p> <p>அப்படியானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா? வேண்டாமா? அதற்கு என்னதான் பதில் என்ற கேள்வி எழலாம். 1881 மற்றும் 1891-ம் ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்தபோது, தமிழ்மக்களை 'சாதியற்ற திராவிடர்கள்' எனப் பதிவுசெய்துகொள்ளுமாறு அயோத்திதாசப் பண்டிதர் வற்புறுத்தினார். 'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்றபோதிலும் 'அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' எனக் கேட்டார் பாரதி. அவர்களைப்போன்ற சீர்திருத்தவாதிகள் இன்று இல்லை. மேலும் மேலும் சாதிவெறிகொண்டவர்களாகவே மக்கள் மாற்றப் படுகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா என்பதைவிட சாதி வேண்டுமா என்ற கேள்வியே முக்கியமானது. அந்தக் கேள்வியை முன்வைத்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்!</p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>