<p>இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக்கொண்டது இந்தியா.</p>.<p>ஜெனீவா ஐ.நா. சபைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது கருத்து தெரிவித்த இந்தியப் </p>.<p>பிரதிநிதி திலீப் சின்கா, ''இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை இப்போது வேண்டாம் என்பதால், இந்தியா இந்த வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறது'' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு, அனைத்து நாட்டு பிரதிநிதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>.<p>கூட்டம் முடிந்ததும் இலங்கையின் பிரதிநிதி ரவிநாத ஆரிய சின்கா வெளிப்படையாக இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவுக்குக் கைகுலுக்கினார். இந்த நிலையில் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவைச் சந்தித்து சில கேள்விகளை எழுப்பினோம்.</p>.<p><span style="color: #0000ff">''ஈழத்தில் நடந்த போரில் இலங்கையோடு இந்தியாவும் பங்கு பெற்றதனால்தான், ஐ.நா-வில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட 'சர்வதேச சுதந்திர விசாரணை’யை இந்தியா ஆதரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே?'' </span></p>.<p>''மற்ற பிரச்னைகளோடு இதனை ஒப்பிடக் கூடாது. குறிப்பிட்ட இந்த முடிவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான இந்தியாவின் முடிவு. சர்வதேச சுதந்திர விசாரணையைத் தள்ளிப்போட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கருத்து. மற்றபடி எதனையும் நான் சொல்ல விரும்பவில்லை.''</p>.<p><span style="color: #0000ff">''அப்படி எனில், கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன நீதியை இந்திய அரசு கொடுக்கப் போகிறது?'' </span></p>.<p>''அதை இந்தியா கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவை எங்கு, எப்படி கவனிக்க வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்து முடிவுகள் எடுக்கும். ஐ.நா. ஆணையாளர் அவருக்குக் கிடைத்த தகவலின்படி செயல்படுகிறார். அப்படித்தான் இந்தியாவும்.''</p>.<p><span style="color: #0000ff">''அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில், ஈழப் போரில் இந்தியாவின் ராணுவப் பங்களிப்பை விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே?'' </span></p>.<p>''அதற்குள் வர நான் விரும்பவில்லை. அது இந்த மனித உரிமைகள் சபையில் விவாதிக்கப்படவும் இல்லை.''</p>.<p><span style="color: #0000ff">''இந்தியா இந்தப் போரில் பங்குப் பெற்றதால்தான் குறிப்பாக 'சர்வதேச விசாரணை’யை மட்டும் வேண்டாம் என்கிறதா?'' </span></p>.<p>''அப்படியில்லை. நீங்கள் கடந்த காலங்களில் ஐ.நா-வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தீர்கள் என்றால் புரியும். இந்தியா எந்த நாட்டுக்கு எதிரான சர்வதேச விசாரணையையும் ஆதரித்தது இல்லை. இதுதான் பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. அதே கொள்கைதான் இலங்கை விஷயத்திலும் உள்ளது.''</p>.<p><span style="color: #0000ff">''அப்படி எனில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, 700 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்ற பின்பும் மாறாதா?'' </span></p>.<p>''இதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டியது நான் அல்ல.''</p>.<p>- ஜெனீவாவிலிருந்து,</p>.<p><span style="color: #0000ff">மகா.தமிழ்ப் பிரபாகரன்</span></p>
<p>இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக்கொண்டது இந்தியா.</p>.<p>ஜெனீவா ஐ.நா. சபைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது கருத்து தெரிவித்த இந்தியப் </p>.<p>பிரதிநிதி திலீப் சின்கா, ''இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை இப்போது வேண்டாம் என்பதால், இந்தியா இந்த வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறது'' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு, அனைத்து நாட்டு பிரதிநிதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>.<p>கூட்டம் முடிந்ததும் இலங்கையின் பிரதிநிதி ரவிநாத ஆரிய சின்கா வெளிப்படையாக இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவுக்குக் கைகுலுக்கினார். இந்த நிலையில் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவைச் சந்தித்து சில கேள்விகளை எழுப்பினோம்.</p>.<p><span style="color: #0000ff">''ஈழத்தில் நடந்த போரில் இலங்கையோடு இந்தியாவும் பங்கு பெற்றதனால்தான், ஐ.நா-வில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட 'சர்வதேச சுதந்திர விசாரணை’யை இந்தியா ஆதரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே?'' </span></p>.<p>''மற்ற பிரச்னைகளோடு இதனை ஒப்பிடக் கூடாது. குறிப்பிட்ட இந்த முடிவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான இந்தியாவின் முடிவு. சர்வதேச சுதந்திர விசாரணையைத் தள்ளிப்போட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கருத்து. மற்றபடி எதனையும் நான் சொல்ல விரும்பவில்லை.''</p>.<p><span style="color: #0000ff">''அப்படி எனில், கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன நீதியை இந்திய அரசு கொடுக்கப் போகிறது?'' </span></p>.<p>''அதை இந்தியா கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவை எங்கு, எப்படி கவனிக்க வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்து முடிவுகள் எடுக்கும். ஐ.நா. ஆணையாளர் அவருக்குக் கிடைத்த தகவலின்படி செயல்படுகிறார். அப்படித்தான் இந்தியாவும்.''</p>.<p><span style="color: #0000ff">''அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில், ஈழப் போரில் இந்தியாவின் ராணுவப் பங்களிப்பை விசாரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே?'' </span></p>.<p>''அதற்குள் வர நான் விரும்பவில்லை. அது இந்த மனித உரிமைகள் சபையில் விவாதிக்கப்படவும் இல்லை.''</p>.<p><span style="color: #0000ff">''இந்தியா இந்தப் போரில் பங்குப் பெற்றதால்தான் குறிப்பாக 'சர்வதேச விசாரணை’யை மட்டும் வேண்டாம் என்கிறதா?'' </span></p>.<p>''அப்படியில்லை. நீங்கள் கடந்த காலங்களில் ஐ.நா-வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தீர்கள் என்றால் புரியும். இந்தியா எந்த நாட்டுக்கு எதிரான சர்வதேச விசாரணையையும் ஆதரித்தது இல்லை. இதுதான் பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. அதே கொள்கைதான் இலங்கை விஷயத்திலும் உள்ளது.''</p>.<p><span style="color: #0000ff">''அப்படி எனில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, 700 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்ற பின்பும் மாறாதா?'' </span></p>.<p>''இதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டியது நான் அல்ல.''</p>.<p>- ஜெனீவாவிலிருந்து,</p>.<p><span style="color: #0000ff">மகா.தமிழ்ப் பிரபாகரன்</span></p>