திமுக உட்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துவருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முடித்த கையோடு உட்கட்சித் தேர்தலுக்கான பணியில் இறங்கியுள்ளது தி.மு.க. தற்போது நகரத் தலைவர், பேரூர் கழகப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றுவருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கொங்கு மண்டலத்தில்தான் அதிக பிரச்னை வெடித்தது. இப்போது உட்கட்சித் தேர்தலின்போதும் கொங்கு திமுக தகிக்கத் தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் திமுக நகரச் செயலாளராக இருப்பவர் தனசேகர். தற்போது உட்கட்சித் தேர்தலில் நகரச் செயலாளர் பதவிக்கு தனசேகருடன், நகர இளைஞரணி அமைப்பாளர், நகர்மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கட்சித் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவுசெய்யப்பட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அந்த வகையில் தாராபுரம் நகரச் செயலாளர் பதவியும் இளைஞரணிக்குக் கொடுக்கப்படுவதாக மேலிடத்திலிருந்து தகவல் கசிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் தனசேகரும் அவரின் ஆதரவாளரகளும் அப்செட் ஆகினர். இதையடுத்து தாராபுரம் நகரத்திலுள்ள 82 கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். மேலும் 18 கவுன்சிலர்கள் தனசேகரையே மீண்டும் நகரச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கடிதம் வழங்கியுள்ளனர்.

இது குறித்து தனசேகரின் ஆதரவாளர்கள் கூறுகையில், “இவர்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகரச் செயலாளராக இருக்கிறார். இங்கு கட்சியை நன்கு வளர்த்திருக்கிறார். அவருக்குத்தான் பெரும்பான்மையும் இருக்கிறது.
திடீரென்று உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை எனச் சொல்லி ஒருவருக்கு நகரச் செயலாளர் பதவி கொடுக்கப்போவதாகச் சொல்கின்றனர். இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி உழைப்பவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மீண்டும் தனசேகருக்கே நகரச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்” என்றனர். இதேபோல, திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுக உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்து வெடித்துவருகிறது.