குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், "பா.ஜ.க-வில் நல்ல விஷயங்கள் உள்ளன. அதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். பா.ஜ.க தலைவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பதாலும், சரியான முடிவுகளை எடுப்பதாலும் பாஜக பலமாக உள்ளது.

பா.ஜ.க-வுக்கு நல்ல வலுவான அடித்தளம் உள்ளது. அவர்கள் சக்திவாய்ந்தவர்கள். எதிரிகளை ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நம் எதிர்த்துப் போராட அந்த திசையில் செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குஜராத்தில் எதிர்க்கட்சியாக உள்ள எங்களால் மக்கள் குரலை உயர்த்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துப் போராட வேண்டும். எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் மக்கள் வேறு விருப்பங்களைத் தேடுவார். காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தான் பிரச்னை.

குஜராத்தில் தனிப்பட்ட எந்தத் தலைவரிடமும் எனக்குப் பிரச்னை இல்லை. தலைமை யாரையும் வேலை செய்ய விடாது. யாரேனும் வேலை செய்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. கட்சித் தலைமையிடம் எனது கவலையைத் தெரிவித்துள்ளேன். வீட்டில் உங்களுக்குப் பிடிக்காத போதும் உங்கள் அப்பா அம்மாவுடன் மகிழ்ச்சியாக இல்லை என்பது வெளிப்படுத்தி விட்டீர்கள்.
நான் உண்மையைச் சொல்லுகிறேன். அதனால் கட்சியை விட்டு விலகுவதாக நினைக்க வேண்டாம். பாஜகவில் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணம் எனது மனதில் எப்போதும் ஏற்பட்டதில்லை. நாங்கள் பகவான் ராமரை நம்புகிறோம். என் தந்தை நினைவு நாளில் பகவத்கீதையை 4000 பிரதிகளை விநியோகிக்க உள்ளேன். நான் இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் தலைமை குறித்த ஹர்திக் படேல் கருத்தால் குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.